News August 27, 2024

தொடரும் அத்துமீறல்: தமிழக மீனவர்கள் 8 பேர் கைது

image

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 8 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த அவர்கள், தனுஷ்கோடி கடல் பகுதிக்கும், தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, மீனவர்கள் சென்ற விசைப் படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, விசாரணைக்காக அவர்களை மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றுள்ளது.

Similar News

News November 19, 2025

இன்றும் என்கவுன்ட்டர்.. 7 மாவோயிஸ்ட்கள் பலி

image

ஆந்திரா – ஒடிசா எல்லை பகுதியில் இன்று மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக, ஆந்திரா உளவுத்துறை ADGP மகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்கள் இன்று கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் <<18318822>>மாவோயிஸ்ட்<<>> முக்கிய தளபதி ஹிட்மா உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News November 19, 2025

சற்றுமுன்: விலை ₹3,000 உயர்ந்தது

image

கடந்த 5 நாள்களாக தொடர்ந்து சரிந்து வந்த வெள்ளியின் விலை இன்று(நவ.19) கிராமுக்கு ₹3-ம், கிலோவுக்கு ₹3,000-ம் உயர்ந்துள்ளது. சென்னையில் 1 கிராம் வெள்ளி ₹173-க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,73, 000-க்கும் விற்பனையாகிறது. இது குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, வரும் நாள்களில் வெள்ளியின் விலையில் கணிசமான ஏற்றம் இருக்கும் எனக் கூறியுள்ளனர்.

News November 19, 2025

கண்களை பாதுகாக்கும் 7 நட்ஸ் & உலர் பழங்கள்!

image

இன்றைய சூழலில் அனைவரும் செல்போன், கம்யூட்டர்களை அதிகம் பயன்படுத்துவதால் கண் தொடர்பான பிரச்னைகள் அதிகம் ஏற்படுகின்றன. இந்நிலையில், அதற்கு இடம் கொடுக்காமல் கண்களை பாதுகாக்க, பார்வை திறனை மேம்படுத்த இந்த 7 நட்ஸ் மற்றும் உலர் பழங்கள் உட்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன என்பதை அறிய மேலே SWIPE பண்ணுங்க.

error: Content is protected !!