News August 14, 2024
அதானி ஊழலில் பிரதமர் மோடிக்கு தொடர்பு: கார்கே

அதானி நிறுவன முறைகேடு புகாரில் சிக்கியுள்ள செபி தலைவர் மதாபி புச் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர், அதானி முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார். அதானி ஊழலில் பிரதமர் மோடிக்கும் தொடர்பு உள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
Similar News
News October 23, 2025
தமிழ் நடிகர் காலமானார்.. முதல் ஆளாக ஓடிய பிரபல நடிகர்

நடிகரும், ஆச்சி மனோரமாவின் மகனுமான பூபதி காலமானார். அவர் இறந்த செய்தியை கேட்டவுடன் நடிகர் கார்த்தி முதல் ஆளாக நேரில் சென்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவரை தொடர்ந்து நடிகர் கருணாஸ், பூச்சி முருகன் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும், சினிமா பிரபலங்கள் அஞ்சலி செலுத்திய பிறகு நாளை உடல் அடக்கம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
News October 23, 2025
ரயில்வே தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு

அசாமில் உள்ள கோக்ரஜார் ரயில் நிலையத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில், ரயில் தண்டவாளம் மர்மநபர்களால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அந்த பாதையில் காலை 8 மணி வரை ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. உடனடியாக அதிகாரிகள் பாதையை சீரமைத்ததால், மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்படாத நிலையில், அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
News October 23, 2025
மரங்கள் ஒன்றோடு ஒன்று பேசும்; எப்படி தெரியுமா?

மரத்தின் வேர்கள் mycorrhizal பூஞ்சைகள் மூலம் பூமியின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு மரத்தின் இலையை பூச்சிகள் சாப்பிட்டு அழித்தால், மரத்தின் வேரில் இருந்து ரசாயன சிக்னல்கள் வெளியேறும். பூஞ்சைகள் இந்த சிக்னலை மற்ற மரங்களுக்கு கடத்தும். இந்த சிக்னல்களை புரிந்துகொள்ளும் பிற மரங்கள் தங்கள் மரத்தின் இலைகள் பூச்சிகள் சாப்பிடாத படி கசப்பாக மாற்றும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. SHARE.