News June 19, 2024

நீட் முறைகேட்டில் அமைச்சருக்கு தொடர்பு அம்பலம்

image

நீட் முறைகேட்டில் சிக்கிய மாணவர் ஒருவருக்கு பீகார் அமைச்சர் உதவியது அம்பலமாகியுள்ளது. பாட்னாவில் நீட் தேர்வு எழுதிய அனுராக் என்ற மாணவர், அமைச்சர் ஒருவரின் பரிந்துரையின்பேரில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். வினாத்தாள் கசிவு புகாரில் கைது செய்யப்பட்ட சிக்கந்தர், அமைச்சர் பரிந்துரை பேரில் மாணவரை அழைத்து சென்றுள்ளார். இதுதொடர்பாக அனுராக்கை வரவழைத்து பாட்னா போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Similar News

News March 6, 2026

இதுதான் என்னுடைய கனவு.. ஸ்டாலின் சொல்கிறார்

image

TN முழுவதுமே சமத்துவபுரமாக மாறவேண்டும், எங்கும் சமூகநீதி ஒலிக்க வேண்டும், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே தன்னுடைய கனவு என CM ஸ்டாலின் கூறியுள்ளார். இவை அனைத்தும் பெற, மாவட்ட வாரியாக தனித்தனி செயல்திட்டம் வகுக்கப்படும் என்ற அவர், இது மு.க.ஸ்டாலின் கொடுக்கும் உறுதிமொழி என்றார். மேலும், TN-ன் இந்த வளர்ச்சி பயணத்தில் யாரையும் பின்தங்க விடமாட்டோம் என்றும் அவர் கூறினார்.

News March 6, 2026

UPSC தேர்வு முடிவுகள் வெளியானது

image

நாடு முழுவதும் UPSC நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வில் 958 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், அனுஜ் அக்னிஹோத்ரி என்பவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து ராஜேஸ்வரி சுவே இரண்டாம் இடத்தையும், அகன்ஷ் துல் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். UPSC தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை <>கிளிக்<<>> பண்ணுங்க.

News March 6, 2026

BREAKING: ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவிப்பு

image

10, +12 பொதுத்தேர்வு கண்காணிப்பாளராக செல்லும் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆசிரியர்கள் தேர்வு மையங்களுக்குள் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வர்களுக்கு வழங்கியது போக, மீதமுள்ள வினாத்தாள்களை உறையினுள் வைத்து சீலிட்டு தவறாமல் துறை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!