News March 17, 2024
கடலூரில் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம்

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பாராளுமன்றத் தேர்தல் சம்பந்தமான அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு கலெக்டர் அருண் தங்கராஜ் தலைமை தாங்கினார்.இதில் பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து கலெக்டர் விளக்கி பேசினார்.இதில் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மாவட்டம் வருவாய் அலுவலர் ராஜசேகரன் கலந்து கொண்டனர்.
Similar News
News January 22, 2026
கடலூர்: ATM-யில் பணம் எடுப்போர் கவனத்திற்கு!

கடலூர் மக்களே ATM-யில் பணம் எடுக்கும் போது, பணம் வரமாலே பணம் எடுத்ததாக உங்கள் மொபைலுக்கு மெசேஜ் வருகிறதா? கவலைவேண்டாம். அதற்கான ரசித்து இருந்தாலே போதும், அருகில் உள்ள உங்களது வாங்கி கிளைக்கு சென்று புகாரளிக்கலாம். பின்னர் நீங்கள் புகாரளித்த அடுத்த 5 வேலை நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். அப்படி தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.100 சேர்த்து அளிக்கப்படும். SHARE IT.
News January 22, 2026
கடலூர்: சிறுமி கர்ப்பம் – இளைஞர் மீது போக்சோ வழக்கு

பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரை 22 வயது வாலிபர் ஒருவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, தனிமையில் இருந்துள்ளார். இதில் கர்ப்பமான சிறுமி சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, அங்கிருந்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமானது குறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், பண்ருட்டி போலீசார் வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 22, 2026
கடலூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர்<


