News July 9, 2025
கட்டுமான நலவாரியத்தின் கல்வி உதவித்தொகை உயர்வு!

கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. செவிலியர், கேட்டரிங், உணவு தயாரித்தல், சேவை உள்ளிட்ட பட்டயப் படிப்புகளுக்கு(Diploma) ஆண்டுக்கு ₹3,000 வழங்கப்படும். கட்டுமான தொழிலாளர்களின் பிள்ளைகள் முனைவர் பட்டப்படிப்புக்கு ஆண்டுக்கு ₹15,000 வீதம் 3 ஆண்டுக்கு வழங்கப்படவுள்ளன. இதனால், பல லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்கள் பயனடையும்.
Similar News
News July 9, 2025
மாணவிகளின் ஆடைகளை கழற்றிவிட்டு சோதனை.. ஷாக்

மகாராஷ்டிர மாநிலம், சாகாபூர் பள்ளியில் மாணவிகளின் ஆடைகளை கழற்றிவிட்டு சோதனை நடத்திய சம்பவம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாத்ரூமில் ரத்தம் சிதறி இருக்கவே, மாதாந்திர பீரியட்தான் இதற்கு காரணம் என கருதி தலைமை ஆசிரியை உள்ளிட்டோர் மாணவிகளிடம் சோதனை நடத்தியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபடவே, இதுகுறித்து போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
News July 9, 2025
மாலை 6 மணி வரையிலான தலைப்புச் செய்திகள்

<<17005460>>✪கடலூர் விபத்துக்கு<<>> கேட் கீப்பர் தூங்கியதே காரணம்
✪<<17007676>>குஜராத்தின் வதோதராவில் <<>> பாலம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலி
✪<<17005030>>யோகா செய்து PM<<>> மோடிக்கு வரவேற்பளித்த நமீபியா
✪<<17004947>>4G, 5G ஸ்மார்ட்<<>> போன்களின் விலைகளை நிறுவனங்கள் குறைக்க உள்ளதாக தகவல்
✪<<17007716>>3-வது டெஸ்டில்<<>> களமிறங்கும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர்
News July 9, 2025
மகாராஷ்டிராவை போன்று பிஹாரிலும் பாஜக சதி: ராகுல்

ECI உதவியோடு மகாராஷ்டிராவை போன்று பிஹார் தேர்தலிலும் முறைகேடு செய்ய பாஜக சதி செய்வதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். அம்மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை ECI மேற்கொண்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அவர், ஏழை வாக்காளர்களை Voter List-ல் இருந்து நீக்க வாய்ப்புள்ளது என்றார்.