News March 27, 2025
தொகுதி மறுவரையறை.. தெலங்கானாவில் தீர்மானம்

MP தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்தியில் ஒரே கட்சி ஆட்சியில் இருக்கவே, வடமாநிலங்களின் தொகுதிகளை அதிகரிக்க முற்படுவதாகவும், தங்கள் மாநில மக்களின் உரிமையை என்றும் விட்டுத்தரமாட்டோம் எனவும் அம்மாநில CM ரேவந்த் சூளுரைத்துள்ளார். மேலும், அனைத்து கட்சிகளுடன் ஆலோசித்த பிறகே தொகுதி மறுவரை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News December 20, 2025
CINEMA 360°: சிறந்த நடிகர் விருதை வென்ற சசிகுமார்

*ஜனநாயகனின் சாட்டிலைட் உரிமையை Z தமிழ் வாங்கியுள்ளது. *23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை சசிகுமார் வென்றார். *அறிமுக இயக்குநர் சிவனேசன் இயக்கத்தில் மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ள ‘ரேஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. *சென்னை திரைப்பட விழாவில் ராமின் ‘பறந்து போ’ படம் சிறந்த தமிழ் படம் விருதை வென்றுள்ளது.
News December 20, 2025
ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா?

கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து மத்திய பட்ஜெட் பிப்.1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அனால் 2026-ல் ஞாயிற்றுக்கிழமை(பிப்.1) வருவதால் அன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முக்கிய நிகழ்வுகளுக்காக விடுமுறை தினங்களிலும் நாடாளுமன்றம் கூட வாய்ப்புள்ளது. உதராணமாக 2020-ல், கொரோனா தொற்று காலத்தின் போது அவசர தேவைகளுக்காக ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றம் கூடியது.
News December 20, 2025
ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள்

*உண்மையான நம்பிக்கை ஒருவனுக்கு இருக்குமாயின், அந்த நம்பிக்கை மலையைக் கூட அசைத்துவிடும். *சொல்லும் செயலும் பொருந்தி வாழும் மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழ்கின்ற மனிதன். *ஒன்றை அடையவதற்கு தேவை நல்ல குணம், ஒழுக்கம், ஒருமித்த செயல், எதற்கும் தயாராக இருத்தல். *தோல்வி என்பது அடுத்த காரியத்தை கவனமாக செய் என்பதற்கான எச்சரிக்கை. *மிரட்டிப் பணியவைக்கும் எந்த செயலும் வெறுக்கத்தக்கதே.


