News March 27, 2025

தொகுதி மறுவரையறை.. தெலங்கானாவில் தீர்மானம்

image

MP தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்தியில் ஒரே கட்சி ஆட்சியில் இருக்கவே, வடமாநிலங்களின் தொகுதிகளை அதிகரிக்க முற்படுவதாகவும், தங்கள் மாநில மக்களின் உரிமையை என்றும் விட்டுத்தரமாட்டோம் எனவும் அம்மாநில CM ரேவந்த் சூளுரைத்துள்ளார். மேலும், அனைத்து கட்சிகளுடன் ஆலோசித்த பிறகே தொகுதி மறுவரை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News November 26, 2025

FLASH: ஜெட் வேகத்தில் உயர்ந்த பங்குச்சந்தைகள்!

image

கடந்த 2 நாள்களாக சரிவிலிருந்த பங்குச்சந்தைகள் இன்று(நவ.26) வர்த்தகம் தொடங்கியது முதலே ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி சென்செக்ஸ் 666 புள்ளிகள் உயர்ந்து 85,253 புள்ளிகளிலும், நிஃப்டி 210 புள்ளிகள் உயர்ந்து 26,095 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. JSW Steel, Adani Ports, Trent, TMPV, Axis Bank நிறுவனங்களின் பங்குகள் 2 – 4% உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News November 26, 2025

5 விக்கெட்கள் காலி.. தடுமாறும் இந்தியா

image

549 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள இந்திய அணி, மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 5-ம் நாள் ஆட்டம் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து விக்கெட்களை இந்தியா இழந்து வருகிறது. குல்தீப் 5, கேப்டன் பண்ட் 13, ஜுரேல் 2 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாகியுள்ளனர். இந்திய அணி தற்போது 60/5 எடுத்துள்ளது. களத்தில் சுதர்சன் 8, ஜடேஜா 2 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

News November 26, 2025

மாநிலங்களின் உரிமையை காக்க அனைத்தும் செய்வோம்: CM

image

இந்தியா, ஒரு சித்தாந்தத்திற்கோ கலாசாரத்திற்கோ சொந்தமானதல்ல, அது அனைவருக்கும் சொந்தம் என CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அம்பேத்கரின் பார்வையை சுருக்க முயற்சிக்கும் சக்தியை எதிர்ப்போம் என்ற அவர், சமத்துவம், சகோதரத்துவத்தை பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், அரசியலமைப்பின்படி கூட்டாட்சியை நிலைநிறுத்தவும், மாநில உரிமைகளை பாதுகாக்கவும் அனைத்தையும் செய்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!