News March 27, 2025
தொகுதி மறுவரையறை.. தெலங்கானாவில் தீர்மானம்

MP தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்தியில் ஒரே கட்சி ஆட்சியில் இருக்கவே, வடமாநிலங்களின் தொகுதிகளை அதிகரிக்க முற்படுவதாகவும், தங்கள் மாநில மக்களின் உரிமையை என்றும் விட்டுத்தரமாட்டோம் எனவும் அம்மாநில CM ரேவந்த் சூளுரைத்துள்ளார். மேலும், அனைத்து கட்சிகளுடன் ஆலோசித்த பிறகே தொகுதி மறுவரை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News November 19, 2025
மகளிர் உரிமைத் தொகை ₹1,500 ஆக உயர்கிறதா?

பிஹார் தேர்தல் வெற்றிக்கு பெண்கள் முக்கிய காரணமாக இருந்ததால், மகளிர் உரிமைத் தொகையை உயர்த்துவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விடுபட்ட தகுதியானவர்களுக்கு ஜனவரி முதல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாம். அதேநேரம், தொகையை ₹1,500 ஆக உயர்த்தி வழங்குவது சாத்தியமா என அதிகாரிகளிடம் CM கேட்டதாக தகவல் கசிந்துள்ளது. இந்த யோசனை ஏற்கப்பட்டால் மகளிர் உரிமைத் தொகை ₹1,500 ஆக உயரலாம்.
News November 19, 2025
30 வருட பழைய காருக்கு ரூ.10 லட்சம்.. ஏன் தெரியுமா?

கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர், தனது முதல் கார் மாருதி 800-ஐ கண்டுபிடித்து தந்தவர்களுக்கு ₹10 லட்சம் கொடுத்துள்ளார். 1994-ல் ரூ.1.10 லட்சத்திற்கு வாங்கி, 1997-ல் விற்ற காரை, கண்டுபிடித்து தருபவர்களுக்கு ₹10 லட்சம் தருவதாக SM-யில் பதிவிட்டார். இதையடுத்து, இன்ஸ்டா நண்பர்கள், அந்த காரை கொண்டுவந்து, அவரிடம் சேர்த்தனர். கார் கிடைத்த மகிழ்ச்சியில் திகைத்துபோன அவர், சொன்னபடியே பணத்தையும் கொடுத்துள்ளார்.
News November 19, 2025
நமது நாட்டின் இறக்குமதி எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் இறக்குமதி, ஏற்றுமதியை விட அதிகமாக உள்ளது. 2024 நிலவரப்படி, ஏற்றுமதி – இறக்குமதியில் இந்தியாவின் வர்த்தக கூட்டாளிகள் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில், இந்தியா எந்த நாடுகளில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்துள்ளது என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? COMMENT & SHARE


