News March 27, 2025
தொகுதி மறுவரையறை.. தெலங்கானாவில் தீர்மானம்

MP தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்தியில் ஒரே கட்சி ஆட்சியில் இருக்கவே, வடமாநிலங்களின் தொகுதிகளை அதிகரிக்க முற்படுவதாகவும், தங்கள் மாநில மக்களின் உரிமையை என்றும் விட்டுத்தரமாட்டோம் எனவும் அம்மாநில CM ரேவந்த் சூளுரைத்துள்ளார். மேலும், அனைத்து கட்சிகளுடன் ஆலோசித்த பிறகே தொகுதி மறுவரை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News December 28, 2025
அதிமுகவில் இருந்து நீக்கம்.. இபிஎஸ் கொடுத்த அதிர்ச்சி

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், EX MLA-வுமான பல்பாக்கி சி.கிருஷ்ணனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் EPS நீக்கியுள்ளார். சி.கிருஷ்ணன், சேலம் புறநகர் மாவட்ட MGR மன்றச் செயலாளராக தற்போது பொறுப்பு வகித்து வந்த நிலையில் நீக்கப்பட்டுள்ளார். 2026 பேரவைத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தனது கோட்டையில் இருந்தே முக்கிய நிர்வாகியை நீக்கி EPS அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
News December 28, 2025
விஜயகாந்தின் உயர்ந்த உள்ளம்: CM ஸ்டாலின்

தேமுதிக நிறுவனர் விஜயகாந்தை பற்றி CM ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். விஜயகாந்தை அருமை நண்பர் என குறிப்பிட்ட அவர், அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்றவர் என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், விஜயகாந்தின் நினைவு நாளில் அவர் செய்த நற்பணிகளை நினைவுகூர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
News December 28, 2025
‘போதும் வன்முறை’: கொதிக்கும் உலக தலைவர்கள்

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இன்று <<18681640>>டிரம்ப்பை<<>> சந்திக்க உள்ளார். இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் சுமார் 500 ட்ரோன்கள், 40 ஏவுகணைகளை கொண்டு தாக்கியதில் கீவ் நகரம் நிலைகுலைந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பிரான்ஸ், கனடா, ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, ரஷ்யா அமைதியை ஏற்படுத்த முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன.


