News March 27, 2025
தொகுதி மறுவரையறை.. தெலங்கானாவில் தீர்மானம்

MP தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்தியில் ஒரே கட்சி ஆட்சியில் இருக்கவே, வடமாநிலங்களின் தொகுதிகளை அதிகரிக்க முற்படுவதாகவும், தங்கள் மாநில மக்களின் உரிமையை என்றும் விட்டுத்தரமாட்டோம் எனவும் அம்மாநில CM ரேவந்த் சூளுரைத்துள்ளார். மேலும், அனைத்து கட்சிகளுடன் ஆலோசித்த பிறகே தொகுதி மறுவரை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News November 27, 2025
செங்கோட்டையன் குறித்த கேள்வியால் டென்ஷனான EPS

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ‘அதை அவரிடம் போய் கேளுங்கள். என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்; அதிமுகவில் இல்லாத ஒருவர் குறித்து பதிலளிக்க முடியாது’ என்று இபிஎஸ் ஆவேசமாக பதிலளித்துள்ளார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததால், கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு பாதகமாக அமையலாம் என கூறப்படுகிறது. இதனால், கொங்குவில் கட்சியை பலப்படுத்த இபிஎஸ் திட்டமிட்டுள்ளாராம்.
News November 27, 2025
மங்கும் WTC பைனல் கனவு!

SA-வுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததன் மூலம், 2027 WTC பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பு இந்தியாவுக்கு குறைந்துள்ளது. பைனலுக்கு முன்னேற 60% புள்ளிகள் தேவைப்படும் நிலையில், தற்போது 48.15% புள்ளிகளை மட்டுமே இந்திய அணி பெற்றுள்ளது. மீதமுள்ள 9 டெஸ்டில் 6 வெற்றி, 2 டிரா அல்லது 7 வெற்றிகளை அடைய வேண்டிய கட்டாயத்திலும் இந்தியா உள்ளது. இந்தியா அடுத்ததாக இலங்கை, நியூசிலாந்து, ஆஸி. அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.
News November 27, 2025
நாளை பள்ளிகள் விடுமுறையா? CM ஸ்டாலின் ஆலோசனை

வங்கக்கடலில் 3 மணி நேரத்தில் ‘டிட்வா’ புயல் உருவாகவுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இந்த புயல் வட தமிழகத்தை நோக்கி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து CM ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார். தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுப்பது; மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது; உதவி மையங்கள் அமைப்பது; அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் விடுமுறை அளிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.


