News March 27, 2025
தொகுதி மறுவரையறை.. தெலங்கானாவில் தீர்மானம்

MP தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்தியில் ஒரே கட்சி ஆட்சியில் இருக்கவே, வடமாநிலங்களின் தொகுதிகளை அதிகரிக்க முற்படுவதாகவும், தங்கள் மாநில மக்களின் உரிமையை என்றும் விட்டுத்தரமாட்டோம் எனவும் அம்மாநில CM ரேவந்த் சூளுரைத்துள்ளார். மேலும், அனைத்து கட்சிகளுடன் ஆலோசித்த பிறகே தொகுதி மறுவரை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News December 20, 2025
PM மோடியை காண சென்ற BJP தொண்டர்கள் பலி

கொல்கத்தா அருகே ரயில் மோதிய விபத்தில், 4 BJP தொண்டர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தஹெர்பூரில் நடக்கும் PM மோடியின் பேரணியில் பங்கேற்க 40 BJP தொண்டர்கள் பஸ்ஸில் சென்றனர். சிறிது ஓய்வெடுக்க, கிருஷ்ணாநகர்-ரணகாட் ரயில்வே கிராஸிங் பகுதியில் அவர்கள் பஸ்ஸில் இருந்து இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக ரயில் மோதி தூக்கி வீசப்பட்டனர். பனிப்பொழிவால் ரயில் வந்தது கூட அவர்களுக்கு தெரியவில்லை என கூறப்படுகிறது.
News December 20, 2025
திமுக தீய சக்தி அல்ல, மக்கள் சக்தி: அமைச்சர் ரகுபதி

<<18602926>>திமுக தீய சக்தி<<>> என்று விஜய் பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் ரகுபதி, ‘நாங்கள் தீய சக்தி அல்ல, மக்கள் சக்தி’ என்று தெரிவித்துள்ளார். விஜய் சினிமா டயலாக் பேசி வருவதாக விமர்சித்துள்ள அவர், சிலப்பதிகாரம் என்ன என்பதெல்லாம் விஜய்க்கு தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார். 6 மாதம் நடித்துவிட்டு முதல்வராவது சினிமாவில் நடக்கும் என்றும், ஆனால் உண்மை அரசியலில் நடக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.
News December 20, 2025
100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

டெல்லியில் நிலவி வரும் கடும் மூடுபனியை தொடர்ந்து, ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக டெல்லி விமான நிலையத்தில் இன்று மட்டும் 129 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. அடுத்த சில நாள்களுக்கும், ஆரஞ்சு அலர்ட் தொடரும் என IMD எச்சரித்துள்ள நிலையில், விமான சேவைகள் குறித்து முன்னரே உறுதிப்படுத்திக்கொள்ள பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


