News May 21, 2024
பாஜக தலைவர்களை கொல்லத் திட்டம்

குஜராத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 4 ஐஎஸ் தீவிரவாதிகளை அகமதாபாத்தில் நேற்று போலீசார் கைது செய்தனர். விசாரணையில், குஜராத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தவும், பாஜக, RSS தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்துள்ளது. இலங்கையை சேர்ந்த 4 தீவிரவாதிகளும் தமிழ் மட்டுமே பேசியுள்ளனர். வேறுமொழி அவர்களுக்கு தெரியவில்லை. இதனால், தமிழ் தெரிந்த அதிகாரி உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது.
Similar News
News February 20, 2026
திருவள்ளூர்: உங்களிடம் செல்போன் உள்ளதா? ALERT

திருவள்ளூரில் அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) இணையதளத்தை<
News February 20, 2026
BREAKING: திமுகவுக்கு ஓபிஎஸ் ஆதரவு கொடுத்தார்

திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று திமுக கூட்டணிக்கு ஆதரவாக OPS பேசியுள்ளது அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. CM ஸ்டாலினை 2-வது முறையாக சந்தித்தபின் OPS செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுகவின் 5 ஆண்டுகால சாதனைகள் மக்கள் மனதில் நிலைத்திருக்கின்றன. தற்போதைய அரசியல் சூழல், ஸ்டாலினின் சிறப்பான 5 ஆண்டுகால ஆட்சி காரணமாக திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
News February 20, 2026
துரைமுருகன் இடத்தில் அன்பில் மகேஸ்.. என்ன ஆச்சு?

சட்டப்பேரவை கடைசி கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று அவை முன்னவர் துரைமுருகன் இருக்கையில் அன்பில் மகேஸ் அமர்ந்திருந்தார். உடல் நலக்குறைவால் இன்றைய கூட்டத்தில் துரைமுருகன் பங்கேற்காத நிலையில், காலியாக இருந்த அவ்விருக்கையில் அன்பில் அமரவைக்கப்பட்டார். ஆனால், சீனியர்கள் பலர் இருக்கும் போது, அவை முன்னவர் அமர்ந்த இருக்கையில் ஜூனியர் அமைச்சர் ஒருவரை உட்காரவைத்தது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.


