News May 20, 2024
ஈரான் அதிபர் மரணத்தில் சதி?

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார். போர் நடைபெற்று வரும் நேரத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த விபத்து பல சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. காஸாவுக்கு ஈரான் ஆதரவு தெரிவித்ததால், அது பிடிக்காத யாரோ செய்த சதியால் விபத்து ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பேச்சு எழுந்துள்ளது. இதனால், #Mossad என்ற ஹேஷ்டேக் X தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
Similar News
News April 5, 2026
4 நாள்களில் ₹6 கோடி அதிகமான விஜய் சொத்து

பெரம்பூரில் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சில திருத்தங்களை மேற்கொண்டு, நேற்று கூடுதல் பிரமாண பத்திரம் அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனது அசையும் சொத்து ₹410 கோடி என விஜய் குறிப்பிட்டுள்ளார். ஆனால், மார்ச் 30-ல் விஜய் நேரடியாக தாக்கல் செய்த வேட்பு மனுவில் ₹404 கோடி என்றே கூறியிருந்தார். தற்போது தனது பிரசார வாகனத்தின் மதிப்பை கணக்கில் காட்டியுள்ளார்.
News April 5, 2026
போர் எதிரொலி.. தேங்காய் விலை குறைந்தது!

ஈரான் – இஸ்ரேல் போரால் TN-ல் தேங்காய் ஏற்றுமதி 40% சரிந்துள்ளது. நாட்டின் மொத்த தேங்காய் ஏற்றுமதியில் TN-ன் பங்கு 31% ஆகும். பஹ்ரைன், குவைத், கத்தார், சவுதி, ஏமன், UAE, சிங்கப்பூர் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த ஒரு மாதமாக போர் சூழலால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதன் விளைவாக உள்ளூரில் தேங்காய் விலை கிலோவுக்கு ₹15 வரை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். உங்கள் ஊரில் விலை என்ன?
News April 5, 2026
மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் கட்சியில் இணைந்தார்

NDA-வில் இணைய வேண்டும் என விஜய்க்கு அழைப்பு விடுத்ததால், கடந்த மார்ச் மாதம் பாஜக செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து ஏ.என்.எஸ். பிரசாத் நீக்கப்பட்டார். இந்நிலையில், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து நயினார் நாகேந்திரனிடம் ஏ.என்.எஸ். பிரசாத் மன்னிப்பு கடிதம் கொடுத்துள்ளார். அதை ஏற்றுக்கொண்ட பாஜக தலைமை, மீண்டும் கட்சியில் இணைந்து தேர்தல் பணியாற்ற அறிவுறுத்தியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>


