News April 6, 2025

தமிழ்நாட்டிற்கு எதிராக சதி: மு.க.ஸ்டாலின்

image

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு எதிராக சதி நடக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டின் வலிமையை குறைக்க பாஜக அரசு துடியாய் துடிக்கிறது. இதனை முதலிலேயே உணர்ந்து குரல் கொடுத்தது நாம்தான். இதுதொடர்பாக கேள்வி எழுப்பும் நமது எம்பிக்களின் குரலை நாடாளுமன்றத்தில் நசுக்குகின்றனர் என்றும் விமர்சித்தார்.

Similar News

News April 7, 2025

நொந்து போனது யார்? – CM ஸ்டாலினுக்கு EPS பதிலடி

image

ஸ்டாலின் அரசில்தான் மக்கள் நொந்து நூலாகியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். அடுத்தாண்டு தேர்தல் வருவதை கருத்தில் கொண்டுதான் சட்டப்பேரவையில் மீனவர்களுக்கான அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்தது திமுக அரசுதான் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுக தொண்டர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகியுள்ளதாக பேரவையில் CM ஸ்டாலின் பேசி இருந்தார்.

News April 7, 2025

அதிமுக Ex M.P. சி.பெருமாள் உடல் நல்லடக்கம்!

image

அதிமுக மூத்த தலைவரும், Ex எம்.பியுமான சி.பெருமாள் (68) உடல் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஆம்பள்ளி கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. உடல் நலக்குறைவால் நேற்று மறைந்த அவரது உடலுக்கு அதிமுக மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, தம்பிதுரை, கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன், பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோர் நேரில் அஞ்சல் செலுத்தினர்.

News April 7, 2025

முதல் இந்தியர்… மணல் ஓவியக் கலைஞருக்கு கௌரவம்!

image

முக்கிய தலைவர்களின் பிறந்தநாளிலோ, விழாக் காலங்களிலோ ஒடிசா கடற்கரையில் தனது மணல் சிற்பம் மூலம் கவனத்தை ஈர்ப்பவர் சுதர்சன் பட்நாயக். இங்கிலாந்தில் நடைபெற்ற மணல் கலை விழாவில் பங்கேற்ற அவர், பிரெட் டாரிங்டன் மணல் மாஸ்டர் விருதை வென்றுள்ளார். இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் சுதர்சன் பட்நாயக்தான். ஒடிசாவைச் சேர்ந்த அவருக்கு, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!