News June 19, 2024
பால் கொள்முதல் விலையை உயர்த்த பரிசீலனை

பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். விவசாயிகளிடம் இருந்து நாள்தோறும், லட்சக்கணக்கான லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்து வருகிறது. பசும்பால் லிட்டர் ₹38, எருமைப் பால் லிட்டர் ₹47க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில், பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கையை ஏற்று, கொள்முதல் விலையை உயர்த்த பரிசீலிப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.
Similar News
News April 8, 2026
போர் பீதியால் வளைகுடா நாடுகளில் எச்சரிக்கை!

அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் பீதியால் வளைகுடா நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. அதன்படி குவைத் தனது மக்களை 6 மணி நேரம் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. பஹ்ரைன் அரசு, மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு கோரியுள்ளது. கத்தாரில் அச்சுறுத்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்தியத் தூதரகமும் வலியுறுத்தியுள்ளது.
News April 8, 2026
சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்

*அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு. *நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்; உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! *சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள். *எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ். *நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது.
News April 8, 2026
டிரம்ப்புக்கு பாக் பிரதமர் வேண்டுகோள்

ஈரானுக்கு டிரம்ப் விதித்த காலக்கெடு இன்னும் சில மணி நேரத்தில் முடிய உள்ளது. இந்நிலையில் பாக்., PM ஷெபாஸ் ஷெரீஃப் தற்காலிக போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான ராஜதந்திர முயற்சிகள் சீராக நடந்து வருகிறது. எனவே ஈரான் மீதான காலக்கெடுவை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்குமாறு டிரம்பை பணிவுடன் கேட்டுக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.


