News March 28, 2024
தமிழ்நாட்டில் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன், விளவங்கோடு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் முடிந்தது. மக்களவைத் தேர்தலுக்கு 1,749 மனுக்கள், இடைத்தேர்தலுக்கு 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் இன்று பரிசீலிக்கப்படவுள்ளன.
Similar News
News April 5, 2026
நாளையுடன் பொதுத்தேர்வு நிறைவு.. பறந்த உத்தரவு

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளையுடன் நிறைவடைகிறது. விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவு பறந்துள்ளது. அதன்படி, மதிப்பீட்டு பணிக்கு அனுப்பப்படும் ஆசிரியர்களுக்கு ஏப்.9-க்குள் நியமன ஆணையை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், எந்த பள்ளியில் இருந்தும் ஆசிரியர் விடுபடாத வகையில் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
News April 5, 2026
Whatsapp ஆடியோ கால்களை ரெக்கார்ட் செய்ய முடியுமா?

இந்த வசதியை Whatsapp வழங்குவதில்லை. ஆனால், சில டெக்னிக்களின் மூலம் ரெக்கார்டு செய்யலாம். ஆண்ட்ராய்டு போனில் ‘Screen Recording’ வசதி உள்ளது. Whatsapp-ல் கால் வரும்போது, இந்த ஆப்ஷனை On பண்ணுங்க. இது ஆடியோ, வீடியோ இரண்டையும் பதிவு செய்யும். போன் பேசி முடித்ததும், Off செய்தால், கேலரியில் அது வீடியோ file-ஆக இது பதிவாகி இருக்கும். ஆனால், ஒருவரின் அனுமதியின்றி உரையாடலை ரெக்கார்டு செய்வது சரியானது அல்ல!
News April 5, 2026
பேய் மழை வெளுக்கும்.. 8 மாவட்டங்களில் அலர்ட்

நீலகிரி, ஈரோடு, தேனி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரவு 7 மணி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும் என IMD குறிப்பிட்டுள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால், வெளியே செல்பவர்கள் கவனமாக இருங்கள். உங்க ஊரில் மழை பெய்யுதா என கமெண்ட்ல சொல்லுங்க.


