News March 29, 2024

அடுத்தடுத்து மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி

image

நாமக்கல் ராசிபுரம் அருகே எம்பி சின்ராஜூக்கு சொந்தமான ஆலையில் தேநீர் அருந்திய 15 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பல்லி விழுந்த தேநீரை குடித்ததில் 15 பேர் அடுத்தடுத்து வாந்தி மயக்கமடைந்துள்ளனர். உடனே அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் எம்பியின் ஆலையில் இதுபோன்ற சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News

News December 2, 2025

மக்கள் நாயகன் காலமானார்

image

தேசத்திற்காக எண்ணற்ற போர்களில் களம் கண்ட Lt Col ஜம்வால் (100) வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். பிரிட்டிஷ் இந்திய ராணுவம் & இந்திய ராணுவத்தில் பணியாற்றிய ஒரு சில வீரர்களில் இவரும் ஒருவர். 1947-48 இந்தோ-பாக் போரின் போது, C படைப்பிரிவின் குதிரைப்படை தளபதியாக செயல்பட்ட ஜம்வால், கடினமான zojila கணவாயை கடந்து எதிரிகளை தாக்கினார். நாட்டை காத்த ரியல் ஹீரோ மறைவுக்கு பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்.

News December 2, 2025

IPL 2026: அடுத்தடுத்து விலகும் முன்னணி நட்சத்திரங்கள்!

image

மேக்ஸ்வெல்லை PBKS அணி தக்கவைக்காத நிலையில், அவர் தனது பெயரை IPL மினி ஏலத்திற்கு பதிவு செய்யவில்லை. இதனால் அவர் 2026 தொடரில் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது. அதே போல, KKR வீரர் <<18444409>>மொயின் அலி<<>>யும், PSL தொடரில் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளார். ஆகையால், அவரும் IPL-ல் விளையாட மாட்டார். முன்னதாக, KKR-ன் ரஸல் ஓய்வை அறிவித்த நிலையில், DC-ன் டூ பிளெஸ்ஸிஸ் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.

News December 2, 2025

ஓவரா முடி கொட்டும் பிரச்னையா?

image

முடி கொட்டுவதற்கு வைட்டமின் குறைபாடு, மன அழுத்தம், ஹார்மோன் சமநிலையின்மை என பல காரணங்கள் உள்ளன. இவற்றில், வைட்டமின் D குறைபாடு முக்கிய காரணிகளில் ஒன்று. சூரிய ஒளி உடலுக்கு வைட்டமின் D-யை அளிக்கிறது. ஆகையால், முடி கொட்டும் பிரச்னை உள்ளவர்கள், காலையில் சிறிது நேரம் சூரிய ஒளியில் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அதே நேரத்தில் கொழுப்பு நிறைந்த மீன்களும், பால் உடலுக்கு வைட்டமின் D-யை கொடுக்குமாம்.

error: Content is protected !!