News March 24, 2025

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு குடமுழுக்கு

image

ஜூலை 14ஆம் தேதி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இதற்கு முன் 2012ஆம் ஆண்டு இக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ரோப் கார் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட (₹26 கோடி) அதிக செலவு ஆவதால் (₹32 கோடி) விரைவில் கூடுதல் நிதி ஒதுக்கி திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

Similar News

News November 26, 2025

பிடிகொடுக்காத EPS.. ரூட்டை மாற்றிய KAS

image

EPS பிடிகொடுக்காததாலேயே, செங்கோட்டையன் தனது அரசியல் பயணத்தை TVK பக்கம் திருப்பியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். நீக்கப்பட்டவர்களை இணைக்குமாறு கெடுவிதித்த KAS-ன் கட்சி பொறுப்பை EPS பறித்தார். தேவர் ஜெயந்தியில் TTV, OPS உடன் இணைந்து பேட்டி கொடுத்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ADMK இணைப்பு முயற்சிகள் பலனளிக்காததால், இறுதியாக தவெகவில் இணையும் முடிவை KAS எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

News November 26, 2025

அயோத்தியில் தர்மக்கொடி ஏற்றம்: PM மோடி

image

அயோத்தி ராமர் கோயிலில் காவி கொடி ஏற்றப்பட்டுள்ளதால், பல நூற்றாண்டுகளின் வலி முடிவுக்கு வந்துள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார். அயோத்தியில் ஏற்றப்பட்டுள்ள தர்மக்கொடி இந்திய நாகரிகத்தின் புதிய எழுச்சி என்றும், இந்திய கலாசாரத்தின் அடையாளம் எனவும் அவர் பேசியுள்ளார். மேலும், ராம பக்தர்களின் 500 ஆண்டுகால கனவு தற்போது நிறைவேறி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News November 26, 2025

ஸ்டாலின் விவசாயிகளின் துரோகி இல்லையா? EPS

image

நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் மழையில் நனையவிட்டு, விவசாயிகள் வயிற்றில் திமுக அடித்ததாக EPS குற்றம்சாட்டினார். மேலும் நெல் ஈரப்பதத்திற்கான வரம்பை, உரிய நேரத்தில் மத்திய அரசின் ஆணையைப் பெற்று உயர்த்த தவறிய CM ஸ்டாலின், விவசாயிகளின் துரோகி இல்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 39 MP-க்களை வைத்துக்கொண்டு, ஏன் PM-ஐ சந்தித்து ஈரப்பதம் தளர்வு குறித்துப் பேசவில்லை என்றும் EPS கேட்டுள்ளார்.

error: Content is protected !!