News March 24, 2025

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு குடமுழுக்கு

image

ஜூலை 14ஆம் தேதி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இதற்கு முன் 2012ஆம் ஆண்டு இக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ரோப் கார் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட (₹26 கோடி) அதிக செலவு ஆவதால் (₹32 கோடி) விரைவில் கூடுதல் நிதி ஒதுக்கி திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

Similar News

News December 16, 2025

புதிய தலைமை தகவல் ஆணையர் நியமனம்

image

புதிய தலைமை தகவல் ஆணையராக (Chief Information Commissioner) ராஜ்குமார் கோயல் பதவியேற்றுள்ளார். இவர் PM மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி ஆகியோரின் ஆலோசனைக்கு பின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், 1990-ம் ஆண்டு பேட்ச் அருணாச்சல பிரதேசம்- கோவா- மிசோரம்- யூனியன் பிரதேசங்​கள் பிரிவை சேர்ந்த ஓய்வுபெற்ற IAS அதிகாரி ஆவார். சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் செயலாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

News December 16, 2025

திருப்பதி சொர்க்க வாசல் தரிசனம்.. பக்தர்களுக்கு ஃப்ரீ!

image

திருப்பதியில் வரும் 30-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனம் நடைபெறுகிறது. இதில், ஜனவரி 2 முதல் 8-ம் தேதி வரை தரிசன டோக்கன் பெறாவிட்டாலும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 3 நாள்கள், டிசம்பர் 30 – ஜனவரி 1-ம் தேதி வரையிலான தரிசன டோக்கன்கள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவை அனைத்து ஏழுமலையானின் பக்தர்களுக்கும் பகிரவும்.

News December 16, 2025

விஜய்க்கு புதுச்சேரி CM பதிலடி

image

புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இயங்கவில்லை என விஜய் சமீபத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை ஆகியவை பொதுமக்களுக்கு சென்றடைவதை கண்கூடாக பார்க்கலாம் என CM ரங்கசாமி பதிலடி கொடுத்துள்ளார். புதுச்சேரியில் பரப்புரை மேற்கொண்ட விஜய், ஆளும் NDA கூட்டணியில் உள்ள NR காங்கிரஸை விமர்சிக்காதது பேசுபொருளான நிலையில், ரங்கசாமி இவ்வாறு கூறியுள்ளார்.

error: Content is protected !!