News March 24, 2025

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு குடமுழுக்கு

image

ஜூலை 14ஆம் தேதி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இதற்கு முன் 2012ஆம் ஆண்டு இக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ரோப் கார் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட (₹26 கோடி) அதிக செலவு ஆவதால் (₹32 கோடி) விரைவில் கூடுதல் நிதி ஒதுக்கி திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

Similar News

News March 26, 2025

மாதம் ₹7,000 வழங்கும் ‘பீமா சகி யோஜனா’ திட்டம்

image

‘பீமா சகி யோஜனா’ திட்டம் கிராமப்புற பெண்கள் LIC காப்பீட்டு முகவர்களாக மாறுவதற்கும், கிராமங்களில் காப்பீட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதில், பங்கேற்க 18 – 70 வயது வரையிலான 10ஆம் வகுப்பு படித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு உதவித்தொகையாக முதல் ஆண்டில் மாதம் ₹7,000, 2ஆம் ஆண்டில் ₹6,000, 3ஆம் ஆண்டில் ₹5,000 வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க.

News March 26, 2025

திருப்பணியில் ஊழலா? பக்தர்கள் அதிர்ச்சி!

image

திருச்செந்தூரில் பக்தர்களுக்காக கட்டப்பட்ட கழிவறை தரமற்றதாக இருப்பதாக சர்ச்சை எழுந்தது. கோயில் பணியில் ஊழல் நடந்துள்ளதாக அண்ணாமலையும் சாடியிருந்தார். இந்நிலையில் வழக்கறிஞர் ராமநாத ஆதித்தன் என்பவர் RTI மூலம் பெற்ற தகவலில் ₹300 கோடி செலவில் நடக்கும் கோயில் திருப்பணிக்கு, வரைபடம் தயாரிக்க மட்டும் Pvt நிறுவனத்திற்கு ₹8 கோடி வழங்கியது தெரியவந்துள்ளது. இந்த தகவலால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

News March 26, 2025

திமுக கூட்டணி கட்சிகளை குறி வைக்கும் இபிஎஸ்?

image

ஆளும் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அங்கேயே இருக்க போகிறதா என்ன?; தேர்தல் நேரத்தில் எல்லாம் நடக்கும் என்று இபிஎஸ் சூசகமாக தெரிவித்துள்ளார். சமீபகாலமாக, தவாக, விசிக, கம்யூ., கட்சிகள் திமுகவுக்கு எதிரான கருத்துகளை கூற தொடங்கியுள்ளன. இதையும், இபிஎஸ் சொல்வதையும் இணைத்து பார்த்தால் கணக்கு புரிகிறது. ஆனால், அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தால், இந்த கட்சிகள் கூட்டணிக்கு வருமா என்பது சந்தேகமே.

error: Content is protected !!