News April 25, 2024

ஓபிசிகளுக்கான இடஒதுக்கீட்டை பறித்த காங்கிரஸ்

image

கர்நாடகாவில் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை காங்கிரஸ் பறித்து கொண்டுவிட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், குறிப்பிட்ட ஒரு மதத்தினரை திருப்திப்படுத்துவதை காங்கிரசார் தனது காயாக மீண்டும் பயன்படுத்துவதாகவும், கர்நாடகாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் ஓபிசிக்களாக அறிவித்து, கல்வி, வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டை ரகசியமாக பறித்து விட்டதாகவும் சாடினார்.

Similar News

News August 24, 2025

வாக்குத் திருட்டு.. பாஜக தலைவர் சர்ச்சை கருத்து

image

எங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டுமென்றால் ஜம்மு & காஷ்மீரில் இருந்து கூட மக்களை அழைத்து வருவோம் என கேரள BJP துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாஜக, வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், திருச்சூர் லோக் சபா தேர்தலில் சட்டவிரோதமாக வாக்காளர்கள் இணைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, இவ்வாறு அவர் பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News August 24, 2025

யூத அரசுக்கு எதிரான நவீன அவதூறு: இஸ்ரேல் தாக்கு

image

காசாவுக்குள் மனிதநேய உதவிகளை இஸ்ரேல் தடுத்து வருவதாக ஐ.நாவின் IPC அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், இது முழுக்க முழுக்க பொய் என்றும், யூத அரசுக்கு எதிரான நவீன ரத்தம் மிகுந்த அவதூறு என்றும் இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகு காட்டமாக கூறியுள்ளார். காசாவில் உள்ள ஒருவருக்கு ஒரு டன் வீதம் 2 மில்லியன் டன் உதவிப் பொருள்களை அனுமதித்துள்ளதாகவும் அவர் X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

News August 24, 2025

பதவி பறிப்பு மசோதாவில் முதலில் PM இல்லை: ரிஜிஜு

image

PM, CM பதவி பறிப்பு மசோதாவுக்கு எதிர்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த மசோதாவுக்கான பரிந்துரையின்போது PM பதவி இடம்பெறவில்லை என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். ஆனால், மோடி இதனை ஏற்க மறுத்ததாகவும், PM-ம் ஒரு குடிமகன், அவருக்கு இந்த சிறப்பு பாதுகாப்பு இருக்கக்கூடாது என கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதன்பிறகே இந்த மசோதாவில் PM பதவி சேர்க்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!