News May 2, 2024
சாதி, மொழி அடிப்படையில் மக்களைப் பிரிக்க காங்., முயற்சி

ஆங்கிலேயர்களின் பாரம்பரியத்தை மேம்படுத்த காங்., பாடுபடுவதாக யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதி, மொழி, பிராந்தியத்தின் அடிப்படையில் காங்., சமூகத்தைப் பிரிக்க முயல்வதாகக் குற்றம்சாட்டினார். அதனால்தான், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டைப் பறித்து சிறுபான்மையினருக்கு வழங்க முயற்சிப்பதாகக் காங்கிரசை அவர் விமர்சித்தார்.
Similar News
News January 29, 2026
தங்கம் விலை தாறுமாறாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் 1 அவுன்ஸ்(28g) $5,500-ஐ கடந்துவிட்டது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $431.92 (இந்திய மதிப்பில் ₹39,754) உயர்ந்து $5,518.44-க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியும் $11.94 அதிகரித்து $118.1 ஆக உள்ளது. இதனால் இன்று இந்திய சந்தையில் தங்கம் விலை அதிகமாக உயர வாய்ப்புள்ளது.
News January 29, 2026
அஜித் பவார் இடத்தை பிடிக்கப் போவது யார்?

தேசியவாத காங்கிரஸில் இருந்து பிரிந்து, பாஜக கூட்டணியில் இணைந்து துணை முதல்வர் ஆனவர் அஜித் பவார். எனினும் மீண்டும் சரத் பவாருடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் சமீபத்தில் எழுந்தன. இந்நிலையில் எதிர்பாரா விதமாக அஜித் பவாரின் திடீர் மரணம் அக்கட்சியில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. இதனையடுத்து அக்கட்சியின் தலைவர் பதவி ரேஸில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை வலது பக்கம் Swipe செய்து பாருங்க..
News January 29, 2026
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் இன்று(ஜன.29) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மஸ்தான் சாஹிப் தர்கா (பெரிய பள்ளிவாசல்) கந்தூரி விழாவையொட்டி, நாளை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள், முன்பருவத் தேர்வுகள் இருந்தால், அவை திட்டமிட்டபடி நடைபெறும். இந்த விடுமுறையை ஈடுசெய்ய பிப்.7 (சனிக்கிழமை) வேலை நாளாகும்.


