News March 18, 2024
திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் போட்டி

மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் இடையே 10 தொகுதிகள் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. கடந்த 2019 தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் திமுக சார்பில் ஞானதிரவியம் வெற்றிபெற்றார்.
Similar News
News November 6, 2025
நெல்லை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் – புன்செய், கிராம நத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர், ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவசமாக அந்த இடத்திற்கு பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் VAO-விடம் இதற்கான விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்புத் திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். எனவே இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
News November 6, 2025
நெல்லை: அரசு தேர்வர்கள் கவனத்திற்கு

நெல்லை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 2 முதன்மை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. நவ.7 அன்று காலை 10:30 மணிக்கு இந்த பயிற்சி வகுப்பு தொடங்குகிறது. திறன் வாய்ந்த ஆசிரியர்கள், ஸ்மார்ட் போர்டு வசதியுடன் பயிற்சி அளிக்க உள்ள நிலையில் வாராந்திர மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார். SHARE IT
News November 6, 2025
பாளை: வாலிபரை தாக்கி நகைகள், செல்போன் பறிப்பு

கொங்கந்தானபாறையை சேர்ந்த சுபின் வண்ணார்பேட்டையில் இருந்து வடக்கு பைபாஸ் ரோடு வழியாக வெள்ளகோவில் செல்லும் சாலையில் சென்றுள்ளார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து பணம் கேட்டு மிரட்டி ஏடிஎம் கார்டு, செல்போன், தங்க செயினை பறித்து சென்றனர். இதில் காயமடைந்த சுபின் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குது பாளை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


