News April 25, 2024
இந்தியாவில் ஷரியா சட்டத்தை அமல்படுத்த காங்கிரஸ் முயற்சி

இந்தியாவில் ஷரியா சட்டத்தை அமல்படுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாக யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாட்டுக்கு துரோகம் இழைத்துவிட்டு, மீண்டும் ஒரு முறை பொய்யான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு நாட்டு மக்களை ஏமாற்ற முயல்வதாக கூறிய அவர், இந்த நாடு அம்பேத்கரின் சட்டத்தின் படி ஆளப்பட வேண்டுமே தவிர, ஷரியத் சட்டத்தின் படி அல்ல என்று தெரிவித்தார்.
Similar News
News January 15, 2026
6-வது முறையாக பட்டத்தை தட்டி தூக்குமா இந்தியா?

16-வது U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஜிம்பாப்வேயில் தொடங்குகிறது. முதல் போட்டியில் இந்தியாவும், அமெரிக்காவும் மோதுகின்றன. இதுதவிர, ஜிம்பாப்வே – ஸ்காட்லாந்து, டான்ஸானியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் இன்று மோதுகின்றன. இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதுவரை 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா, 6-வது முறையாக தொடரை வெல்லுமா என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
News January 15, 2026
ஐம்பூதங்களின் வழிபாடான பொங்கல் பண்டிகை

மதங்களை கடந்த, ஐம்பூதங்களின் வழிபாடாக பொங்கல் பண்டிகை உள்ளது. காற்றின் உதவியுடன் எரியும் நெருப்பில், மண்ணால் செய்யப்பட்ட பானையில் தண்ணீரை ஊற்றி, அதில் பச்சரிசி பொங்கல் வைத்து ஆகாயத்தில் உள்ள சூரியனுக்கு படைப்பதே பொங்கல் பண்டிகை. நிலம், நீர்,ஆகாயம், காற்று, நெருப்பு ஆகியவற்றின் உதவியுடன் மனிதன் பக்குவப்படும் இந்த வாழ்வை நினைவு கூறும் விழாவாகவும் கூறப்படுகிறது.
News January 15, 2026
EPS-யிடம் பொறுப்பை ஒப்படைத்து ஒதுங்கிய பாஜக

தேமுதிக மற்றும் பல சிறிய கட்சிகளை NDA கூட்டணியில் இணைக்கும் பொறுப்பை EPS-யிடம் பாஜக கொடுத்து ஒதுங்கிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறிய கட்சிகளின் தலைவர்கள் பாஜக மேலிட தலைவர்களை சந்தித்து அதிக தொகுதிகளை கேட்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். மேலும், சிறிய கட்சிகளின் பலம், தலைவர்களின் நெளிவு, சுளிவுகள் EPS-க்கு நன்றாக தெரியும் என்பதாலும் அவரிடம் முழுப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாம்.


