News April 30, 2024
தொண்டர்களுக்கு காங்., அறிவுறுத்தல்

கோடை வெயிலை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நீர், மோர் பந்தல் அமைக்க காங்., தலைவர் செல்வப்பெருந்தகை தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் விதிகள் காரணமாக, தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று முதல்கட்டமாக சென்னையில் 2 இடங்களில் நீர், மோர் பந்தல் அமைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த மக்கள் சேவையில் தொண்டர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News March 10, 2026
பார்லிமென்ட் நடக்க ஒரு நாளைக்கு இவ்வளவு செலவா?

பார்லிமென்ட் அவை நடவடிக்கைக்காக ஒவ்வொரு நிமிடத்திற்கும் ₹2.50 லட்சம் செலவாவதாக சபாநாயகர் (பொறுப்பு) ஜெகதாம்பிகா பால் தெரிவித்துள்ளார். ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதிக்க கோரி எதிர்க்கட்சி MP-க்கள் லோக்சபாவில் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, அவை நடவடிக்கைகளுக்கு ஒரு நாளைக்கு ₹9 கோடி செலவாகிறது. ஆனால், மக்கள் பணத்தை எதிர்க்கட்சி MP-க்கள் வீணடிப்பதாக சாடியுள்ளார்.
News March 10, 2026
ஸ்டாலினுக்கு திமுக கூட்டணி கட்சிகள் நெருக்கடி

சென்னை மண்டலத்திற்குட்பட்ட தொகுதிகளை கேட்டு ஸ்டாலினுக்கு கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. பிரேமலதா தனக்காக விருகம்பாக்கம் தொகுதியை கேட்பதால், முடியாது எனக்கூற முடியாமல் திமுக தவிக்கிறதாம். அதேபோல், பெரம்பூர் அல்லது மதுரவாயல் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூ., ஆர்.கே.நகர் தொகுதியை விசிகவும் கேட்பதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் 1 தொகுதியை மட்டுமே கூட்டணிக்கு திமுக ஒதுக்கியது.
News March 10, 2026
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த கசாயம் அவசியம்!

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இலவங்கப்பட்டை – கிராம்பு கசாயம் குடிக்க சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ➤தேவையானவை: இலவங்கப்பட்டை – கிராம்பு , தேன்/ பனங்கற்கண்டு ➤செய்முறை: இலவங்கப்பட்டை – கிராம்பு இரண்டையும் இடித்து, தண்ணீரில் போட்டு 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். பிறகு வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து பருகலாம். இந்த அவசியமான தகவலை அனைவருக்கும் பகிருங்கள். SHARE.


