News April 24, 2025
நயன்தாராவுடன் மோதலா?.. சுந்தர்.சி ஓபன் டாக்!

‘மூக்குத்தி அம்மன் 2’ படப்பிடிப்பின்போது நயன்தாராவுடன் மோதல் என பரவிய செய்திக்கு படத்தின் இயக்குநர் சுந்தர்.சி பதிலளித்துள்ளார். நயன்தாரா மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் நடிகை எனக் குறிப்பிட்ட சுந்தர்.சி, தனக்கும் அவருக்கும் எந்த பிரச்னையும் இல்லை என விளக்கமளித்துள்ளார். இதுபோன்று வெளியாகும் கிசுகிசுகளுக்கெல்லாம் பதில் அளித்துக் கொண்டிருக்க முடியாது என்றும் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
Similar News
News April 24, 2025
பாகிஸ்தானின் ‘X’ பக்கம் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ X பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தவறான தகவலைப் பரப்புவதைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
News April 24, 2025
பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் தொடக்கம்

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 200 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 50 புள்ளிகளும் சரிந்தன. இதையடுத்து சென்செக்ஸ் 80,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்து 79,920-ஆக வர்த்தகமாகிறது. நிப்டி 24,284 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. பங்குச்சந்தைகள் கடந்த 7 நாள்களாக உயர்வுடன் காணப்பட்டன. இதனால் சென்செக்ஸ் நேற்று 80,000 புள்ளிகளை கடந்தது.
News April 24, 2025
6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்(IMD) தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 36 – 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.