News April 14, 2025
பாமகவில் வெடித்த மோதல்

பாமகவில் அன்புமணிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்த பொருளாளர் திலகபாமாவுக்கு எதிராக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திலகபாமா கட்சிக்கு நேற்று வந்தவர் என்றும், கட்சியில் கொள்கை கோட்பாடுகள் குறித்து ஏதும் அறியாதவர் என்றும் விமர்சித்துள்ளார். அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத அரைவேக்காடு திலகபாமா என்றும் அவர் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
Similar News
News January 15, 2026
பொங்கலன்று கண்டிப்பாக இவற்றை மறக்காதீங்க!

பொங்கல் பண்டிகையில், சூரிய பகவானுக்கு உரித்தான கோதுமையை தானம் கொடுங்கள் *சூரிய பகவானுக்கு இட்லி பூ, செம்பருத்திப் பூவை சமர்ப்பணம் செய்வது சிறப்பான பலன்களை அளிக்கும் *உடன் பிறந்தவர்களுக்கு, சகோதர சகோதரிகளுக்கு முடிந்த சீர்வரிசையை செய்யுங்கள் *இந்த தைத்திருநாளில், தெரிந்த குழந்தைகளிடம் பொங்கல் வாழ்த்து சொல்லி, அவர்களிடம் ஒரு ₹10-ஐ கொடுங்கள். இந்த வருடம் செல்வ வளம் இரட்டிப்பாகும். SHARE IT.
News January 15, 2026
பொங்கலை கேளிக்கையாக்கும் திமுக: வானதி

பொங்கல் பண்டிகையை மதம் பேதம் இல்லாமல் அனைவரும் கொண்டாட வேண்டும் என CM ஸ்டாலின் கூறியதை வானதி விமர்சித்திருக்கிறார். இந்து மத அழிப்பை திமுக அடிப்படையாக கொண்டிருப்பதாக கூறிய அவர், இந்துக்களின் பண்டிகையான பொங்கலை New Year போல, வெறும் கேளிக்கையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது எனவும் கூறியுள்ளார். மேலும், பொங்கல் பண்டிகையின் ஆன்மிகத்தை அதிலிருந்து அகற்ற துடிக்கின்றனர் எனவும் பேசியுள்ளார்.
News January 15, 2026
சியா விதைகளை இப்படி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!

சியா விதைகளை ஊற வைக்காமல் அப்படியே வாயில் போட்டுவிட்டு, பிறகு தண்ணீர் அருந்தக்கூடாது. இப்படி செய்வதால், அந்த விதைகள் உங்கள் தொண்டையில் சிக்கி மூச்சடைப்பை ஏற்படுத்தும். பிறகு குடல்களில் அடைப்பை ஏற்படுத்தி பல வயிற்றுப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். எனவே, சியா விதைகளை தண்ணீரில் அரை மணி நேரமாவது ஊறவைத்து சாப்பிட வேண்டும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். விழிப்புணர்வுக்காக SHARE THIS.


