News December 10, 2024
ரூ.2,400 கோடியை விடுவிக்க தமிழகத்துக்கு நிபந்தனை

தேசியக் கல்வி கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்துக்கு ரூ.2,400 கோடியை விடுவிப்போம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அக்கொள்கை தமிழக நலனுக்கு எதிராக இருப்பதாகக் கூறி, அரசு ஏற்கவில்லை. இதையடுத்து, அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய 2024-2025 ஆண்டு நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. ஏற்கெனவே உள்ள நிலுவைத் தொகையுடன் (ரூ.248.29 கோடி) சேர்த்து ரூ.2,400 கோடி தர வேண்டியுள்ளது.
Similar News
News September 13, 2025
திமுகவுக்கு 13 மார்க்: அன்புமணி ரேட்டிங்

550 வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, வெறும் 66 வாக்குறுதிகளை மட்டுமே திமுக நிறைவேற்றியுள்ளதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். இதை கணக்கில் கொண்டால், அதற்கு வெறும் 13 மார்க் தான் என்ற அவர், இதனால் திமுக அரசு ஃபெயில் ஆகிவிட்டதாகவும் சாடியுள்ளார். முன்னதாக, அன்புமணி வெளியிட்டிருந்த ‘விடியல் எங்கே’ புத்தகத்தில் வேலைவாய்ப்புகள், மாதந்தோறும் மின் கணக்கீடு போன்றவை நிறைவேற்றப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
News September 13, 2025
19 பள்ளி மாணவர்கள் மரணம்

மியான்மரில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 19 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் ராணுவத்திற்கும், ஆயுதக் குழுவான அரக்கன் ஆர்மி (AA)-க்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. மேற்கு ராக்கைன் மாகாணத்தில் தனியார் பள்ளி மீது ஆயுதக் குழு நடத்திய வான்வழி தாக்குதலில் 19 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், இது மிருகத்தனமான தாக்குதல் என்று ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது.
News September 13, 2025
Alert: இன்னும் 2 நாள் தாண்டினால் ₹5000 அபராதம்

ஐடிஆர் (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை மறுநாளுடன் முடிவடைகிறது. ஏற்கெனவே ஜூலை 31-லிருந்து செப்.15 வரை நீட்டிப்பு வழங்கப்பட்டதால், இதற்கு மேல் அவகாசம் வழங்க வாய்ப்பில்லை. எனவே, , கடைசி நேர அவசரத்தைத் தவிர்க்க, அனைவரும் விரைவில் ITR தாக்கல் செய்யுமாறு Income Tax India வலியுறுத்தியுள்ளது. செப்.15-க்குள் ITR தாக்கல் செய்யவில்லை என்றால் ₹5000 வரை அபராதம் விதிக்கப்படும்.