News June 21, 2024

மக்களுக்காக பேசுபவர்களை ஒடுக்குவதற்கு கண்டனம்: EPS

image

மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுக்கும் தங்களை ஒடுக்குவது கண்டிக்கத்தக்கது என இபிஎஸ் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் பேட்டியளித்த அவர், விஷச்சாராயம் குடித்து இதுவரை 50 பேர் பலியானதுடன், சேலத்தில் சிகிச்சை பெறும் பலருக்கு கண் பார்வை பறிபோனதாகவும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், திறமையற்ற அரசாங்கம் உள்ளதால் தான் இதுபோன்ற செயல்கள் நடந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

Similar News

News September 15, 2025

புதிய கட்சி தொடங்கினார் மல்லை சத்யா!

image

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, புதிய திருப்பமாக தனிக் கட்சி தொடங்கியுள்ளார். மஞ்சள் நட்சத்திரங்களுடன் கருப்பு, சிவப்பு நிற கொடியை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். கட்சியின் பெயரை நவ.20-ல் அறிவிப்பதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க குழு அமைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திருச்சியில் மதிமுக மாநாடு நடைபெறும் நிலையில், மல்லை சத்யா புதிய கட்சி தொடங்கியுள்ளார்.

News September 15, 2025

இந்தியாவின் lucky charm ஷிவம் துபே

image

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே அரிதான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது துபே விளையாடிய 31 டி20 போட்டிகளில் தொடர்சியாக இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது. 2020-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தொடங்கிய இந்த வெற்றி, நேற்றைய பாகிஸ்தான் இடையேயான போட்டிவரை தொடர்ந்துள்ளது.

News September 15, 2025

விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், SIR ரத்து செய்யப்படும்: SC

image

பிஹாரில் ECI-யால் நடத்தப்பட்ட சிறப்புத் தீவிரத் திருத்தத்தை(SIR) எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது, SIR-ல் ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் முழு செயல்முறையும் ரத்து செய்யப்படும் என SC எச்சரித்துள்ளது. இந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு பிற மாநிலங்களுக்கும் பொருந்தும் என தெரிவித்து கோர்ட், விசாரணையை அக்., 7-க்கு ஒத்திவைத்தது.

error: Content is protected !!