News March 28, 2024

வேட்புமனு பரிசீலனை நிறைவு

image

தமிழ்நாட்டில் வேட்புமனு பரிசீலனை 3 மணியுடன் நிறைவு பெற்றது. 39 தொகுதிகளுக்கு மொத்தம் 1403 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் அவை அனைத்தும் பரிசீலிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து வேட்பு மனுக்களை வாபஸ் பெற 30ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலை வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Similar News

News November 12, 2025

ரோஹித், கோலிக்கு BCCI போட்ட ரூல்!

image

ரோஹித், கோலியை விஜய் ஹசாரே தொடரில் விளையாடும் படி, BCCI உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தங்களின் பார்மை தக்கவைத்து கொள்ள, உள்நாட்டு போட்டிகளில் அவர்களை விளையாட அறிவுறுத்தி இருக்கிறதாம். முன்னதாக, வரும் 26-ம் தேதி நடக்கும் சையத் முஷ்டாக் அலி T20 தொடரில் மும்பை அணிக்காக விளையாட ரோஹித் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அவர் விஜய் ஹசாரே தொடரிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 12, 2025

டெல்லி குண்டுவெடிப்பு: மேலும் ஒரு டாக்டர் கைது

image

டெல்லி கார்வெடிப்பு வழக்கில் ஏற்கனவே 6 டாக்டர்கள் வரை கைதான நிலையில் 7-வதாக டாக்டர் தஜமுல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீநகரில் செயல்பட்டு வரும் மஹாராஜா ஹரிசிங் ஹாஸ்பிடலில் பணியாற்றி வந்த இவருக்கு, கார் வெடிப்பு சதியில் கைதான டாக்டர்களுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர் காஷ்மீரின் குல்காம் பகுதியை சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

News November 12, 2025

சீக்ரெட் சர்வே எடுக்கிறாரா EPS?

image

தேர்தல் நெருக்கத்தில் கட்சிகள் தனியார் நிறுவனங்கள் மூலம் சர்வே எடுப்பது வழக்கம். ஆனால் இம்முறை தனது கட்சியினரிடமே சர்வே அசைன்மெண்ட்டை EPS கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு, பாஜகவுடனான கூட்டணி உதவுகிறதா, யாருடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவுக்கு ஓட்டு வரும் என சர்வே எடுக்கப்படவுள்ளதாம். இதனை வைத்தே அடுத்த கட்ட நகர்வை EPS முடிவு செய்யவுள்ளார் என்கின்றனர்.

error: Content is protected !!