News September 6, 2025
ஆபரேஷன் சிந்தூரில் முழு சுதந்திரம் கிடைத்தது: தளபதி

ஆபரேஷன் சிந்தூரின் போது அழிக்க வேண்டிய இலக்குகளை தேர்ந்தெடுப்பதில் முழு சுதந்திரம் வழங்கப்பட்டதாக தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார். சீனா உடனான எல்லை பிரச்னை, பாக்., உடனான மறைமுக போர் நமக்கு மிகப்பெரிய சவால் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், நமது 2 எதிரிகளும் அணு ஆயுத வல்லமை படைத்தவர்கள் எனவும், இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பது சவால் நிறைந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 6, 2025
ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்

அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தான் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு 10:55 மணிக்கு 5.0 என்ற ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், மேலும் ஏதும் பாதிப்புகள் இல்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இதுவரை 2,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
News September 6, 2025
CSK நிச்சயம் கம்பேக் கொடுக்கும்: கேப்டன் ருதுராஜ்

காயத்தால் 2025 IPL தொடரில் இருந்து வெளியேறிய பிறகு களமிறங்கிய மாற்று வீரர்கள் உடன், தானும் இணைந்து 2026 சீசனில் வெற்றி பெறுவோம் என ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். தோனியின் ஆதரவுடன் இது நிச்சயம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த சீசனில் கடைசி இடத்திற்கு CSK தள்ளப்பட்ட நிலையில், ஆயுஷ் மாத்ரே, பிரேவிஸ், உர்வில் படேல் ஆகியோர் உடன் சென்னை அணி கம்பேக் கொடுக்கும் என தோனி கூறியிருந்தார்.
News September 6, 2025
GST வரியால் வருவாய் இழப்பு: கார்கே வலியுறுத்தல்

GST வரி குறைப்பால் வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு, அந்த இழப்பை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு ஈடு செய்ய வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். GST 2.0-வை வரவேற்பதாக தெரிவித்த அவர், 8 ஆண்டுகளாக தூக்கத்தில் இருந்த மோடி அரசு, தற்போது விழித்துக்கொண்டு ஜிஎஸ்டியை மறுசீரமைத்துள்ளதாக சாடினார். இதற்காக 10 ஆண்டுகளாக காங்., போராடி வந்ததாகவும் கூறியுள்ளார்.