News March 20, 2025

மனைவியை ஒருமுறை தொட ₹5,000 கேட்பதாக புகார்

image

ஒருமுறை தொடுவதற்கு ₹5,000 கேட்பதாக, மனைவி மீது கணவன் போலீஸில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த IT ஊழியர் ஸ்ரீகாந்த் – பிந்துஸ்ரீ ஜோடிக்கு கடந்த 2022இல் திருமணம் நடந்துள்ளது. கணவருக்கு பல்வேறு நிபந்தனை விதித்த மனைவி, WFH ஆபீஸ் மீட்டிங்கின் போது லேப்டாப் முன்பு நடனமாடியதால் தனது வேலையே போய்விட்டதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். அடக்கடவுளே..!

Similar News

News March 21, 2025

மரண படுக்கையிலும் உதவி செய்த ஹூசைனி

image

ரத்த புற்றுநோயால் ஹாஸ்பிடலில் மரண படுக்கையில் இருக்கும் நடிகர் ஷீகான் ஹூசைனி, தனது உடலை மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக தானம் வழங்கியுள்ளார். உறுப்புதான ஏற்பாடுகளை செய்த கலா மாஸ்டருக்கு நன்றி கூறிய அவர், “தன் இதயத்தை” மட்டும் தனது வில்வித்தை – கராத்தே மாணவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் எனவும் விழிப்புணர்வு செய்தார்.

News March 21, 2025

IPL 2025: முதல் போட்டிக்கு மழை அச்சுறுத்தல்

image

IPL 2025 போட்டிகள் நாளை தொடங்க உள்ள நிலையில், முதல் போட்டியிலேயே ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்திக்கும் நிலை உள்ளது. KKR – RCB அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாளை அங்கு கனமழை பெய்ய 90% வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. ஒருவேளை மழையால் நாளை போட்டி முழுவதும் ரத்தானால், இரு அணிகளும் புள்ளிகளைப் பகிர்ந்துகொள்ளும்.

News March 21, 2025

நாமினிகள் எளிதாக அணுக ‘செபி’ வசதி

image

இறந்தவர்களின் கணக்கை நாமினிகள் எளிதாக அணுக வசதியாக, டிஜிலாக்கருடன் இணைந்து செயல்பட உள்ளதாகப் செபி (SEBI) அறிவித்துள்ளது. இதனால் பயனர் மறைந்தால், அவர் நியமித்த நாமினிகளுக்கு டிஜிலாக்கர் கணக்கைப் படிக்க மட்டும் அனுமதி வழங்கப்படும் எனவும், இதன் மூலம் பங்குச்சந்தையில் பல கோடி மதிப்பிலான அடையாளம் காணப்படாத மற்றும் உரிமை கோரப்படாத சொத்துக்களின் எண்ணிக்கை குறையும் என்றும் கூறப்படுகிறது.

error: Content is protected !!