News December 4, 2024

வடிவேலு பாணியில் புகார்

image

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.

Similar News

News October 26, 2025

குழந்தைகளின் ஆற்றலை மேம்படுத்தும் சூப்பர் புட்ஸ்

image

சத்தான உணவு குழந்தைகளின் ஞாபக சக்தி, சிந்தனை மற்றும் அறிவுத்திறனை அதிகரிக்கும். அதற்கு முக்கியமான சில இதோ: * முட்டை – மூளைக்குத் தேவையான புரதம் உள்ளது *தானியங்கள் (கோதுமை,ராகி, ஓட்ஸ்) – நிலையான சக்திக்கு அடித்தளம் *கடலை மற்றும் பச்சை பயறு – புரதச்சத்து மிகுந்த உணவுகள் *வாழைப்பழம், திராட்சை, ஆப்பிள் – மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் *சுரைக்காய், பீட்ரூட் – மூளைக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்

News October 26, 2025

NATIONAL ROUNDUP: இரட்டை குழந்தைகளை கொன்ற தந்தை

image

*ராஞ்சியில் தீப்பிடித்து எரிந்த பஸ்ஸில் இருந்து பத்திரமாக தப்பிய 40 பயணிகள் *திருப்பதியில் பெய்து வரும் கனமழையால் பக்தர்கள் கடும் அவதி *நாக்பூரில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் *மகாராஷ்டிராவில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் இரட்டை குழந்தைகளை கழுத்தறுத்து கொன்ற கொடூர தந்தை

News October 26, 2025

சார்லி சாப்ளினின் பொன்மொழிகள்

image

*நீங்கள் கீழேயே பார்த்துக்கொண்டிருந்தால், நீங்கள் வானவில்லைக் காணமுடியாது. *இந்த பொல்லாத உலகில் எதுவும் நிரந்தரமில்லை. நம் பிரச்சனைகள் கூட நிரந்தரமில்லை. *நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன், அதனால் நான் அழுவதை யாராலும் பார்க்க முடியாது. *உங்கள் வலி ஒருவருக்கு சிரிப்பை ஏற்படுத்தலாம் ஆனால் உங்கள் சிரிப்பு யாருக்கும் வலியை ஏற்படுத்தக்கூடாது.

error: Content is protected !!