News December 4, 2024
வடிவேலு பாணியில் புகார்

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.
Similar News
News December 17, 2025
9 லட்சம் இந்தியர்கள் எங்கே?

கடந்த 5 ஆண்டுகளில் (2020-2024) ஏறக்குறைய 9 லட்சம் மக்கள் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் ராஜ்ய சபாவில் தெரிவித்துள்ளது. இது, அதற்கு முந்தைய 5 ஆண்டு காலத்தை (2015-2019) விட 30% அதிகம். குடியுரிமையை துறந்த இந்தியர்கள் எந்தெந்த நாடுகளில் குடியேறியுள்ளனர், என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 17, 2025
BREAKING: திமுக தேர்தல் அறிக்கை.. வந்தது அறிவிப்பு

கனிமொழி MP தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை குழு அமைத்து, கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. TKS இளங்கோவன், PTR பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். 2026 தேர்தல் களம் 4 முனை போட்டியாகவுள்ள நிலையில், ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் கவர்ச்சிகரமான திட்டங்களை திமுக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகை உயர்வு குறித்தும் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News December 17, 2025
இதை எதிர்க்கக் கூடவா தயக்கம்? CM ஸ்டாலின்

பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு, EPS பச்சை துரோகம் செய்வதாக CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். MGNREGA-வில் காந்தியின் பெயரை அகற்றிவிட்டு, வாய் சுளுக்கி கொள்ளும்படி ஹிந்தியில் பெயரிட்டிருப்பதாக கூறிய அவர், ஹிந்தி திணிப்பை எதிர்த்து வென்ற அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்துக் கொண்டு, இதை எதிர்க்கக் கூடவா தயக்கம் என கேள்வி எழுப்பியுள்ளார். கட்சியில் அண்ணாவின் பெயர் எதற்கு என மக்கள் கேட்பதாகவும் கூறியுள்ளார்.


