News December 4, 2024
வடிவேலு பாணியில் புகார்

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.
Similar News
News February 27, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 622 ▶குறள்: வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும். ▶பொருள்: எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், அறிவுடையவர்கள் மனம் தளராமல் அதை எதிர்கொள்ளும் வழியை சிந்திக்கும் போதே, அத்துன்பம் விலகிப் போய்விடும்.
News February 27, 2026
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் போர் பதற்றம்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் போர் பதற்றம். பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தலிபான்கள் எல்லையில் உள்ள 15 சோதனை சாவடிகளை கைப்பற்றியதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்த தாக்குதல் 40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். நடந்து வரும் எல்லை மோதல்கள் இருநாடுகளுக்கும் இடையேயான போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
News February 27, 2026
ஓட்டுநர் உரிம முறையில் மாற்றங்கள்..!

சாலை விபத்துகளை கட்டுப்படுத்த கிரேடு அடிப்படையிலான ஓட்டுநர் உரிம முறையை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதிவேகம், மது போதையில் ஓட்டுதல் போன்ற காரணங்களால் ஒவ்வொரு ஆண்டும் 1.8 லட்சம் பேர் இறக்கின்றனர். எனவே, விரைவில் புதிய முறையை கொண்டுவருவோம் என்றும் போக்குவரத்து விதிகளை மீறினால் பாயிண்ட்ஸ் குறைக்கப்பட்டு வரும் என்றும் மத்திய அமைச்சர் கட்கரி கூறியுள்ளார்.


