News December 4, 2024

வடிவேலு பாணியில் புகார்

image

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.

Similar News

News September 18, 2025

நடிகர் ரோபோ சங்கர் ICU-க்கு மாற்றம்

image

நேற்றைய படப்பிடிப்பின் போது <<17736001>>ரோபோ சங்கர் <<>>திடீரென மயங்கி விழுந்ததால், ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், ICU-விற்கு மாற்றப்பட்டுள்ளார். டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் குணமடைய வேண்டி பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு மெல்ல, மெல்ல குணமாகி வந்த நிலையில், தற்போது இப்படி ஏற்பட்டுள்ளது.

News September 18, 2025

இனி பாக்.,-ஐ தொட்டால் சவுதி வரும்!

image

பாகிஸ்தான் – சவுதி இடையே ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய 9 நாள்களில், இந்தியா – பாக்., போர் நடந்த சில நாள்களில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அது பொதுவான தாக்குதலாக கருதப்பட்டு எதிர் தாக்குதல் நடத்தப்படும். இருப்பினும் இந்தியா உடனான உறவு அப்படியே நீடிக்கும் என்று சவுதி கூறியுள்ளது.

News September 18, 2025

செப்டம்பர் 18: வரலாற்றில் இன்று

image

*உலக நீர் கண்காணிப்பு நாள். *1924 – மகாத்மா காந்தி இந்து-முசுலிம் ஒற்றுமைக்காக 21-நாள் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். 1945 – ஆதி திராவிடர் இயக்கத் தலைவர் இரட்டைமலை சீனிவாசன் உயிரிழந்தநாள். *1948 – ஐதராபாத் இராணுவம் சரணடைய ஒப்புக்கொண்டதை அடுத்து, இந்திய யூனியன் தனது ராணுவ நடவடிக்கையை கைவிட்டது. *2016 – ஜம்மு காஷ்மீரில் யூரி பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில், 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

error: Content is protected !!