News December 4, 2024
வடிவேலு பாணியில் புகார்

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.
Similar News
News February 21, 2026
MH முதல்வரின் மனைவி பதவி விலகினார்!

மகாராஷ்டிரா CM தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா, ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். 23 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்சிஸ் வங்கியில் இளம் நிர்வாக பயிற்சியாளராக இணைந்தேன். தற்போது சீனியர் துணைத் தலைவராக முழுமனதுடன் விலகுகிறேன் என அம்ருதா தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த திடீர் முடிவு ஏன், அரசியலில் கால் பதிக்க உள்ளீர்களா என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
News February 21, 2026
காரைக்குடியில் போட்டியா? சீமான் போடும் பிளான்

காரைக்குடியில் சீமான் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024 தேர்தலில் நாதக டெபாசிட் பெற்ற ஒரே தொகுதி இதுதான். அதேபோல், 2021 தேர்தலிலும் காரைக்குடியை உள்ளடக்கிய சிவகங்கை தொகுதியில் நாதக 14.80% வாக்குகளை பெற்றது. தனது சொந்த தொகுதியான இங்கு களமிறங்கினால், குடும்பத்தாரை வைத்து உள்ளூரில் வாக்கு சேகரித்துவிட்டு, தமிழகம் முழுவதும் தான் சுற்றுப்பயணம் செல்லலாம் என சீமான் திட்டமிட்டுள்ளாராம்.
News February 21, 2026
வெள்ளி கிலோவுக்கு ₹20,000 உயர்ந்தது

தங்கத்தை போன்றே வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹20 உயர்ந்து ₹290-க்கும், 1 கிலோ வெள்ளி ₹20,000 அதிகரித்து ₹2.90 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. இதனால், நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம், தங்கம் விலை சவரனுக்கு ₹2,080 உயர்ந்ததால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


