News December 4, 2024

வடிவேலு பாணியில் புகார்

image

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.

Similar News

News February 10, 2026

பிப்.12-ல் வங்கிகள் விடுமுறையா? வந்தாச்சு UPDATE

image

மத்திய அரசைக் கண்டித்து பிப்.12-ல் பல்வேறு தொழிலாளர் சங்கங்கள் <<19085187>>நாடு தழுவிய ஸ்டிரைக்கை<<>> அறிவித்துள்ளனர். இதனால், சில மாநிலங்களில் அன்றைய தினம் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், வங்கிகள் இயங்குமா என பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. தற்போதுவரை வங்கி விடுமுறை தொடர்பாக RBI எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதனால், பிப்.12-ல் வங்கி சேவைகள் பாதிக்கப்படாது. SHARE

News February 10, 2026

வாரத்திற்கு 2 முறை சிக்கன் சாப்பிட்டால் ஆபத்து..

image

100gm-க்கு குறைவாக சிக்கன் சாப்பிடுபவர்களுடன் ஒப்பிடும்போது, வாரத்திற்கு 300gm-க்கு மேல் சாப்பிடுபவர்களுக்கு 27% இறப்பு விகிதம் அதிகம் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. வாரத்திற்கு 2 முறைக்கு மேல் சிக்கன் சாப்பிடுபவர்களுக்கு கேன்சர் அபாயம் அதிகம் உள்ளதாம்; பெண்களை விட ஆண்களுக்கே இந்த பாதிப்பு அதிகமாம். பதப்படுத்தப்பட்ட சிக்கன் சாப்பிட்டால் இந்த ஆபத்து இரு மடங்காக அதிகரிக்குமாம். உஷாரா இருங்க.

News February 10, 2026

தேமுதிக மத்திய அரசில் பதவி கேட்கிறது: அதிமுக

image

தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக<<19093944>> L முருகன் அறிவித்த நிலையில்<<>>, அதனை திண்டுக்கல் சீனிவாசனும் உறுதி செய்துள்ளார். மத்திய அரசில் தேமுதிக பதவி கேட்பதால், பாஜகவிடமே பேசிக்கொள்ளும்படி அதிமுக தரப்பில் சொல்லிவிட்டோம் என கூறியுள்ளார். மேலும் தேமுதிகவின் எதிர்பார்ப்புகள், பிரச்னைகள் குறித்து மாநில அளவில் பேச முடியாததால், அக்கட்சியுடன் பாஜக தேசிய தலைமை பேசிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!