News December 4, 2024
வடிவேலு பாணியில் புகார்

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.
Similar News
News January 13, 2026
உழவர்களின் கண்ணீர் CM-க்கு மகிழ்ச்சியா? அன்புமணி

திமுக ஆட்சியில் உழவர்களின் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குவதாக CM ஸ்டாலினே கூறினால், அதை விடக் கொடுமையான கேலிக்கூத்து இருக்க முடியாது என அன்புமணி விமர்சித்துள்ளார். உழவர்களுக்கு தினமும் ₹30க்கும் குறைவாக மட்டுமே வருவாய் கிடைக்கிறது, ₹289.63 கோடி இழப்பீடு அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டதா? உழவர்களின் கண்ணீர் CM-க்கு மகிழ்ச்சியாக தெரிகிறதா? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பி கடுமையாக சாடியுள்ளார்
News January 13, 2026
மனச்சோர்வை குறைக்க உதவும் உணவுகள்!

மனச்சோர்வு என்பது நாள்பட்ட மன அழுத்தம், தூக்கமின்மை ஆகியவற்றால் ஏற்படுவது. இதனால், சிந்தனையில் தெளிவு இல்லாமல் குழப்பமாக உணர்தல், மறதி, நினைவாற்றல் கோளாறு, கவனக் குறைவு ஆகியவை ஏற்படும். இதனை சரிசெய்ய சில உணவு வகைகள் நமக்கு உதவுகின்றன. அவை என்னென்ன உணவுகள் என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News January 13, 2026
முன்னாள் எம்பி காலமானார்

கேரள காங்., (M) மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்பியுமான தாமஸ் குதிரவட்டம் (80) உடல்நலக்குறைவால் காலமானார். பிரிக்கப்படாத கேரள காங்கிரஸின் செயல் தலைவராகவும், நீண்டகால பொதுச் செயலாளராகவும் பணியாற்றியவர். மறைந்த K.M.மணியின் நெருங்கிய நண்பராக இருந்த இவர், அக்கட்சி வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றியுள்ளார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


