News December 4, 2024
வடிவேலு பாணியில் புகார்

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.
Similar News
News January 15, 2026
தமிழர் இல்லங்களில் பொங்கட்டும் இன்ப பொங்கல்

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக மக்களுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கலெனப் பொங்கிட, இனித்திடும் செங்கரும்பைச் சுவைத்து, செங்கதிரோனைப் போற்றிடும் தமிழர் திருநாளில், தமிழர் வாழ்வு செழித்திட வாழ்த்துகிறேன். தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கிடும் இந்த மகிழ்ச்சிப் பொங்கல், பன்மடங்காக பெருகும் எனவும் வாழ்த்து கூறி, வெல்வோம் ஒன்றாக! குறிப்பிட்டுள்ளார்.
News January 15, 2026
பொங்கலன்று கண்டிப்பாக இவற்றை மறக்காதீங்க!

பொங்கல் பண்டிகையில், சூரிய பகவானுக்கு உரித்தான கோதுமையை தானம் கொடுங்கள் *சூரிய பகவானுக்கு இட்லி பூ, செம்பருத்திப் பூவை சமர்ப்பணம் செய்வது சிறப்பான பலன்களை அளிக்கும் *உடன் பிறந்தவர்களுக்கு, சகோதர சகோதரிகளுக்கு முடிந்த சீர்வரிசையை செய்யுங்கள் *இந்த தைத்திருநாளில், தெரிந்த குழந்தைகளிடம் பொங்கல் வாழ்த்து சொல்லி, அவர்களிடம் ஒரு ₹10-ஐ கொடுங்கள். இந்த வருடம் செல்வ வளம் இரட்டிப்பாகும். SHARE IT.
News January 15, 2026
பொங்கலை கேளிக்கையாக்கும் திமுக: வானதி

பொங்கல் பண்டிகையை மதம் பேதம் இல்லாமல் அனைவரும் கொண்டாட வேண்டும் என CM ஸ்டாலின் கூறியதை வானதி விமர்சித்திருக்கிறார். இந்து மத அழிப்பை திமுக அடிப்படையாக கொண்டிருப்பதாக கூறிய அவர், இந்துக்களின் பண்டிகையான பொங்கலை New Year போல, வெறும் கேளிக்கையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது எனவும் கூறியுள்ளார். மேலும், பொங்கல் பண்டிகையின் ஆன்மிகத்தை அதிலிருந்து அகற்ற துடிக்கின்றனர் எனவும் பேசியுள்ளார்.


