News December 4, 2024
வடிவேலு பாணியில் புகார்

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.
Similar News
News February 3, 2026
படுத்த படுக்கையாகிவிட்டேன்: நடிகர் அரவிந்த்சாமி

90-களில் டாப் ஹீரோவாக இருந்த நடிகர் அரவிந்த்சாமி, திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போனார். இந்த இடைப்பட்ட காலத்தில் தான் படுத்த படுக்கையாக இருந்ததாக அரவிந்த்சாமி கூறியுள்ளார். 2005-ம் ஆண்டு நடந்த விபத்து தன்னை ஒன்றரை வருடம் முடக்கிவிட்டதாக தெரிவித்தார். அறுவை சிகிச்சை வேண்டாம் என முடிவெடுத்ததால், அந்த வலி நீண்ட நாள் தொடர்ந்ததாகவும், பிறகு ஆயுர்வேத சிகிச்சை மூலம் குணமடைந்ததாகவும் கூறினார்.
News February 3, 2026
IND-க்கு எதிராக விளையாட PAK வைத்த கண்டிஷன்!

T20I WC-ல் இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் வாரியம் நிபந்தனை ஒன்றை விதித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, T20I WC-ல் வங்கதேச அணியை சேர்த்தால்தான், பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் என கண்டிஷன் வைத்துள்ளதாம். முன்னதாக, இந்தியாவுக்கு எதிராக விளையாட போவதில்லை என பாகிஸ்தானின் முடிவு சர்வதேச விளையாட்டுகளின் ஒருமைப்பாட்டில் <<19026883>>பாதிப்பை உண்டாக்கும்<<>> எனவும் ICC தெரிவித்திருந்தது.
News February 3, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹640 உயர்ந்தது

தங்கம் விலை இன்று (பிப்.3) சவரனுக்கு ₹640 உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராமுக்கு ₹80 உயர்ந்து ₹14,030-க்கும், சவரன் ₹640 அதிகரித்து ₹1,12,240-க்கும் விற்பனையாகிறது. கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த <<19031901>>தங்கம்<<>>, இன்று மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதனால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


