News December 4, 2024
வடிவேலு பாணியில் புகார்

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.
Similar News
News February 1, 2026
2019- 2025 வரை.. FM நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் கேலரி!

இன்று மத்திய பட்ஜெட்டை FM நிர்மலா சீதாராமன், 9வது முறையாக தாக்கல் செய்யவுள்ளார். 2019-ம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வரும் அவர், அணிந்து வரும் புடவை, நாட்டின் ஏதோ ஒரு கலாச்சார பின்னணியை கொண்டதாக உள்ளது. இதுவரை FM நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தாக்கல் செய்ய வந்தபோது எடுத்த போட்டோக்களை மேலே கொடுத்துள்ளோம். போட்டோவை இடது பக்கமாக Swipe செய்து பார்க்கவும்.
News February 1, 2026
OFFICIAL: சினிமாவை விட்டு விலகுவதாக விஜய் அறிவிப்பு

விஜய், முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக தான் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது 33 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை விட்டு விலகுவது அவ்வளவு எளிதான முடிவு அல்ல என்றும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். விஜய் சினிமாவை விட்டு விலகுவது வருத்தம் அளிப்பதாக திரைத்துறையினர் பலரும் கவலை தெரிவித்திருந்தனர். விஜய் ஒரு சிறந்த நடிகர் என்று அரசியல் தலைவர்களும் கூறி வருகின்றனர். நீங்க மிஸ் பண்றீங்களா?
News February 1, 2026
விஜய்யின் பில்டப் ஓவராக உள்ளது: திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுகவை ஊழல் கட்சி என விமர்சித்த விஜய்க்கு, EX அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அடுக்கடுக்கான கேள்விகளை வைத்துள்ளார். நீங்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு? உண்மையிலேயே White-ல் வாங்குவது எவ்வளவு? பிளாக்கில் வாங்குவது எவ்வளவு? என கேட்டுள்ளார். விஜய் வருமானத்தை மறைத்ததாக IT வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், அவர் பில்டப் மட்டும் ஓவராக கொடுப்பதாகவும் திண்டுக்கல் சீனிவாசன் சாடியுள்ளார்.


