News December 4, 2024
வடிவேலு பாணியில் புகார்

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.
Similar News
News February 25, 2026
டெலிகிராம் நிறுவனர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு

பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவித்ததாக டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் மீது ரஷ்யா விசாரணையைத் தொடங்கியுள்ளது. அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேற்கத்திய மற்றும் உக்ரேனிய உளவுத்துறை டெலிகிராம் செயலியை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனை, பேச்சுரிமையை நசுக்கும் முயற்சி என்று துரோவ் விமர்சித்துள்ளார்.
News February 25, 2026
காந்தி பொன்மொழிகள்!

*கடமையை முன்னிட்டு செய்த செயலுக்கு வெகுமதியை எதிர்பார்க்கக் கூடாது. *தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை. *தியாகம் செய்துவிட்டு வருந்துபவன் தியாகி அல்ல. *மயக்கம் உண்டாகும் போது அறிவு பயன்படாது. நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக் காப்பாற்ற முடியும். *நல்ல நண்பனை விரும்பினால் நல்ல நண்பனாய் இரு. *எப்போதும் உண்மையை மறைக்காது சொல்லக்கூடிய மனத்திடம் வேண்டும்.
News February 25, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஆள்வினையுடைமை ▶குறள் எண்: 620 ▶குறள்: ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர். ▶பொருள்: ஊழ்(செயலுக்கு இடையூறாக வருவது) என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள். சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்.


