News December 4, 2024
வடிவேலு பாணியில் புகார்

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.
Similar News
News January 19, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 19, தை 5 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: பிரதமை ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.
News January 19, 2026
அமெரிக்க வரி உயர்வால் கோவையில் பாதிப்பு

அமெரிக்காவில் இந்தியா சார்ந்த பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்பட்டதால், குறிப்பாக ஜவுளி துறையில் கோவையும் திருப்பூரும் பெரும் பாதிப்புகளை சந்திக்கின்றன. மேலும் மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஜவுளி, வார்ப்படம், மோட்டார் பம்ப் தொழில் நிறுவனங்களில் உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக ஜவுளி தொழில் துறையினர் கூறுகின்றனர்.
News January 19, 2026
உங்க கார், பைக்குக்கு உரிய ஆவணம் இருக்கா?

மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் Vahan தரவுத்தளத்தில் மொத்தம் 40.7 கோடி வாகனங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில், 30 கோடி வாகனங்கள்; அதாவது, 70%-க்கும் அதிகமான வாகனங்கள் புதுப்பிக்கப்பட்ட உரிய ஆவணங்கள் இன்றி இயங்கு வருகின்றன. 2ஆண்டுகள் கடந்தும் விதிகளைப் பின்பற்றாத வாகனங்களின் பதிவு, தரவுத்தளத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படும். இதனால், அவை சட்டப்படி இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்படும்.


