News December 4, 2024

வடிவேலு பாணியில் புகார்

image

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.

Similar News

News February 24, 2026

நல்லகண்ணுவுக்கு அதி தீவிர சிகிச்சை

image

சென்னை ராஜீவ் காந்தி அரசு ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவரும் CPI மூத்த தலைவர் நல்லகண்ணுவின்(101) உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. அவருக்கு அதி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஹாஸ்பிடல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. HIGH BP, சிறுநீரக கோளாறு, உணவை விழுங்க முடியாமை உள்ளிட்ட பிரச்னைகளால் அவர் அவதிப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

News February 24, 2026

உண்மைக்காக குரல் கொடுப்பது குற்றமல்ல: ராகுல்

image

டெல்லி AI மாநாட்டில் <<19213485>>அமைதி வழியில் போராடிய இளைஞர் காங்கிரசாரை கைது<<>> செய்தது சர்வாதிகார போக்கு, கோழைத்தனத்தின் சான்று என ராகுல்காந்தி சாடியுள்ளார். உண்மைக்காக குரல் கொடுப்பது தேசபக்தி; அது குற்றமல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். ‘சமரசம் செய்துகொண்ட பிரதமருக்கு’ எதிராக, நாட்டின் நலனுக்காக அச்சமின்றி குரல் எழுப்பிய உதய் பானு தலைமையிலான இளைஞர் காங்கிரசாரை நினைத்து பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

News February 24, 2026

பங்குச் சந்தைகளில் பெரும் சரிவு.. ₹3 லட்சம் கோடி காலி

image

இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் 1068 புள்ளிகள் சரிந்து 82,225 ஆகவும், நிஃப்டி 276 புள்ளிகள் சரிந்து 25,424 ஆகவும் வர்த்தகம் முடிவடைந்துள்ளது. ரூபாய் மதிப்பு சரிவு, ஐடி பங்குகளின் விற்பனை அதிகரிப்பு, உலகளாவிய சந்தைகளில் ஏற்ற இறக்கம், கச்சா எண்ணெய் விலையில் எழுச்சி ஆகியவை சரிவுக்கு காரணம். இன்று ஒரேநாளில் ₹3 லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டாளர்கள் இழப்பை சந்தித்துள்ளனர்.

error: Content is protected !!