News December 4, 2024

வடிவேலு பாணியில் புகார்

image

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.

Similar News

News February 20, 2026

₹3,500 டெபாசிட் செய்தால் ₹2.50 லட்சம் வருமானம்!

image

இந்திய தபால் துறை நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான பல்வேறு முதலீட்டு வாய்ப்பை வழங்கி வருகிறது. அதில் RD என்ற அசத்தலான சேமிப்புத் திட்டமும் ஒன்று. இதில் ஒருவர் மாதத்திற்கு ₹3,500 வீதம் 60 மாதங்களுக்கு டெபாசிட் செய்தால், மொத்த வைப்புத்தொகை ₹2,10,000 ஆக இருக்கும். 6.7% வட்டி விகிதத்தில், முதிர்ச்சியின் போது மொத்தம் ₹2,49,776 கிடைக்கும். அதாவது, உங்களுக்கு வட்டியாக மட்டுமே சுமார் 39,776 கிடைக்கும்.

News February 20, 2026

திமுக விருப்ப மனு விநியோகம் தொடங்கியது

image

தமிழகம் & புதுச்சேரி சட்டமன்றங்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்கியுள்ளதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. மேலும், தேர்தல் மேலாண்மை & ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்டவற்றை புதுச்சேரி காங்., மற்றும் தொகுதிப் பங்கீடு பற்றி பேச மதிமுகவும் குழு அமைத்துள்ளது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

News February 20, 2026

மோடி பெயர் சொல்லி நயினாருக்கு CM பதில்!

image

அதிரடி விவாதங்கள் நடைபெறும் TN சட்டமன்றத்தில் அவ்வபோது சிரிப்பலைகளும் எழுவதுண்டு. அதன்படி மகளிர் உரிமை தொகை ₹5,000 வழங்கப்பட்டது குறித்து நயினார் பேசினார். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், இதை பற்றி நீங்கள் அளித்த பேட்டியில், ‘மோடி மஸ்தான் வேலை மாதிரி இருக்கே’ என்றீர்கள். PM மோடியை தான் சொன்னீர்களா என்று தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூற, எதிர்க்கட்சி MLA-க்கள் உள்பட அவையில் சிரிப்பலை எதிரொலித்தது.

error: Content is protected !!