News December 4, 2024
வடிவேலு பாணியில் புகார்

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.
Similar News
News February 7, 2026
சட்டமன்ற தேர்தலில் சீமானுக்கு வந்த புதிய சிக்கல்

பேரவை தேர்தலுக்காக NTK விவசாயி சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பரப்புரை செய்து வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவை சேர்ந்த இந்திய குடியரசு கட்சிக்கு(அத்வாலே) 2021-ல் நாதக போட்டியிட்ட ‘கரும்பு விவசாயி’ சின்னத்தை ECI ஒதுக்கியுள்ளது. இதனால், ‘ஏர் கலப்பை விவசாயி’ சின்னத்தில் களமிறங்கும் வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 2 சின்னங்களும் ஒரேமாதிரி உள்ளதால் மக்களுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.
News February 7, 2026
திங்கள் முதல் தொடங்கும் செய்முறைத் தேர்வுகள்!

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்.9 முதல் தொடங்குகின்றன. இதற்கான ஏற்பாடுகளை தயார் நிலையில் வைக்குமாறு அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 9 – 11 மணி, காலை 11.30 – மதியம் 1.30 மணி, மதியம் 2.30 – மாலை 4.30 மணி என 3 பிரிவுகளாக செய்முறைத் தேர்வுகளை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ALL THE BEST மாணவர்களே, கலக்குங்க!
News February 7, 2026
8 குழந்தைகள் உள்பட 24 பேரை கொன்ற கிளர்ச்சி படை!

சூடான் உள்நாட்டு போரால் இடம்பெயர்ந்த மக்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது RSF என்ற கிளர்ச்சி படையினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில், 8 குழந்தைகள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்த குழந்தைகளில் 2 பச்சிளம் குழந்தைகள் என்ற செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை உறுதி செய்துள்ள சூடான் டாக்டர்கள் குழு, மக்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்கும்படி சர்வதேச அமைப்புகளுக்கு வலியுறுத்தியுள்ளது.


