News December 4, 2024
வடிவேலு பாணியில் புகார்

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.
Similar News
News January 16, 2026
பிரபல நடிகை காலமானார்

பிரபல பெங்காலி நடிகை ஜெயஸ்ரீ கபீர் உடல்நலக்குறைவால் லண்டனில் காலமானார். சத்யஜித்ரேவின் ‘பிரதித்வந்தி’ படம் மூலம் அறிமுகமான இவர், 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியாவில் மட்டுமின்றி வங்கதேசத்திலும் புகழ்பெற்ற நடிகையாக இருந்தார். திருமணம் விவாகரத்தில் முடிந்ததால், லண்டனில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News January 16, 2026
கைகள் எப்போதும் ஜில்லென இருக்கிறதா? இத கவனிங்க!

குளிர்காலம் மட்டுமின்றி, சிலருக்கு எல்லா நேரங்களிலும் கைகள் ஜில்லென இருப்பது ஆரோக்கிய பிரச்னையின் அறிகுறி என்கின்றனர் டாக்டர்கள். முக்கியமாக *ரத்த ஓட்ட குறைபாடு *தைராய்டு பாதிப்பு *ரத்த சோகை *ரேனாட் நோய் பாதிப்பு *சர்க்கரை நோய் *மன அழுத்தம். தீர்வுகள்: *கையுறை அணியவும் *உடற்பயிற்சி செய்யுங்கள் *நிறைய தண்ணீர் குடிக்கவும் *மன அழுத்தத்தை குறைக்கவும் *இரும்புச்சத்து உணவுகளை சாப்பிடவும்.
News January 16, 2026
பிளிப்கார்ட், மீஷோ, அமேசானுக்கு அதிர்ச்சி

வாக்கி-டாக்கிகளை சட்டவிரோதமாக உரிய அனுமதி பெறாமல் விற்பனை செய்ததற்காக அமேசான், பிளிப்கார்ட், மீஷோ, மெட்டா உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங்கள் மீது நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ₹10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. விதிகளின்படி, குறிப்பிட்ட அதிர்வெண்ணுக்கு மேல், வயர்லெஸ் சாதனங்களுக்கு உரிமம் மற்றும் ETA சான்றிதழ் பெறுவது கட்டாயம்.


