News December 4, 2024

வடிவேலு பாணியில் புகார்

image

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.

Similar News

News February 22, 2026

9 மாவட்டங்களில் மழை அலர்ட்

image

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ள நிலையில், தென் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல், மதுரையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. மேலும், அடுத்த ஒருமணி நேரத்திற்கு தேனி, திருப்பூர், நெல்லை, குமரி, ஈரோடு, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க ஊரில் மழை பெய்யுதா?

News February 22, 2026

காங்கிரஸுக்காக விஜய் காத்திருக்கிறார்: குஷ்பு

image

தன்னை யாராவது சேர்த்துக் கொள்வார்களா என முயன்று வரும் OPS-ஐ பார்த்தால் பாவமாக உள்ளதாக குஷ்பு கூறியுள்ளார். திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது அவர்களது விருப்பம், ஆனால் விஜயகாந்த் இருந்திருந்தால் இக்கூட்டணி அமைந்திருக்காது என்றார். திமுக – காங்., கூட்டணி இன்னும் உறுதியானதாக தெரியவில்லை என்ற அவர், காங்., கட்சிக்குள்ளேயே விரிசல் உள்ளதால், விஜய் அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் என கூறினார்.

News February 22, 2026

BREAKING: 2 அமைச்சர்கள் மருத்துவமனையில் அனுமதி

image

<<19105647>>துரைமுருகனை <<>>தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடல்நலக்குறைவால், கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 நாள்களாக தொடர் காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சிகிச்சைக்காக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரின் உடல்நலம் குறித்து கேட்டறிய CM நேரில் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!