News December 4, 2024
வடிவேலு பாணியில் புகார்

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.
Similar News
News February 24, 2026
சேலம்: இரவு ரோந்து காவலர்கள் விபரம்

சேலம் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களைத் தடுப்பதற்கும், குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதற்கும் காவல்துறையினர் தினந்தோறும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பிப்.24 அன்று இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
News February 24, 2026
அதிமுகவின் வாக்குறுதிகள் தாக்கத்தை ஏற்படுத்தாது: விசிக

அதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் EPS தேர்தல் <<19224903>>வாக்குறுதிகளை <<>>கொடுத்துள்ளதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். அதிமுகவின் வாக்குறுதிகள் உழைக்கின்ற மக்களிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், திமுக அறிவித்ததற்கு போட்டியாக அதிமுக அறிவித்துள்ளது என்ற புரிதல் மக்களுக்கு இருக்கும் எனவும் கூறியுள்ளார். மேலும், இது தேர்தலிலும் எந்த தாக்கத்தை ஏற்படுத்தாது என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
News February 24, 2026
சற்றுமுன்: டிவி நடிகர் காலமானார்

பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ MTV Splitsvilla சீசன் 7 போட்டியாளரும், முறை மிஸ்டர் இந்தியா பட்டத்தை வென்றவருமான மயங்க் பவார் காலமானார். சிறிது காலமாக புற்றுநோயுடன் போராடி வந்த அவர் தனது 37 வயதில் இன்று மரணத்தை தழுவியுள்ளார். உடற்பயிற்சி மாடலாகவும் நடிகராகவும் அறியப்பட்ட மயங்க், இவ்வளவு இளம் வயதில் உயிரிழந்ததை கேட்டு அதிர்ச்சியடையந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


