News December 4, 2024
வடிவேலு பாணியில் புகார்

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.
Similar News
News January 27, 2026
முதலிரவு முடியும் முன்பே குழந்தை பிறந்தது

முதலிரவு முடிவதற்குள்ளாகவே பிரசவ வலி வந்து ஒரு பெண் குழந்தை பெற்றெடுத்த அதிர்ச்சி சம்பவம் உ.பி.,யில் நிகழ்ந்துள்ளது. திருமணத்திற்கு முன்பே காதலித்து வந்த இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். பின்னர் கருவுற்றது தெரிய வர, போலீஸை அணுகி இருவீட்டாருடன் பேச்சுவார்த்தை நடத்தி திருமணம் நடைபெற்றுள்ளது. முதலிரவு அன்று பெட் ரூமுக்கு சென்ற மணமகள் வயிறு வலியால் துடிக்கவே, குழந்தை பிறந்துள்ளது.
News January 27, 2026
காப்பர்தான் அடுத்த தங்கமா?

தங்கம், வெள்ளி விலையை தொடர்ந்து இப்போது காப்பரின்(செப்பு) விலையும் அதிரடியாக உயர்வு கண்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்களின் கவனம் காப்பரின் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் இது 62% லாபத்தை முதலீட்டாளர்களுக்குத் தந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தை அறுவடை செய்ய வேண்டுமானால், அதில் டிரேடிங் செய்வது நல்ல ஆப்ஷன் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால், சரியான ஆலோசனை பெற்று முதலீடு செய்யுங்க.
News January 27, 2026
வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும் ஐரோப்பிய டீல்: PM

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற <<18909962>>வர்த்தக ஒப்பந்தம்<<>> இந்திய மக்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கும் என PM மோடி கூறியுள்ளார். 4-வது இந்திய எரிசக்தி வாரத்தை தொடங்கி வைத்துப் பேசிய பிறகு அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஒப்பந்தம் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% மதிப்புடையது என்றும் உலக வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


