News December 4, 2024

வடிவேலு பாணியில் புகார்

image

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.

Similar News

News December 15, 2025

இந்த எண்கள் பெண்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும்!

image

பெண்களின் பாதுகாப்பிற்கு அரசு பல அவசர உதவி எண்களை கொடுத்துள்ளது. பின்வரும் இந்த எண்களை அனைத்து பெண்களும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் ★தேசிய பெண்கள் ஆணையம் – 181 ★பெண்கள் காவல் உதவி எண் – 1091 ★குழந்தைகள் உதவி எண் – 1098 ★அமிலத் தாக்குதல் பாதிக்கப்பட்டோருக்கான உதவி – 07533066009 ★சைபர் குற்ற உதவி எண் – 1930. அனைத்து பெண்களும் அறிந்து கொள்ள வேண்டிய இந்த பதிவை அதிகளவில் ஷேர் பண்ணுங்க.

News December 15, 2025

அரையாண்டு விடுமுறையை அறிவித்தது தமிழக அரசு

image

டிச.23-ம் தேதியுடன் அரையாண்டு தேர்வு நிறைவடையும் நிலையில், பள்ளி விடுமுறை நாள்கள் குறித்து தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, டிச.24-ம் தேதி முதல் ஜன.4-ம் தேதி வரை என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. மொத்தமாக, 12 நாள்கள் விடுமுறை வருவதால், டூர் செல்ல இப்போதே திட்டமிடுங்கள். சிறப்பு பஸ்கள் தொடர்பான அறிவிப்பையும் அரசு விரைவில் வெளியிட வாய்ப்புள்ளது.

News December 15, 2025

பரிதாப நிலையில் பிரபல தமிழ் நடிகை (PHOTO)

image

தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோருடன் காமெடியில் கலக்கிய நடிகை வாசுகி தற்போது ஆந்திராவில் முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார். மக்களை சிரிப்பில் ஆழ்த்திய அவர், உடல் நலிவுற்று பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவது பெரும் சோகம். ஆந்திர DCM பவன் கல்யாண், நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் வாசுகிக்கு ₹4 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர். நடிகர் சங்கத்திடமும் அவர் உதவி கோரியுள்ளார்.

error: Content is protected !!