News December 4, 2024
வடிவேலு பாணியில் புகார்

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.
Similar News
News March 2, 2026
செங்கோட்டையன் எடுத்தது நல்ல முடிவு: சசிகலா

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பலரும் திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்துள்ளனர். இதில் தனிக்கட்சி தொடங்கியுள்ள சசிகலா, திமுகவில் OPS இணைந்தது துரதிருஷ்டவசமானது; அவரின் அழிவுக்காலம் நெருங்கிவிட்டது என விமர்சித்திருந்தார். இந்நிலையில் எதிரியுடனும், துரோகிகளுடனும் சேராமல், செங்கோட்டையன் புதிய கட்சிக்கு சென்றுள்ளார்; அதுவரைக்கும் அவரின் முடிவு நல்லது என சசிகலா மனம் திறந்துள்ளார்.
News March 2, 2026
பிரபல தமிழ் நடிகர் அப்பா ஆனார் ❤️❤️

நடிகர் ஹரிஷ் கல்யாண் – நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. சோஷியல் மீடியாவில் அறிக்கை வெளியிட்டுள்ள ஹரிஷ், தனது இதயம் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும், நாங்கள் அழகான புதிய அத்தியாயத்தை தொடங்க இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் வளரும் நட்சத்திரமாக அறியப்படும் ஹரிஷ் கல்யாண், 2022-ல் நர்மதாவை கரம்பிடித்தார்.
News March 2, 2026
ஈரானுக்கு வளைகுடா நாடுகள் எச்சரிக்கை!

ஈரானின் தொடர் தாக்குதலையடுத்து கத்தார், சவுதி, UAE, பஹ்ரைன், ஓமன், குவைத் ஆகிய 6 நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. பின்னர் 6 நாடுகளும் கூட்டாக ஈரானை கடுமையாக எச்சரித்துள்ளன. உடனடியாக தாக்குதலை நிறுத்தவில்லை என்றால், தற்காத்துக்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர். ஈரானின் தாக்குதல் சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.


