News December 4, 2024
வடிவேலு பாணியில் புகார்

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.
Similar News
News November 25, 2025
2 நாள்களில் 644 புள்ளிகள் சரிந்துள்ளது சென்செக்ஸ்

தொடர்ந்து இரண்டாவது நாளாக பங்குச்சந்தை 300 <<18376719>>புள்ளிகளுக்கு மேல்<<>> சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. சென்செக்ஸ் 313 புள்ளிகள் சரிந்து 84,587 புள்ளிகளிலும், நிஃப்டி 74 புள்ளிகள் சரிந்து 25,884 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. HDFC Bank, Adani Enterprises, Infosys உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன. நீங்கள் வாங்கிய SHARE உங்களுக்கு லாபம் தந்ததா?
News November 25, 2025
கமலாலயத்தில் வேலைக்கு சேர வேண்டியவர் கவர்னர்: ரகுபதி

தமிழகத்தில் பிஹாரிகள் அச்சுறுத்தப்படுவதாக கவர்னர் R.N.ரவி குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் கவர்னர் தவறான தகவல்களை பரப்பி வருவதாக அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். தமிழர்களுக்கு எதிராக பேசுவதையே கவர்னர் வேலையாக வைத்துள்ளதாகவும், கமலாலயத்தில் வேலைக்கு சேர வேண்டியவர் R.N.ரவி எனவும் கடுமையாக சாடியுள்ளார். தமிழகம் தனித்து செயல்படுவதாக கவர்னர் வைத்த குற்றச்சாட்டையும் அவர் மறுத்துள்ளார்.
News November 25, 2025
அடுத்தடுத்து விக்கெட்.. இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின், 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஜெய்ஸ்வால் 13 ரன்களிலும், ராகுல் 6 ரன்களில் அடுத்தடுத்த அவுட்டாகி வெளியேறினர். தற்போது இந்திய அணி 21/2 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது. சாய் சுதர்சன், குல்தீப் யாதவ் தற்போது களத்தில் உள்ளனர். இன்னும் வெற்றி பெற 528 ரன்கள் தேவை.


