News December 4, 2024

வடிவேலு பாணியில் புகார்

image

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.

Similar News

News November 16, 2025

உருவ கேலிக்கு நச் பதில் கொடுத்த கயாடு

image

உருவ கேலி குறித்து நடிகை கயாடு லோஹரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எல்லோருக்கும் உடல் அமைப்பு ஒரே மாதிரி இருக்காது, என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், அனைவருக்கும் ஒரே மாதிரியான உடல் அமைப்பு இருந்தால் தனித்தும் இல்லாமல் போய்விடும் எனவும், இன்றைய நிலையில், சோஷியல் மீடியாவில், உருவ கேலி குறித்த விமர்சனங்களில் இருந்து யாரும் தப்ப முடியாது என்றும் கூறினார்.

News November 16, 2025

பிஹாரில் திடீரென 3 லட்சம் வாக்காளர்கள் வந்தது எப்படி?

image

பிஹாரில் SIR-ன் முடிவில் 7.42 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, தேர்தலின் போது திடீரென 3 லட்சம் உயர்ந்து 7.45 கோடியாக மாறியது எப்படி என காங்., கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள ECI அதிகாரிகள், வேட்புமனு தாக்கலுக்கு 10 நாள்கள் முன்பு வரை, வாக்குரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என்ற விதி உள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, தகுதியான வாக்காளர்கள் இணைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.

News November 16, 2025

USA வரிவிதிப்பால் ₹7,064 கோடி நஷ்டம்

image

அமெரிக்க வரிவிதிப்பால் இந்தியாவின் ரத்தின கற்கள், வைரம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 2024 அக்டோபரில் ₹26,237 கோடியாக இருந்த ஏற்றுமதி, தற்போது ₹19,173 கோடியாக குறைந்துள்ளது. அதேபோல், பொம்மை பொருள்களின் ஏற்றுமதியும் வெகுவாக குறைந்துள்ளது. இந்திய பொருள்களின் அதிக விலை காரணமாக, அமெரிக்க வாடிக்கையாளர்கள் பிற நாடுகளின் இறக்குமதிகளை வாங்கி வருகின்றனர்.

error: Content is protected !!