News December 4, 2024
வடிவேலு பாணியில் புகார்

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.
Similar News
News November 20, 2025
கள்ளக்குறிச்சியில் இன்று எங்கெல்லாம் மின் தடை?

கள்ளக்குறிச்சி: பெத்தாசமுத்திரம் துணை மின் நிலையத்தில் இன்று (நவ.20) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை நைனார்பாளையம் வி .அலம்பலம் ,வி. கிருஷ்ணாபுரம், கீழ்குப்பம், பெத்தா சமுத்திரம், தோட்டப்பாடி பூண்டி, காளசமுத்திரம், நீலமங்கலம், நிறைமதி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
News November 20, 2025
சிறப்பு TET தேர்வு அறிவிப்பு வாபஸ்

SC உத்தரவு படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு TET தேர்வு 2026 ஜனவரியில் நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த அறிவிப்பை தனது இணையதளத்தில் இருந்து நீக்கி, TRB வாபஸ் பெற்றுள்ளது. அறிவிப்பில் சில தவறுகள் உள்ளதாகவும், அவை களையப்பட்டு, விரைவில் <<18329505>>TET<<>> தேர்வுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் TRB அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News November 20, 2025
பார்வையால் நெஞ்சை கிள்ளும் ஸ்ரேயா (PHOTOS)

பெண் ஓவியமாக ரசிகர்களின் இதயத்தை கவர்ந்திழுத்த நடிகை ஸ்ரேயா, கடைசியாக ‘ரெட்ரோ’ படத்தின் ‘Love Detox’ பாடலில் நடனமாடியிருந்தார். இந்நிலையில், வெள்ளை நிற சேலையில் சிற்பி வடித்த சிலை போல் காட்சியளிக்கும் லேட்டஸ்ட் போட்டோஸை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை ஹார்ட்டின்களை பறக்க வைத்துள்ளார். ஸ்ரேயா நடிப்பில் உங்களுக்கு பிடித்த படம் எது?


