News December 4, 2024
வடிவேலு பாணியில் புகார்

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.
Similar News
News December 26, 2025
பெண் குழந்தைகளின் படிப்புக்கு காசு தரும் அரசு

கிராமப்புறங்களில் அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் MBC/DNC சமூகத்தை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு TN அரசு ஊக்கத்தொகை வழங்குகிறது. அதன்படி, 3 – 5-ம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ₹500-ம், 6-வது பயிலும்போது ₹1000-ம் வழங்கப்படுகிறது. இதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹1 லட்சத்துக்கு மேல் இருக்கக் கூடாது. திட்டத்திற்கு விண்ணப்பிக்க பள்ளியின் தலைமை ஆசிரியரை அணுகவும். SHARE.
News December 26, 2025
முதல் சம்பளத்தில் விஜய் என்ன செய்தார் தெரியுமா?

விஜய் தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த போது அவருக்கு 18 வயதுதான். அப்போதே மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற சிந்தனை அவருக்கு மேலோங்கி இருந்ததாக விஜய்யின் நண்பரும் நடிகருமான தாமு சொல்கிறார். தன்னுடைய முதல் படத்திற்கு வாங்கிய சம்பளத்தில் ஏழை எளியோருக்கு புடவை, உணவு பொருள்களை விஜய் வாங்கிக்கொடுத்தாராம். இந்த குணம் தான் அவருக்கு தற்போது வரை நீடிப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
News December 26, 2025
பீர் பிரியர்களுக்கு.. HAPPY NEWS

பீர் குடித்தால் உடலுக்கு நல்லதல்ல என்பது பொது அறிவுரை. அதை மாற்றும் விதமாக Beer-ஐ வைத்து தடுப்பூசியை உருவாக்கியுள்ளார் USA ஆய்வாளர் கிறிஸ் பக். ஈஸ்ட் செல்களை வைரஸ் துகள்களுடன் இணைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் தொழில்நுட்பத்தை முயற்சித்துள்ளார். இந்த பீரை குடித்து பரிசோதித்ததில், உடலில் Antibodies உருவானது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவ துறையில் இது ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது.


