News December 4, 2024

வடிவேலு பாணியில் புகார்

image

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.

Similar News

News February 6, 2026

தங்கம், வெள்ளி விலை.. ஒரே நாளில் அதிரடியாக குறைந்தது

image

நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ₹4,640 குறைந்து மக்களை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்தது. அதேபோல், வெள்ளியும் 1 கிராம் ₹20 குறைந்து ₹300-க்கு விற்பனையானது. இந்நிலையில், தங்கம் விலை இன்றும் அதிரடியாக குறைய மிகப்பெரிய வாய்ப்புள்ளது. ஏனென்றால், சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ் தங்கம் $192.06 (இந்திய மதிப்பில் ₹17,348) குறைந்து $4,742.36 ஆக உள்ளது. எனவே, இன்று தங்கம் வாங்க நினைப்போர் ரெடியா இருங்க.

News February 6, 2026

WPL: RCB-ன் சாம்பியன் கொண்டாட்டம் (PHOTOS)

image

18 ஆண்டுகளாக ஒரு கோப்பைக்காக தவியாய் தவித்த RCB ரசிகர்களுக்கு, தொடர்ச்சியாக 3 கோப்பைகள் கிடைத்துள்ளன. 2024-ல் கோப்பையை வென்ற RCB பெண்கள் அணி, நேற்று 2-வது முறையாக கோப்பையை முத்தமிட்டது. இந்த சந்தோஷத்தை அவர்கள் ஆனந்தமாக கொண்டாடி தீர்த்த போட்டோக்களை மேலே கொடுத்துள்ளோம். இடது பக்கமாக Swipe செய்து, பாருங்க. IPL இந்த ஆண்டு மீண்டும் RCB ஆண்கள் அணி, சாம்பியன் ஆகுமா?

News February 6, 2026

கருவுறாமை பிரச்னையா? இந்த மூலிகை சரி செய்யும்!

image

சதாவரி மூலிகை ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்க உதவுவதாக சித்தா டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த வேரின் சாறை காலை, மதியம், மாலை என 4 ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் 2 ஸ்பூன் சர்க்கரை கலந்து குடிக்கலாம். இதனை தொடர்ந்து 5 நாள்களுக்கு செய்துவர மாதவிடாய் பிரச்னைகள், மன அழுத்தம், கருவுறாமை, செரிமான கோளாறு கூட சரியாகும் என்கின்றனர். இந்த அற்புதத்தை அனைவரும் அறிய, SHARE THIS.

error: Content is protected !!