News December 4, 2024
வடிவேலு பாணியில் புகார்

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.
Similar News
News December 9, 2025
இந்த கீரையில் இவ்வளவு நன்மைகளா?

பொதுவாக கீரை என்றாலே ஆரோக்கியமான உணவு தான். மண்ணின் பொக்கிஷம் எனப்படும் பருப்பு கீரையில் ஏராளமான நன்மைகள் உள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். *ஒமேகா-3 அதிகம் உள்ளதால்
இதயத்திற்கு நல்லது *கெட்ட கொழுப்பை குறைப்பதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது *இதயத்தை சுற்றி கொழுப்பு படிவதை தடுக்கிறது *மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது *கண், சருமத்திற்கு நல்லது *மலச்சிக்கல் குணமாகும் *குடல் நோய்களை தடுக்கிறது.
News December 9, 2025
கரூர் துயரத்தில் இருந்து பாடம் கற்ற விஜய்

கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு, முதல்முறையாக விஜய்யின் மக்கள் சந்திப்பு புதுவையில் நடந்து வருகிறது. திருச்சி, அரியலூர், நாகை, நாமக்கலில் நடந்த மக்கள் சந்திப்பின்போது, ரோடு ஷோ நடத்தினார். ஆனால், புதுவையில் அதுபோன்ற நிகழ்வு எதுவும் நடக்கவில்லை. சென்னையில் இருந்து புதுச்சேரி உப்பளம் வரை ஆரவாரமும் இன்றி காரிலேயே பயணித்த விஜய், பிரசார வாகனத்தில் பேரணியாக செல்வதை முற்றிலும் தவிர்த்துவிட்டார்.
News December 9, 2025
சற்றுமுன்: அதிமுகவில் இருந்து விலகினர்

ஒருபுறம் விஜய்யின் பரப்புரை வேகமெடுக்க ஆரம்பித்துள்ள நிலையில், மறுபுறம் செங்கோட்டையன் மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்நிலையில், அதிமுக சத்தியமங்கலம் ஒன்றிய செயலாளர் என்.என்.சிவராஜ் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகி செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். மேலும், KAS கை காட்டும் நபருக்குத்தான் எங்கள் ஓட்டு என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


