News December 4, 2024

வடிவேலு பாணியில் புகார்

image

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.

Similar News

News January 27, 2026

நாளை JEE தேர்வு.. இதை மறக்காதீங்க

image

பொறியியல் படிப்புகளுக்கான JEE மெயின் முதற்கட்ட தேர்வு நாளை நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் பேர் இத்தேர்வை எழுதவுள்ளனர். முதல் செஷன் காலை 9 முதல் 12 மணி, இரண்டாவது செஷன் மதியம் 3 முதல் 6 மணி வரையில் நடைபெறவுள்ளது. இதில் ஹால் டிக்கெட், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, அடையாள அட்டை, பள்ளி ஐடி கார்டு ஆகியவற்றை தவறாமல் எடுத்துச் செல்லுங்கள். 8 மணிக்கே தேர்வு மையத்திற்கு சென்றுவிடுங்கள்.

News January 27, 2026

சற்றுமுன்: கூட்டணி முடிவை அறிவித்தார் பிரேமலதா

image

பிப்ரவரி மாதம் முழுவதும் நேரம் இருக்கிறது, எனவே நல்ல முடிவெடுத்து பிப்., நடுவில் கூட்டணி பற்றி அறிவிப்போம் என பிரேமலதா கூறியுள்ளார். யார் யாருக்கு எந்த தொகுதி என முடிவு செய்து வேட்பாளர்களை அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை தேமுதிக, தங்களது கூட்டணியை இறுதி செய்யாத நிலையில், நேற்று கவர்னர் தேநீர் விருந்தின்போது தேமுதிகவின் சுதீஷ், அதிமுக தலைவர்களுடன் பேசியது பேசுபொருளானது.

News January 27, 2026

உங்க உப்புல அயோடின் இருக்கா?

image

உடலில் தைராய்டு ஹார்மோன் சுரப்பதற்கு, மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு அயோடின் மிக அவசியமாகும். இது நீங்கள் சாப்பிடும் உப்பில் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்வதற்கு ஒரு எளிய வழி உள்ளது. உருளைக்கிழங்கை பாதியாக வெட்டி அதில் உப்பை தூவி ஒரு நிமிடம் காத்திருக்கவும். அதன் மேல் சிறிது எலுமிச்சை சாற்றை பிழியுங்கள். நீல நிறத்தில் உருளைக்கிழங்கு மாறினால் உப்பில் அயோடின் இருக்கிறது என அர்த்தம்.

error: Content is protected !!