News December 4, 2024

வடிவேலு பாணியில் புகார்

image

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.

Similar News

News January 14, 2026

இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

image

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்திற்குத் தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <>படிவத்தைக் கிளிக்<<>> செய்யுங்கள். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News January 14, 2026

டீச்சர்களின் போராட்டத்திற்கு இன்று தீர்வா?

image

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 19 நாள்களாக இடைநிலை ஆசிரியர்கள் தீவிரமாக <<18797386>>போராடி<<>> வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். காலை 11 மணியளவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், இந்த போராட்டத்திற்கு தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 14, 2026

BREAKING: பொங்கல் சர்ப்ரைஸ் கொடுத்த பிரதமர் மோடி

image

TN மக்களுக்கு PM மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ஒவ்வொருவரின் மெயிலுக்கும் அவரவர் பெயரை குறிப்பிட்டு வாழ்த்து அனுப்பியுள்ளார். மனிதனுக்கும், இயற்கைக்குமான நெருக்கத்தை காட்டும் பொங்கல், சர்வதேச விழாவாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி; உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் பெருமிதம் அடைவதாகவும் கூறியுள்ளார். PM வாழ்த்து உங்களுக்கு வந்ததா?

error: Content is protected !!