News December 4, 2024
வடிவேலு பாணியில் புகார்

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.
Similar News
News February 15, 2026
அதிமுகவிடம் 10 சீட் கேட்கும் ராம்தாஸ் அத்வாலே

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிட 10 தொகுதிகளை கேட்டுள்ளதாக இந்திய குடியரசு கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார். அதிமுக சீட் தராவிட்டால் 51 தொகுதிகளில் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்றும், போட்டியிடாத தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம் எனவும் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசில் சமூக நீதி துறை இணையமைச்சராக அத்வாலே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
News February 15, 2026
தமிழகத்தின் பிரசித்த பெற்ற சிவாலயங்கள்!

இன்று மகாசிவராத்திரி. ஆன்மீகத்தில் நாட்டமுள்ளவர்கள் கண்டிப்பாக அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று தரிசித்து வாருங்கள். தமிழகத்தில் நீங்கள் கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய டாப் சிவாலயங்களின் தொகுப்பை கொண்டு வந்துள்ளோம். அவை என்னென்ன என அறிய மேலே உள்ள போட்டோவை இடது பக்கமாக Swipe செய்யவும். இதில் நீங்க எந்தெந்த கோயில்களுக்கு சென்றுள்ளீர்கள்?
News February 15, 2026
சற்றுமுன்: தமிழக தேர்தல் தேதி.. புதிய தகவல் கசிந்தது

TN-ல் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.11-ம் தேதி நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தனியார் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், நேற்று பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேசிய அமைப்புச் செயலாளர் BL சந்தோஷ் இதனைத் தெரிவித்ததாகவும், தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 8 – 12-ம் தேதிக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக அவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளது. இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.


