News December 4, 2024
வடிவேலு பாணியில் புகார்

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.
Similar News
News February 11, 2026
10-வது போதும், தேர்வு கிடையாது: ₹29,000 சம்பளம்!

அஞ்சல் துறையில் 28,740 கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM) & உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன ➤TN-ல் மட்டும் 2,000 காலியிடங்கள் உள்ளன ➤வயது: 18-40 ➤தகுதி: 10th Pass, சைக்கிள் ஓட்ட தெரிய வேண்டும் ➤தேர்வு கிடையாது ➤சம்பளம் BPM: ₹12,000- ₹29,380 வரை. ABPM: ₹10,000- ₹24,470 வரை ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்.14. ➤விண்ணப்பிக்க இங்கே <
News February 11, 2026
BIG NEWS: தமிழக தேர்தல் தேதி.. புதிய அப்டேட் வந்தது

TN உள்ளிட்ட 5 மாநிலங்களில் பிப்.28 வரை SIR பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் மார்ச் முதல் வாரம் வரை தேர்தல் அறிவிப்பு வெளியாகாது. இதனிடையே, ஏப்ரல் 3-வது வாரத்தில் வியாழன்(ஏப்.16) வெள்ளி(ஏப்.17), (அ) திங்கள்கிழமை(ஏப்.20) தேர்தலை வைத்தால் தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறை வரும். மக்கள் மகிழ்ச்சியோடு சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பார்கள் எனவும் வாக்குப்பதிவு சதவீதம் உயரும் என்றும் ECI ஆலோசித்து வருகிறதாம்.
News February 11, 2026
கற்பூரவள்ளி டீ குடிச்சி பாருங்களேன்!

கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி டீ தூள் போட்டு கொதிக்க வையுங்கள். பின் கற்பூரவள்ளி இலைகளை சேருங்கள். அதில் தோல் நீக்கிய இஞ்சி (சிறு)துண்டுகள், மிளகு மற்றும் ஏலக்காயை தட்டிப் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பின் அதை வடிகட்டிக்கொள்ளவும். மிதமான சூட்டில், சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடியுங்கள். இது சளி, இருமலுக்கு சிறந்த நிவாரணமாகும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிரவும்.


