News December 4, 2024
வடிவேலு பாணியில் புகார்

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.
Similar News
News February 16, 2026
விஜய்யை பின்னுக்கு தள்ளிய ரஜினி

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை விஜய்யிடம் இருந்து ரஜினி தட்டிப்பறித்துள்ளார். ஜன நாயகனுக்கு ₹220 கோடி வாங்கியதன் மூலம். அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள் பட்டியலில் முதல் விஜய் இடத்தில் இருந்தார். ஆனால், கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினிக்கு ₹225 கோடி சம்பளம் தரப்பட உள்ளதாம். தமிழ் திரையுலகில் தான் என்றுமே சூப்பர் ஸ்டார் என மீண்டும் ரஜினி நிருபித்துள்ளார்.
News February 16, 2026
வரலாற்றில் இன்று

1959 – கியூபப் புரட்சிக்கு பிறகு, பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் பிரதமராகப் பொறுப்பேற்றார்.
1982 – முதல் நேரு சர்வதேச தங்கக் கோப்பை கால்பந்து போட்டி கொல்கத்தாவில் தொடங்கியது.
1945 – பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் பிறந்த நாள்
2013 – பாகிஸ்தான் குவெட்டாவில் குண்டு வெடித்து 80 பேர் கொல்லப்பட்டனர்.
News February 16, 2026
CINEMA 360°: ரீ-ரிலீசாகும் ‘சூது கவ்வும்’

*தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் பிப்.16-ல் ரிலீசாகிறது *கென் கருணாஸின் ‘யூத்’ மார்ச்.19-ல் ரிலீசாகும் என அறிவிப்பு *ராதிகா சரத்குமாரின் ‘தாய் கிழவி’ வெளியீடு பிப்.27-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது *விஜய் சேதுபதியின் ‘சூது கவ்வும்’ பிப்.20-ல் ரீ-ரிலீசாகும் என அறிவிக்கபட்டுள்ளது *ஜி.வி.பிரகாஷின் ‘ஹேப்பி ராஜ்’ பர்ஸ்ட் சிங்கிள் பிப்.17-ல் வெளியாகிறது.


