News December 4, 2024
வடிவேலு பாணியில் புகார்

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.
Similar News
News January 1, 2026
குளிர்காலத்தில் இட்லி மாவு புளிக்க நேரமாகுதா?

இட்லி மாவு புளித்தால் மட்டுமே இட்லி பஞ்சு போல மென்மையாக வரும். ஆனால், குளிர் காலத்தில் இட்லி மாவு விரைவாக புளிக்காது. மாவை புளிக்க வைக்க சில டிப்ஸ் இதோ! * மாவை கைகளால் கலக்கும் போது எளிதாக புளிக்கும் *அரிசி அரைக்கும் போது அதனுடன் அவல் அல்லது வடித்த சாதத்தை சேர்த்து அரைக்கவும் *மாவு அரைக்கும் போது சிறிது சூடான நீரை பயன்படுத்தலாம் *மாவு அரைத்த பிறகு அதில் கால் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்க்கலாம்.
News January 1, 2026
மகளிர் உரிமைத் தொகை.. மாற்றம் செய்தது தமிழக அரசு

மகளிர் உரிமைத் தொகை திட்ட இணையதளத்தில் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. முன்னதாக, தகுதியில்லாத பெண்கள் இந்த திட்டத்தில் ₹1,000 பெற்று வந்தால் புகாரளிக்க <
News January 1, 2026
ஜன.3-ம் தேதி வெளியாகிறது ‘ஜனநாயகன்’ பட டிரெய்லர்

பொங்கலையொட்டி ஜன. 9-ம் தேதி வெளியாகும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் ஆடியோ லாஞ்ச் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், டிரெய்லர் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற ஆவல் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. நியூ இயருக்கு டிரெய்லரை வெளியிட முதலில் திட்டமிட்டு, அது தள்ளிப் போய்விட்டது. இந்நிலையில் டிரெய்லர் ஜன.3-ம் தேதி மாலை 6.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


