News December 4, 2024

வடிவேலு பாணியில் புகார்

image

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.

Similar News

News January 28, 2026

BREAKING: ₹5,000-ஆக உயர்வு.. ஸ்டாலின் அறிவித்தார்

image

IUML மாநாட்டில் 5 புதிய அறிவிப்புகளை CM ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். *வஃபு வாரியத்தில் பதிவு செய்த உலமாக்களுக்கான பென்ஷன் ₹3000-ல் இருந்து ₹5,000 ஆக உயர்வு. *கல்லறைத் தோட்டம் இல்லாத பகுதிகளில் அரசு நிலம் வழங்க ஏற்பாடு. *சென்னை, மதுரையை போல் கோவையிலும் வஃபு தீர்ப்பாயம். *உருதுமொழி ஆசிரியர் காலியிடங்கள் நிரப்ப நடவடிக்கை. *உலமாக்களில் முதல்கட்டமாக 1,000 பேருக்கு இருசக்கர வாகனம் வாங்க ₹50,000 மானியம்.

News January 28, 2026

கல்கி 2: தீபிகாவுக்கு பதிலாக சாய் பல்லவியா?

image

கல்கி 2 படத்தில் சாய் பல்லவியை நடிக்க வைக்க இயக்குநர் நாக் அஸ்வின் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீபிகா படுகோன் கல்கி 2-ம் பாகத்தில் நடிக்க மாட்டார் என்று தயாரிப்பு தரப்பு அறிவித்திருந்த நிலையில், சாய் பல்லவியின் இயல்பான நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று அஸ்வின் நம்புவதாக கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

News January 28, 2026

கொண்டாட்டத்திற்கு தயாராகும் தவெக

image

தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்க விழாவை பிரமாண்டமாக கொண்டாட விஜய் திட்டமிட்டுள்ளார். வரும் பிப்.2-ம் தேதியுடன் தவெக தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில், பனையூர் தவெக அலுவலகத்தில் விஜய் தலைமையில் விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. மாவட்ட & மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் இந்த விழாவில் கூட்டணி, தேர்தல் அறிக்கை குறித்து விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!