News December 4, 2024

வடிவேலு பாணியில் புகார்

image

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.

Similar News

News February 4, 2026

தனித்து களம் காண்கிறாரா ராமதாஸ்?

image

தேமுதிகவை கூட்டணிக்கு இழுக்க போட்டிபோடும் திமுக & அதிமுக, ராமதாஸை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாக பேசப்படும் நிலையில், தனியாகவே களமிறங்குவது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறாராம். அத்துடன், தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், அன்புமணி ஆதரவாளர்கள் போட்டியிடும் தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தி அவரது தரப்பை தோற்கடிக்க ராமதாஸ் எண்ணுவதாக கூறப்படுகிறது.

News February 4, 2026

பிரேமலதாவின் கூட்டணி முடிவு.. அதிருப்தியில் தேமுதிக

image

திருவனந்தபுரத்தில் திமுகவிடம் பிரேமலதா, கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, 8 MLA + 1 ராஜ்யசபா MP பதவியை தேமுதிக கேட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாம். இந்நிலையில், தேமுதிகவுக்கு மரியாதை கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி என பிரேமலதா அறிவித்தார். ஆனால், தேதியைச் சொல்லியும் அவர் முடிவை அறிவிக்காததால், அக்கட்சியினரே அதிருப்தியில் உள்ளனராம்.

News February 4, 2026

திமுகவுக்கு எதிரான முக்கிய டிஸ்கஷனில் EPS

image

அதிமுக தலைமை அலுவலகத்தில் EPS தலைமையிலான மா.செ. கூட்டம் தொடங்கியது. இதில், வேட்பாளர் தேர்வு, பிரசார உத்திகள், தேர்தல் வாக்குறுதிகள், தொகுதியில் உள்ள குறைகள் ஆகியவற்றை பற்றி டிஸ்கஸ் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக, தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டும் மா.செ.க்களை எச்சரிக்கவும், திமுகவுக்கு எதிரான களப்பணியை தீவிரப்படுத்தவும் EPS திட்டமிட்டுள்ளார் என தகவல் கசிந்துள்ளது.

error: Content is protected !!