News December 4, 2024
வடிவேலு பாணியில் புகார்

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.
Similar News
News February 25, 2026
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாற்றம்.. செக் பண்ணுங்க

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மத்திய அரசு புதிய விதிகளை கொண்டுவந்துள்ளது. பெண் குழந்தைகளின் பெற்றோர் (அ) பாதுகாவலர்கள்(Guardians) மட்டுமே கணக்கை தொடங்கி பராமரிக்க முடியும். தாத்தா, பாட்டி ஆர்வத்தின் பேரில் செல்வமகள் சேமிப்பு கணக்கை தொடங்கி இருப்பார்கள். அதை, தபால் நிலையம், வங்கிக்கு சென்று உரிய ஆவணங்களுடன் பெற்றோரின் பெயருக்கு மாற்றவும். இல்லையென்றால் கணக்கு முடக்கப்பட வாய்ப்புள்ளது.
News February 25, 2026
விஜய்க்கு ஆதரவளித்தாரா மாணிக்கம் தாகூர்?

தவெகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி நிர்வாகிகளுடன் மாணிக்கம் தாகூர் ரகசிய மீட்டிங்குகளை நடத்துவதாக பேசப்படுகிறது. இந்நிலையில் இதற்கு வலுசேர்க்கும் வகையில் X-ல் அவர் இட்ட பதிவு அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. வரும் தேர்தலில் அதிமுக 3-வது இடத்தைதான் பிடிக்கும், பொறுமை காக்கலாம் என பதிவிட்டிருந்தார். அப்போ, விஜய் 2-ம் இடத்தை பிடிப்பார் என மாணிக்கம் சொல்கிறாரா என கேள்வி எழுந்துள்ளது.
News February 25, 2026
இந்த காய்கறிகளே போதும்.. எல்லா பிரச்னையும் சரியாகும்

➤பீட்ரூட் – ரத்த கொதிப்பை தடுக்கும். ➤முருங்கைக்காய் – இரத்தத்தை சுத்திகரிக்கும். ➤காலிஃபிளவர் – ஞாபக சக்தியை அதிகரிக்கும். ➤உருளைக்கிழங்கு – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ➤வாழைப்பூ, கொத்தவரங்காய், புடலங்காய், பாகற்காய் – சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். ➤வெண்டைக்காய் – எடை குறைப்புக்கு உதவும். ➤செளசெள – இருதயப் பிரச்னைகளை தடுக்கும். ➤கத்திரிக்காய் – கேன்சர் அபாயத்தை குறைக்கும். SHARE.


