News December 4, 2024

வடிவேலு பாணியில் புகார்

image

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.

Similar News

News March 1, 2026

நேதாஜி பொன்மொழிகள்!

image

*வெற்றி தோல்வி முக்கியமில்லை, துணிந்து சண்டையிடுவதுதான் முக்கியம் * கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள் *உண்மையான நண்பனாக இரு, அல்லது உண்மையான பகைவனாக இரு, துரோகியாகவோ அல்லது பாதி நம்பிக்கைக்கு உரியவனாகவோ இருக்காதே *வன்முறை என்பது மோசமானது தான். ஆனால், அடிமைத்தனம் வன்முறையை காட்டிலும் மோசமானது *வரலாற்றில் எந்த உண்மையான மாற்றமும் விவாதங்களால் அடையப்படுவதில்லை.

News March 1, 2026

ரசிகர்களுக்கு VIROSH தம்பதியின் ட்ரீட்

image

விஜய் தேவரகொண்டா-ரஷ்மிகா திருமணம் பிப்.26-ம் தேதி கோலாகலமாக நடைபெற்ற நிலையில், இருவரும் தங்களுடைய ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி இன்று சென்னை, கோவை, ஐதராபாத், மும்பை, விஜயவாடா, புதுச்சேரி, டெல்லி, நொய்டா உள்பட பல நகரங்களில் ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். அத்துடன், நாட்டின் பல முக்கிய கோவில்களில் அன்னதானம் அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

News March 1, 2026

திமுக அரசினால் மீண்டும் ஒரு பேரழிவு: அன்புமணி

image

DMK அரசின் அலட்சியத்தால் கடந்த 4 நாள்களாக காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நடக்கவில்லை என அன்புமணி சாடியுள்ளார். வருவாய் துறையினரின் போராட்டத்தால் நெல் கொள்முதல் பாதிக்கப்பட்டிருப்பதை தனது X பதிவில் சுட்டிக்காட்டி, இதுபற்றி திமுக அரசு கண்டுகொள்ளவில்லை என கூறியுள்ளார். ஏற்கெனவே மழையால் நெல்மணிகள் வீணான நிலையில், தற்போது கொள்முதல் தாமதமாவது விவசாயிகளுக்கு பேரிழப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!