News December 4, 2024

வடிவேலு பாணியில் புகார்

image

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.

Similar News

News January 16, 2026

ஓய்வுபெற்ற ஊழியர்களிடம் பகீர் மோசடி!

image

இந்திய ரயில்வேயில் ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக வழங்கப்பட்ட தங்க முலாம் பூசிய வெள்ளி நாணயத்தில் அதிர்ச்சியூட்டும் மோசடி நடந்துள்ளது. உண்மையில் அவை செம்பினால் செய்யப்பட்ட போலி நாணயங்கள் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக Ex. ரயில்வே ஊழியர் அளித்த புகாரின் பேரில், FIR பதியப்பட்டுள்ளது. சுமார் ₹2,000 மதிப்புள்ள நாணயத்தில், வெறும் 0.23% மட்டுமே இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

News January 16, 2026

சற்றுமுன்: SBI சேவைக் கட்டணம் உயர்ந்தது

image

சமீபத்தில் ATM கட்டணங்களை SBI உயர்த்திய நிலையில், IMPS சேவைகளுக்கான கட்டணமும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இலவசமாக இருந்த ₹25,000 – ₹1 லட்சம் வரையிலான IMPS பணப் பரிமாற்றத்திற்கு இனி ₹2 + ஜிஎஸ்டி கட்டணமாக செலுத்த வேண்டும். ₹1 லட்சம் – ₹2 லட்சம் வரை ₹6 + ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். மல்டிபிள் சம்பளம் & சிறப்பு கணக்கு வகைகளுக்கு முற்றிலும் இலவசம். இந்த நடைமுறை பிப்.15 முதல் அமலுக்கு வருகிறது.

News January 16, 2026

உலக சாம்பியனை வீழ்த்திய இந்திய வீராங்கனை!

image

தோஹாவில் நடந்துவரும் உலக டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ரா, U19 உலக சாம்பியனான சீனாவின் கின் யுஷுவானை வீழ்த்தி அதிர்ச்சி அளித்துள்ளார். விறுவிறுப்பான இந்த Round 64 சுற்றில் முதலில் பின் தங்கிய இறுதியில் அதிரடியாக ராக்கெட்டை சுழற்றி மணிகா 3-2 என்ற கணக்கில் அபாரமாக வென்றார். இதையடுத்து தனது அடுத்த சுற்றில் தென்
கொரியாவின் லீ யூன்ஹேவை சந்திக்க உள்ளார்.

error: Content is protected !!