News December 4, 2024

வடிவேலு பாணியில் புகார்

image

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.

Similar News

News January 28, 2026

இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

image

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <>படிவத்தை கிளிக்<<>> செய்யுங்கள். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News January 28, 2026

25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு: முர்மு

image

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முதல்நாள் நிகழ்வில் மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசியுள்ளார் முர்மு. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 11 கோடிக்கும் அதிகமானோர், இலவச மருத்துவ சிகிச்சையை பெற்றிருப்பதாக கூறிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார். மேலும், 10 வருடங்களில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

News January 28, 2026

SI தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு

image

கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி நடைபெற்ற SI பணிக்கான எழுத்து தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. 1,299 காலிப் பணியிடங்களுக்கான இந்த தேர்வை 1,78,000 பேர் எழுதினர். இதில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பிப்.24 – மார்ச் 2-ம் தேதிவரை உடல் தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள <>இங்கே கிளிக்<<>> செய்து பாருங்கள்.

error: Content is protected !!