News December 4, 2024

வடிவேலு பாணியில் புகார்

image

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.

Similar News

News January 12, 2026

அப்துல் கலாம் பொன்மொழிகள்

image

*நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவதில்லை. *கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னைக் கொன்றுவிடும். கண்ணைத் திறந்து பார் நீ அதை வென்றுவிடலாம். *துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை. *நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் அது உன் கைவந்து சேரும். *சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டும் தான் ஆண்டவன் சோதிக்கிறான்.

News January 12, 2026

நாடு முழுவதும் ஒரு லட்சம் மாநாடுகளை நடத்தும் RSS!

image

RSS நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக, வரும் 15-ம் தேதி முதல் இந்து சம்மேளனங்களை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சாதி, வர்க்க வேறுபாடுகளை களைந்து இந்துக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் நாடு முழுவதும் ஒரு லட்சம் மாநாடுகள் நடத்தப்பட உள்ளன. ஆன்மிகவாதிகள், முக்கியஸ்தர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்று, சமபந்தி உணவுடன் முடியும்.

News January 12, 2026

விஜய்க்கு பல கதைகள் சொன்ன ‘பகவந்த் கேசரி’ இயக்குநர்!

image

விஜய்யின் கடைசி படத்தை இயக்க தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக ‘பகவந்த் கேசரி’ இயக்குநர் அனில் ரவிபுடி தெரிவித்துள்ளார். ஆனால், ரீமேக் வேண்டாம், நேரடி தமிழ் படம் இயக்குகிறேன் என பல கதைகளை கூறியதாகவும், ஆனால் ‘பகவந்த் கேசரி’ விஜய்க்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், விஜயின் கடைசி படம் எப்போதும் ரிலீஸானாலும் சாதனை படைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!