News December 4, 2024

வடிவேலு பாணியில் புகார்

image

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.

Similar News

News February 23, 2026

அதிமுகவுடன் கூட்டணி… அதிரடியாக அறிவித்தார்

image

அதிமுக கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் இன்று சென்னை இல்லத்தில் EPS-ஐ நேரில் சந்தித்து, நேதாஜி ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் C.P.பிரபு, அகில இந்திய யாதவர் பாதுகாப்பு பேரவையின் தலைவர் டாக்டர் இராஜன், அகில இந்திய அகமுடையார் இளைஞர் பேரவையின் தலைவர் சோ.ஜெயமணி ஆகியோர் 2026 தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

News February 23, 2026

Exam Time-ல் பிள்ளைகளின் மன அழுத்தத்தை குறைக்க TIPS

image

➤பிள்ளைகளை 7 மணி நேரமாவது தூங்கவிடுங்கள் ➤பாதாம், வால்நட்ஸ், பழங்களை சாப்பிட கொடுங்கள் ➤அவர்கள் தேவையான அளவு தண்ணீர் குடிக்கவேண்டும் ➤படிக்கும்போது ஒவ்வொரு 50 நிமிடங்களுக்கும் 10 நிமிடம் இடைவெளி எடுக்க அனுமதியுங்கள் ➤அவர்கள் பிரேக் எடுக்கும் நேரத்தில் வேறு விஷயங்களை பற்றி சிரித்து பேசுங்கள் ➤அவர்கள் முன் போன் அல்லது TV-ஐ பார்க்கவேண்டாம். அனைத்து பெற்றோருக்கும் இதை SHARE பண்ணுங்க.

News February 23, 2026

மாதந்தோறும் EB பில் எங்கே? விஜய்

image

மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறையை கொண்டுவருவோம் என்றீர்களே, செய்தீர்களா? என்று விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். பெரும்பாலான வீடுகளுக்கு 100 யூனிட் தான் செலவாகிறது. மாதந்தோறும் அவர்கள் பில் கட்டினால் 100 யூனிட் இலவசம் என்பதால் கட்டணம் இருக்காது. ஆனால், 2 மாதங்களுக்கு ஒருமுறை கொடுப்பதால், அவர்கள் மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதை நவீன ஊழல் என்று சொல்லலாமா என விஜய் கேட்டுள்ளார்.

error: Content is protected !!