News December 4, 2024

வடிவேலு பாணியில் புகார்

image

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.

Similar News

News December 29, 2025

பதக்கம் வென்ற செஸ் நட்சத்திரங்களுக்கு PM வாழ்த்து

image

FIDE வேர்ல்டு ரேப்பிட் செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பி வெண்கலப் பதக்கம் வென்றார். அதேபோல் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 9.5 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினார். சர்வதேச அளவில் செஸ்ஸில் தடம் பதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு PM மோடி தனது பாராட்டை தெரிவித்துள்ளார். இருவரின் அடுத்தடுத்து முயற்சிகள் வெற்றி பெறவும் அவர் வாழ்த்து கூறியுள்ளார்.

News December 29, 2025

பிரபல ஹாலிவுட் நடிகை காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

image

நேற்று மரணமடைந்த ஃபிரெஞ்சு நடிகை
<<18695173>>பிரிகிட் பர்டோட்டுக்கு<<>>, அந்நாட்டு அதிபர் மேக்ரான் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரிகிட்டின் படங்கள், கருத்துக்கள், விலங்குகளுக்கு ஆதரவான செயல்பாடுகள் மூலம் ‘Marianne’ஆக (சுதந்திரம், ஜனநாயகத்திற்கான ஃபிரான்ஸின் கலாச்சார சின்னம்) அவர் மாறியுள்ளார். தனது இருப்பின் மூலம் நமது மனதை தொட்ட, நூற்றாண்டின் லெஜண்டுக்காக துக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

News December 29, 2025

வெறுப்பில் நடந்த கொடூர குற்றம்: ராகுல் காந்தி

image

டேராடூனில் <<18699313>>திரிபுரா இளைஞருக்கு<<>> நிகழ்ந்தது வெறுப்பில் நடந்த கொடூர குற்றம் என ராகுல் காந்தி சாடியுள்ளார். வெறுப்பு என்பது ஒரேநாளில் வந்துவிடாது, தவறான கதையாடல்கள் மூலம், பல ஆண்டுகளாக இளைஞர்கள் மனதில் ஊட்டப்பட்டு வருகிறது. இது வெறுப்பை உமிழும் பாஜக அரசால் நார்மலைஸ் செய்யப்பட்டுள்ளது. இந்தியா என்பது மரியாதை, ஒற்றுமை அடிப்படையில் உருவானது, பயம் மற்றும் அத்துமீறலால் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!