News December 4, 2024

வடிவேலு பாணியில் புகார்

image

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.

Similar News

News February 15, 2026

தூங்கி எழுந்தவுடன் இந்த அறிகுறி இருக்கா.. DANGER

image

தொடர்ந்து மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் உலகளவில் அதிகரிக்க முக்கிய காரணமே அதன் அறிகுறிகளை புரிந்து கொள்ளாமல் இருப்பதும், புறக்கணிப்பது தான். காலை எழுந்ததுமே உடலில் தெரியும் சில அறிகுறிகள் மாரடைப்புக்கு வழிவகுக்கலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோக்களை இடது புறமாக Swipe செய்யவும். இந்த விழிப்புணர்வு பதிவை அனைவருக்கும் ஷேர் செய்யவும்.

News February 15, 2026

விஜய்-த்ரிஷா.. சினிமா வட்டாரம் இப்படி செய்யலாமா?

image

விஜய்-த்ரிஷா என <<19135589>>நயினார்<<>> பேசியதற்கு பாஜக பெண் நிர்வாகிகளே வருத்தம் தெரிவித்துள்ளனர். ஒரு பெண், அதுவும் ஒரு சீனியர் நடிகை மீது Character Assassination நடக்கிறது. ஆனால், சினிமாவில் டாப் நடிகர்கள், டைரக்டர்கள் என கூறும் யாரும் இதற்கு குரல் கொடுக்கவில்லையே எனவும், பெண்ணியம், ஹீரோயிசம் எல்லாம் வெறும் படங்களில் மட்டும்தானா என்றும் நெட்டிசன்கள் கேட்கின்றனர். அவர்களின் காதுகளுக்கு இது கேட்குமா?

News February 15, 2026

விஜய்யை ஒரு பொருட்டாவே நினைக்கல: RS பாரதி

image

திமுக மக்களை நம்பி இருக்கிறது, மக்கள் எங்களை நம்பியிருக்கிறார்கள் என RS பாரதி கூறியுள்ளார். விஜய்யை தாங்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்ற அவர், விசிலுக்கு நீண்ட ஆயுள் கிடையாது, மூச்சிருக்கும் வரை மட்டுமே ஊத முடியும் என விமர்சித்துள்ளார். மேலும், பிஹார் தேர்தலின்போது, நிதிஷ்குமாருக்கு மோடி பல கோடிகளை கொடுத்தார். அப்படி எங்களுக்கு கொடுத்தாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!