News December 4, 2024
வடிவேலு பாணியில் புகார்

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.
Similar News
News February 11, 2026
தாய்லாந்து பள்ளியில் துப்பாக்கிச் சூடு!

தாய்லாந்தின் சோங்க்லா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்ததாக கூறப்படுகிறது. அந்த நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் காயமடைந்தனர். விரைந்து வந்த போலீசார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளனர்.
News February 11, 2026
தங்கப் பத்திர முதலீடு.. 3 மடங்கு லாபம்!

இன்று முதிர்ச்சியடையும் 2019-20 தங்கப் பத்திரங்களின் விலை கிராமுக்கு ₹15,440 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், ₹4,070-க்கு வாங்கியவர்களுக்கு, இப்போது 3.8 மடங்கு லாபம் கிடைக்கும். ₹1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அதன் மதிப்பு தற்போது தோராயமாக ₹3.8 லட்சமாக உயர்ந்திருக்கும். கூடுதலாக, ஆண்டுதோறும் 2.5% வட்டியும் கிடைக்கிறது. தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியதே இந்த லாபத்துக்கு முக்கிய காரணமாகும்.
News February 11, 2026
நாளை ஸ்டிரைக்.. பள்ளிகளுக்கு விடுமுறையா?

மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு தொழிற்சங்கத்தினர் நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால், பொதுப்போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், அரசு தரப்பில் இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. வேலை நிறுத்தத்திற்கு திமுகவின் தொழிற்சங்கம் (தொமுச) ஆதரவளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


