News December 4, 2024
வடிவேலு பாணியில் புகார்

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.
Similar News
News January 19, 2026
விஜய் பட நடிகையிடம் அத்துமீறிய நடிகர்.. பளார்!

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பெரிய பான்-இந்திய படத்தில் பணிபுரிந்தபோது, ஒரு நட்சத்திர ஹீரோ அனுமதியின்றி கேரவனில் நுழைந்ததாக பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். சமீபத்தில் நேர்காணலில் இதுபற்றி பேசிய அவர், கேரவனில் நுழைந்த நடிகர் எல்லை மீறி தன்னை தொட முயன்றபோது அறைந்ததாக குறிப்பிட்டுள்ளார். அந்த சம்பவத்திற்கு பிறகு அந்த நடிகர் மீண்டும் தன்னுடன் பணிபுரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News January 19, 2026
இயர்பட்ஸில் சத்தமா பாட்டு கேப்பீங்களா.. உஷார்!

ஒலி நன்றாக கேட்க வேண்டும் என்பதற்காக, அதிக சவுண்ட் வைத்து, இயர்பட்ஸ்/ இயர்போன்களை பயன்படுத்துவது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. காதில் 3 முக்கிய பாகங்கள் உள்ளன: வெளிப்புறம், நடுப்பகுதி, உட்புறம். உள்காதில் உள்ள கோக்லியா ஒலி செய்திகளை மூளைக்கு அனுப்பும். அதிக ஒலி இதை பாதித்து, செவித்திறன் பிரச்னையை ஏற்படுத்தலாம். காதுகளுக்கு அவ்வப்போது ஓய்வு கொடுங்கள். அளவுக்கு மிஞ்சினால் எதுவும் ஆபத்தே.
News January 19, 2026
மத்திய அரசுக்கு முட்டுக்கட்டை போடும் மாநில அரசுகள்: மோடி

மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்த மாநில அரசுகளுக்கு, மக்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளனர் என PM மோடி பேசியுள்ளார். இதேபோல மேற்குவங்க மக்களும், மம்தா பானர்ஜியின் TMC அரசுக்கு தேர்தலில் நல்ல பாடம் புகட்ட வேண்டும் என கூறியுள்ளார். மேலும், மே.வ.வில் ஊடுருவல்காரர்கள், மாபியா கும்பலை சேர்ந்தோர் சுதந்திரமாக சுற்றித் திரிவதாகவும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் விமர்சித்துள்ளார்.


