News December 4, 2024

வடிவேலு பாணியில் புகார்

image

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.

Similar News

News February 2, 2026

புதுச்சேரியில் மகளிர் உரிமைத் தொகை ₹2,500

image

புதுச்சேரியில் மகளிர் உரிமைத் தொகை உயர்வு இம்மாதம் முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, மாதம் ₹2,500 வழங்கப்படும் என CM ரங்கசாமி தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, அரசின் எந்தவித உதவியும் பெறாத 70,000 குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ₹1,000 வழங்கப்படும் நிலையில், தொகையை உயர்த்தி விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News February 2, 2026

தனுஷ் படத்தில் அடுத்த சர்ப்ரைஸ்

image

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் தனுஷின் ‘D55’ படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்துள்ளன. 2 நாள்களுக்கு முன், தனுஷ் ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், இன்று சாய் பல்லவியும் நடிப்பதாக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளராக சாய் அபயங்கர், 2 முன்னணி நடிகைகள் இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

News February 2, 2026

கல்வியை வியாபாரமாக்கிய திமுக அரசு: அண்ணாமலை

image

திமுக ஆட்சியில், பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம் அதிகரித்துள்ளதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். தனியார் பள்ளிகள் நடத்தும் திமுகவினர் பணம் சம்பாதிக்க, அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை சிதைத்ததே, இதற்கு முக்கிய காரணம்; ஏழை, எளிய குழந்தைகளின் எதிர்காலத்தைக் கொஞ்சம் கூட கருத்தில் கொள்ளாமல், கல்வியை வியாபாரமாக்கி நடுத்தர குடும்பத்தினர் மீது திமுக அரசு கடன் சுமையை திணித்துள்ளதாகவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!