News December 4, 2024
வடிவேலு பாணியில் புகார்

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.
Similar News
News December 30, 2025
இந்திய அணியின் பேட்டிங் கோச்சாகும் யுவராஜ் சிங்?

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக யுவராஜ் சிங்கை நியமிக்கலாம் என Ex இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார். சுப்மன் கில், அபிஷேக் சர்மா ஆகியோரின் மெண்டராக இருக்கும் அவர், பயிற்சியாளாரானால் அது அணிக்கு மேலும் பலம் சேர்க்கும் எனவும் அவர் கூறினார். தற்போது இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷு கோடக் உள்ளார். யுவராஜ் சிங் பேட்டிங் பயிற்சியாளராக சரியான தேர்வா?
News December 30, 2025
அனைவருக்கும் ₹15,000.. அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு

புதிதாக வேலைக்கு சேரும் இளைஞர்கள் அனைவருக்கும் ₹15,000 ஊக்கத்தொகை வழங்குகிறது பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனா திட்டம். இத்திட்டத்தில் பயன்பெற EPFO-வில் பதிவு செய்திருக்க வேண்டும், மாத சம்பளம் ₹1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் https://pmvbry.epfindia.gov.in -ல் அப்ளை பண்ணலாம். 2027 ஜூலை வரை இத்திட்டம் செயல்பாட்டில் இருக்கும். அனைவருக்கும் இத SHARE பண்ணுங்க.
News December 30, 2025
குளிர்காலத்தில் இத சாப்பிடுங்க! ரொம்ப முக்கியம்!

குளிர்காலத்தில் எள் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என்கின்றனர் டாக்டர்கள். *எள்ளின் வெப்பத்தன்மை, உடலை கதகதப்பாக வைக்கிறது *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது *கால்சியம் எலும்புகளை வலுப்படுத்துகிறது *கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதய செயல்பாட்டை சீராக்குகிறது *சரும வறட்சியை தடுக்கிறது *உடனடி ஆற்றலை வழங்குகிறது *அதேநேரம் ஒரு நாளைக்கு 2 ஸ்பூன்களுக்கு மேல் எடுக்கக்கூடாது.


