News February 28, 2025
வாழ்க்கையை கெடுத்துவிட்டார்: ராஜமெளலி மீது புகார்

தெலுங்கு முன்னணி இயக்குநர் ராஜமெளலி மீது, அவரது முன்னாள் நண்பர் ஸ்ரீனிவாஸ் ராவ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில், ராஜமெளலி செய்யும் டார்ச்சரால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்துள்ள அவர், தனது சாவுக்கு அவரும், அவரது மனைவி ரமாவும் தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார். மேலும், 55 வயதாகும் தனக்கு திருமணம் ஆகாததற்கும், ராஜமெளலி தான் காரணம் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News February 28, 2025
பரோட்டா சாப்பிட்டு சிறுவன் பலி?

சென்னை, திருமுல்லைவாயலில் பரோட்டா சாப்பிட்ட சிறுவன் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுவன் சுதர்சன் கடந்த திங்களன்று காலையில் பரோட்டா சாப்பிட்டதாகவும், அதிலிருந்து அவனுக்கு வயிற்றுவலி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், உடல்நிலை மோசமடைந்து நேற்று சிறுவன் உயிரிழந்தான். இந்த மரணத்துக்கு பரோட்டா சாப்பிட்டதா (அ) வேறு காரணமா என போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 28, 2025
பரோட்டா சாப்பிடுவதால் மரணம் ஏற்படுமா?

பரோட்டாவால் மரணம் ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், பரோட்டாவால் வயிறு உப்புதல், மலச்சிக்கல், வாயுப் பிரச்னை, நெஞ்செரிச்சல் போன்ற செரிமான பிரச்னைகள் ஏற்படலாம். இதில் மாவுச்சத்து அதிகம் என்பதால் கலோரியும் அதிகம். பரோட்டாவை அவசரமாக உண்ணுவதாலும், அதிகம் வாயில் திணிப்பதாலும் மூச்சுத்திணறி சிலர் இறந்துள்ளனர். ஆகவே, மெதுவாக, மென்று ருசித்து சாப்பிடுவது நல்லது.
News February 28, 2025
AUS-AFG போட்டி நிறுத்தம்! அரையிறுதியில் ஆஸி.,

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் இன்று, ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. லாகூர் மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்த நிலையில், போட்டியை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதையடுத்து 2 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளன. இதனிடையே, குரூப் B பிரிவில் முதல் அணியாக ஆஸ்திரேலியா அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றது.