News March 18, 2024

மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

image

பரப்புரைக்கு விமானப்படை ஹெலிகாப்டரை பயன்படுத்தியதாக பிரதமர் மீது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். ஆந்திராவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பாஜக பேரணி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அவர் இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை பயன்படுத்தி நிகழ்ச்சிக்கு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 23, 2025

கர்நாடகா காங்கிரஸில் என்ன தான் நடக்கிறது?

image

கர்நாடகா காங்கிரஸில் கோஷ்டி பூசல் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் <<18345295>>டிகே சிவக்குமார்<<>> ஆதரவு MLA-க்கள் கார்கேவை சந்தித்த நிலையில், நேற்று இரவு சித்தராமையா சந்தித்துள்ளார். அமைச்சரவை, CM மாற்றம் குறித்த செய்திகள் போலியானவை எனவும், எத்தனை MLA-க்கள் சென்று சந்தித்தாலும், தலைமை எடுப்பதுதான் இறுதி முடிவு, அதற்கு அனைவரும் கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும் என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

News November 23, 2025

இந்த மாத்திரை அதிகம் எடுக்குறீங்களா?கேன்சர் வரும்!

image

தொட்டதுக்கெல்லாம் ஆன்டிபயாடிக் மாத்திரையை சாப்பிடுற ஆளா நீங்க? ஆன்டிபயாடிக்கை அதிகமாக எடுத்தால் ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பு ஏற்படுவதாக டாக்டர்கள் சொல்கின்றனர். இதனால், குடல் ஆரோக்கியம் சீர்குலையும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும், நாளடைவில் கேன்சர் ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர். எனவே, டாக்டர் பரிந்துரைத்தால் மட்டுமே ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்ளுங்கள். பலரை கேன்சரில் இருந்து காக்கும், SHARE THIS.

News November 23, 2025

தவாகவில் இருந்து பாமகவுக்கு தாவிய முக்கிய நிர்வாகி!

image

தவாக மாநில இளைஞர் சங்க செயலாளர் ஆறுமுகம், அன்புமணி முன்னிலையில் பாமகவில் இணைந்தார். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தவாகவை வளர்க்க வேல்முருகனுடன் தீவிரமாக களப்பணியாற்றி வந்த நிலையில், திடீர் டிவிஸ்டாக பாமகவுக்கு தாவியுள்ளார். மேலும், அவரது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோரும் பாமகவில் இணைந்துள்ளனர். பாமகவில் தந்தை – மகன் மோதலுக்கு நடுவே கட்சியை வலுப்படுத்த அன்புமணி தீவிரம் காட்டி வருகிறார்.

error: Content is protected !!