News March 18, 2024

மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

image

பரப்புரைக்கு விமானப்படை ஹெலிகாப்டரை பயன்படுத்தியதாக பிரதமர் மீது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். ஆந்திராவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பாஜக பேரணி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அவர் இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை பயன்படுத்தி நிகழ்ச்சிக்கு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 24, 2025

BREAKING: புதிய கட்சி.. OPS அறிவித்தார்

image

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, அதிமுக தொண்டர்கள் உரிமைக் கழகமாக மாறியுள்ளதாக OPS அறிவித்துள்ளார். 3 ஆண்டுகளாக கொடுத்த ஆதரவு, தியாக உணர்வு செயல்பாடுகளுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, இன்னும் ஒரு மாதத்தில் அதிமுக இணையாவிடில் தனிக்கட்சியாக உருவெடுப்போம் என OPS ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

News November 24, 2025

சென்னையில் எவ்வளவு மக்கள்தொகை தெரியுமா?

image

உலகளவில் நகர்ப்புற மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உள்ள பல நகரங்கள் வேகமாக விரிவடைந்து வருகின்றன. அதன்படி, 2024-2025-ம் ஆண்டில் அதிக மக்கள் தொகை கொண்ட டாப் 10 நகரங்கள் என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

News November 24, 2025

டிச.1-ல் குரூப்-1 முதன்மை தேர்வு தொடக்கம்

image

குரூப்-1 முதன்மை தேர்வு டிச.1 முதல் டிச.4-ம் தேதி வரை நடைபெறும் என்று TNPSC அறிவித்துள்ளது. Prelims-ல் தேர்ச்சி பெற்றவர்கள், முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை www.tnpscexams.in தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், தேர்வில் கருப்பு நிற பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின்போது அனைத்து நடவடிக்கைகளும் வீடியோவாக பதிவு செய்யப்படவுள்ளது.

error: Content is protected !!