News March 18, 2024
மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

பரப்புரைக்கு விமானப்படை ஹெலிகாப்டரை பயன்படுத்தியதாக பிரதமர் மீது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். ஆந்திராவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பாஜக பேரணி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அவர் இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை பயன்படுத்தி நிகழ்ச்சிக்கு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 6, 2025
கணவரை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்

ஆண்கள் பற்றாக்குறையால் கணவரை வாடகைக்கு எடுக்கும் நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா?. ஆம், ஐரோப்பா நாடான லாட்வியாவில் இந்த விநோதம் நடக்கிறது. அங்கு 116 பெண்களுக்கு 100 ஆண்கள் மட்டுமே இருக்கின்றனர். அதிலும், பெரும்பாலானவர்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் இளம் பெண்கள் ‘Husbands for Rent’ முறைக்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
News December 6, 2025
கடனில் தத்தளிக்கும் இந்தியர்கள்!

இந்தியாவில் 28.3 கோடி பேர் கடனில் இருப்பதாக மத்திய இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். லோக்சபாவில் பதிலளித்த அவர், கடந்த 7 ஆண்டுகளில் கடன் வாங்குவோர் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். 2025-ல் மொத்த வீட்டு கடன் ₹15.7 லட்சம் கோடியாக உள்ளது என்று கூறிய அவர், ஒரு நபரின் சராசரி கடன் சுமை ₹3.4 லட்சத்தில் இருந்து, ₹4.8 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
News December 6, 2025
வேள்பாரி பட ஹீரோ ரேஸில் 2 நடிகர்கள்

இந்தியன் 2, கேம் சேஞ்சர் என தொடர் தோல்வியால் துவண்டுள்ள ஷங்கர், மணிரத்னம் பாணியில் வரலாற்று கதையை தேர்ந்தெடுத்துள்ளார். இதன்படி, ‘வேள்பாரி’ நாவலை படமாக எடுத்து, அடுத்த ஆண்டு வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மெயின் ஹீரோவாக சூர்யா (அ) விக்ரமை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. யார் பொருத்தமாக இருப்பார்கள்?


