News March 18, 2024
மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

பரப்புரைக்கு விமானப்படை ஹெலிகாப்டரை பயன்படுத்தியதாக பிரதமர் மீது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். ஆந்திராவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பாஜக பேரணி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அவர் இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை பயன்படுத்தி நிகழ்ச்சிக்கு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
BREAKING: தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது

கடந்த 2 நாள்களாக சரிந்து வந்த தங்கம் விலை இன்று(நவ.22) சவரனுக்கு ₹1,360 அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,630-க்கும், சவரன் ₹93,040-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் மந்தநிலை நிலவி வரும் சூழலிலும், இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவே நம்மூரில் தங்கம் விலை, மீண்டும் உயர காரணம் எனக் கூறப்படுகிறது.
News November 22, 2025
SA-ஐ எதிர்த்து களம் காணும் இந்திய படை இது தான்

IND vs SA மோதும் 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. காயம் காரணமாக கில் வெளியேறிய நிலையில், பண்ட் தலைமையில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. அக்சர் படேலுக்கு பதிலாக நிதிஷ்குமார் அணியில் இடம்பெற்றுள்ளார். PLAYING X1: ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், துருவ் ஜுரெல், ரிஷப் பண்ட், நிதிஷ்குமார், ரவீந்திர ஜடேஜா, வாசிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது சிராஜ்.
News November 22, 2025
அணு குண்டாலும் இதை ஒன்றும் செய்ய முடியாது!

அணு ஆயுத தாக்குதல், சுனாமி பேரலைகள், புயல்களை தாக்குப்பிடிக்கும் வகையில் முதற்கட்டமாக செயற்கை தீவு ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது. 78,000 டன் எடையில் மிதக்கும் வகையிலான இந்த தீவு, 2028-ல் செயல்பாட்டிற்கு வரும் என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 138 மீட்டர் நீளம், 85 மீட்டர் அகலம் கொண்ட இந்த தீவில், 238 மனிதர்கள் 4 மாதங்களுக்கு எந்த தேவையும் இல்லாமல் வசிக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறதாம்.


