News March 18, 2024

மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

image

பரப்புரைக்கு விமானப்படை ஹெலிகாப்டரை பயன்படுத்தியதாக பிரதமர் மீது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். ஆந்திராவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பாஜக பேரணி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அவர் இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை பயன்படுத்தி நிகழ்ச்சிக்கு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 19, 2025

சென்னையில் பெண் மருத்துவர் தற்கொலை… போலீஸ் அதிரடி

image

சென்னை முகப்பேரில் பெண் மருத்துவர் ஹாருள் சமீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவர் அசாருதீன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் ஹாருள் சமீராவை வரதட்சணை கேட்டு அசாருதீன் துன்புறுத்தியது, ஆர்.டி.ஓ விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த அசாருதீனை அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

News November 19, 2025

TN-ல் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி: ஆதவ் அர்ஜுனா

image

<<18327587>>ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவி<<>> கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள ஆதவ் அர்ஜுனா, TN-ல் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாக சாடியுள்ளார்.
எங்கும் சுதந்திரமாக சென்று வர முடியாத அளவிற்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அரங்கேறுவதாக அவர் X-ல் பதிவிட்டுள்ளார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தனி பாதுகாப்பு திட்டத்தை அரசு வகுக்க வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தியுள்ளார்.

News November 19, 2025

பிஹார் முதல்வராக நிதிஷ்குமார் தேர்வு

image

பிஹாரின் அடுத்த CM ஆக மீண்டும் நிதிஷ்குமாரே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். NDA கூட்டணி கட்சி MLA-க்களின் கூட்டத்தில் ஒருமனதாக அவர் தேர்வான நிலையில், நாளை காலை 11:30 மணிக்கு நடைபெறும் விழாவில் CM ஆக பதவியேற்கிறார். இந்நிகழ்வில் PM மோடி, பாஜக முதல்வர்கள், MP-க்கள், MLA-க்கள் பங்கேற்கவுள்ளனர்.

error: Content is protected !!