News August 26, 2024

1-9 மாணவர்களின் திறனை மேம்படுத்த போட்டிகள்: DSE

image

1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறிப்பாக, இலக்கிய மன்றம், விநாடி-வினா மன்றம் என பல்வேறு மன்றங்கள் செயல்படுகிறது. இதில், மாணவர்கள் அதிகளவில் பங்கேற்கச் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ள கல்வித்துறை, 2025 ஏப்ரல் வரை வாரந்தோறும் போட்டிகளை நடத்த உத்தரவிட்டுள்ளது.

Similar News

News December 28, 2025

ஆபரேஷன் சிந்தூர்: ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

image

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் ஏற்பட்ட சேதங்களை இதுவரை மறுத்து வந்த பாகிஸ்தான், முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. தாக்குதலில், பாக்.,-கின் நூர் கான் விமானப்படை தளம், முக்கிய ராணுவ நிலைகள் பலத்த சேதமடைந்ததாக அந்நாட்டின் துணை பிரதமர் இஷாக் தார் தெரிவித்துள்ளார். 80-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை கொண்டு இந்தியா நடத்திய தாக்குதலில், வீரர்கள் பலர் காயமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

News December 28, 2025

பள்ளிகள் திறப்பு.. தமிழக அரசு புதிய உத்தரவு

image

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளே மூன்றாம் பருவ புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. பாடநூல் கழகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதனை பள்ளி வாரியாக பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், ஒவ்வொரு பள்ளிக்கும் எத்தனை புத்தகங்கள் வந்திருக்கிறது என எமிஸ் தளத்தில் உடனே அப்டேட் செய்யவும் HM-களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 28, 2025

விஜயகாந்தின் நட்பை நினைத்து உருகிய கமல்

image

திரையில் மட்டும் அல்ல மக்கள் மனங்களில் நாயகனாக ஒளிரும் விஜயகாந்துக்கு 2-ம் ஆண்டும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், நடிகர் கமல் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். அதில் ஈகை எனும் அருங்குணத்தால் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்த என் விஜயகாந்தின் நட்புத் தருணங்கள் நினைவிலாடுகின்றதாக குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!