News August 26, 2024

1-9 மாணவர்களின் திறனை மேம்படுத்த போட்டிகள்: DSE

image

1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறிப்பாக, இலக்கிய மன்றம், விநாடி-வினா மன்றம் என பல்வேறு மன்றங்கள் செயல்படுகிறது. இதில், மாணவர்கள் அதிகளவில் பங்கேற்கச் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ள கல்வித்துறை, 2025 ஏப்ரல் வரை வாரந்தோறும் போட்டிகளை நடத்த உத்தரவிட்டுள்ளது.

Similar News

News December 30, 2025

தமிழகத்தில் நிலவும் காட்டு ராஜ்ஜியம்: அண்ணாமலை

image

திருத்தணி சம்பவத்தில் குற்றவாளிகள் கைதாகியிருந்தாலும், பல ரவுடிகள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். தனது X பதிவில் அவர், TN-ல் போதைப் பொருள் புழக்கம், வன்முறையை ஊக்குவித்தல், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான பிரசாரம் சர்வ சாதாரணமாகிவிட்டதாக கூறியுள்ளார். நன்றாக இருந்த TN-ஐ காட்டு ராஜ்ஜியமாக மாற்றியதற்கு திமுக அரசே பொறுப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

News December 30, 2025

விவேகானந்தர் பொன்மொழிகள்!

image

*நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது *உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது *பொய் சொல்லி தப்பிக்காதே; உண்மையை சொல்லி மாட்டிக்கொள். பொய் வாழ விடாது; உண்மை சாக விடாது *கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும் *எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்

News December 30, 2025

திமுக கூட்டணியை சிதைக்க முயற்சி: ஷா நவாஸ்

image

TN-ன் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசை கேள்வி கேட்காமல், நலத்திட்டங்களை செயல்படுத்தும் தமிழக அரசை காங்கிரஸ்காரர்கள் கேள்வி கேட்பதாக ஆளூர் ஷா நவாஸ் கூறியுள்ளார். 60 ஆண்டு Cong ஆட்சியைவிட 10 ஆண்டு BJP ஆட்சியில் அதிக கடன் பெற்றதை ஒப்பிட வேண்டியவர் (பிரவீன் சக்ரவர்த்தி), TN-ன் கடனை உ.பி.,யுடன் ஒப்பிடுவதாக சாடியுள்ளார். இது Dmk,Cong கூட்டணியை சிதைக்க துடிக்கும் செயல் எனவும் அவர் X-ல் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!