News August 26, 2024
1-9 மாணவர்களின் திறனை மேம்படுத்த போட்டிகள்: DSE

1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறிப்பாக, இலக்கிய மன்றம், விநாடி-வினா மன்றம் என பல்வேறு மன்றங்கள் செயல்படுகிறது. இதில், மாணவர்கள் அதிகளவில் பங்கேற்கச் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ள கல்வித்துறை, 2025 ஏப்ரல் வரை வாரந்தோறும் போட்டிகளை நடத்த உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 18, 2025
விஜய் பரப்புரையில் சிக்கி 3 பேர் ICU-வில் சிகிச்சை

ஈரோட்டில் நடந்த விஜய்யின் பரப்புரையின் போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு, 3 பேர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிலும், அவர்கள் ICU-வில் சிகிச்சையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வலிப்பு, மயக்கம், உடல் சோர்வு ஆகிய காரணங்களால் அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பெண் உள்பட மேலும் சிலர் கூட்டத்திலேயே மயங்கி விழுந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 18, 2025
யார் இளம் பெரியார்? ஆதவ் அர்ஜுனா காட்டம்

இளைஞர்களே இல்லாத ஒரு இளைஞரணி மாநாட்டை திமுக நடத்தியதாக ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். DCM உதயநிதிக்கு இளம் பெரியார் என்று அமைச்சர் எ.வ.வேலு பட்டம் சூட்டியதை அவர் கடுமையாக சாடியுள்ளார். சமூகநீதி பற்றி தெரியாத ஒருவரை இளம் பெரியார் என்று அழைப்பது, பெரியாரின் 70 வருட உழைப்பை அவமதிக்கும் செயல் என அவர் தெரிவித்தார். மேலும், பெரியாரின் வரலாற்றை அறியாதவர் உதயநிதி என்றும் ஆதவ் பேசினார்.
News December 18, 2025
‘வா வாத்தியார்’ திரைப்படம் மீதான தடை தொடரும்

கார்த்தியின் <<18530987>>’வா வாத்தியார்’<<>> திரைப்படம் மீதான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த படத்திற்கு சென்னை HC விதித்த தடைக்கு எதிராக <<18599666>>ஸ்டுடியோ கிரீன்<<>> நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை HC உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனவும் நீதிபதி சஞ்சய் குமார் அமர்வு தெரிவித்துள்ளது.


