News August 26, 2024
1-9 மாணவர்களின் திறனை மேம்படுத்த போட்டிகள்: DSE

1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறிப்பாக, இலக்கிய மன்றம், விநாடி-வினா மன்றம் என பல்வேறு மன்றங்கள் செயல்படுகிறது. இதில், மாணவர்கள் அதிகளவில் பங்கேற்கச் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ள கல்வித்துறை, 2025 ஏப்ரல் வரை வாரந்தோறும் போட்டிகளை நடத்த உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 7, 2025
வீட்டில் பாசிடிவ் எனர்ஜி வேணுமா? இந்த செடி வளருங்க

வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க சில வாஸ்து செடிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வாஸ்து சாஸ்திரத்தின் படி, இந்த செடிகள் அமைதி, நல்வாழ்வு மற்றும் செழிப்பை வழங்குகின்றன. அவை எந்தெந்த செடிகள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், வேறு ஏதேனும் செடி உங்களுக்கு தெரிந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.
News December 7, 2025
பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகள்.. பறந்தது முக்கிய உத்தரவு

பள்ளிகளில் இணை நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, *கலை, பண்பாடு, பாரம்பரியம் சார்ந்த விழாக்கள் நடைபெறும்போது, மாணவர்களின் பாதுகாப்புக்காக அவசர வழிகள் இருக்க வேண்டும். *விழா ஒருங்கிணைப்பு குழுவில் அனைத்து மதம் சார்ந்தவர்களும் இருக்க வேண்டும். *நிகழ்ச்சியில் இடம்பெறும் ஒளி, ஒலிப் பாடல்கள் கண்ணியம் மிக்கவையாக இருக்க வேண்டும். SHARE IT.
News December 7, 2025
89 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: ரயில்வே

இண்டிகோ பிரச்னையால், எண்ணற்ற பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் பயணிகள், பொதுமக்களின் நலன்கருதி அடுத்த 3 நாள்களுக்கு 89 சிறப்பு ரயில்களை இயக்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூரு, பாட்னா, கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. மேலும், நிலைமையை பொறுத்து சிறப்பு ரயில்களை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


