News August 26, 2024
1-9 மாணவர்களின் திறனை மேம்படுத்த போட்டிகள்: DSE

1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறிப்பாக, இலக்கிய மன்றம், விநாடி-வினா மன்றம் என பல்வேறு மன்றங்கள் செயல்படுகிறது. இதில், மாணவர்கள் அதிகளவில் பங்கேற்கச் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ள கல்வித்துறை, 2025 ஏப்ரல் வரை வாரந்தோறும் போட்டிகளை நடத்த உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 24, 2025
காதலியின் அந்தரங்க போட்டோ… காதலன் சிக்கினான்

கேரளாவில் காதலியின் அந்தரங்க போட்டோக்களை வைத்து மிரட்டிய காதலன் முகமது சஹத்(19) கைது செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்டா மூலம் இருவரும் பழகியுள்ளனர். நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. அந்த சமயத்தில், காதலியிடம் ஆசை வார்த்தை கூறி அவரது அந்தரங்க போட்டோக்களை சஹத் வாங்கியுள்ளார். கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரியவே, அந்த போட்டோக்களை வைத்து அவர் மிரட்டியுள்ளார். பெண் அளித்த புகாரில் சஹத் சிக்கியுள்ளார்.
News December 24, 2025
காதலியின் அந்தரங்க போட்டோ… காதலன் சிக்கினான்

கேரளாவில் காதலியின் அந்தரங்க போட்டோக்களை வைத்து மிரட்டிய காதலன் முகமது சஹத்(19) கைது செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்டா மூலம் இருவரும் பழகியுள்ளனர். நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. அந்த சமயத்தில், காதலியிடம் ஆசை வார்த்தை கூறி அவரது அந்தரங்க போட்டோக்களை சஹத் வாங்கியுள்ளார். கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரியவே, அந்த போட்டோக்களை வைத்து அவர் மிரட்டியுள்ளார். பெண் அளித்த புகாரில் சஹத் சிக்கியுள்ளார்.
News December 24, 2025
பெரியார் பற்ற வைத்த நெருப்பு இன்னும் எரிக்கிறது: கமல்

பெரியார், MGR, தொ.பரமசிவன் ஆகிய 3 ஆசிரியர்களையும் இன்றைய நினைவுநாளில் மனம் கொள்வதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பெரியார் பற்ற வைத்த பகுத்தறிவு நெருப்பு அரை நூற்றாண்டு கடந்தும் சுட்டெரித்துக்கொண்டு இருப்பதாகவும், தனது ஈகையினால் லட்சோப லட்சம் இதயங்களில் MGR வாழ்வதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தமிழ்ப் பண்பாட்டின் அறியப்படாத பக்கங்களில் ஒளிபாய்ச்சியவர் தொ.பரமசிவன் என்றும் நினைவுகூர்ந்துள்ளார்.


