News August 26, 2024

1-9 மாணவர்களின் திறனை மேம்படுத்த போட்டிகள்: DSE

image

1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறிப்பாக, இலக்கிய மன்றம், விநாடி-வினா மன்றம் என பல்வேறு மன்றங்கள் செயல்படுகிறது. இதில், மாணவர்கள் அதிகளவில் பங்கேற்கச் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ள கல்வித்துறை, 2025 ஏப்ரல் வரை வாரந்தோறும் போட்டிகளை நடத்த உத்தரவிட்டுள்ளது.

Similar News

News December 31, 2025

வடமாநில இளைஞர் உயிரிழப்பா? Fact Check

image

திருத்தணி சம்பவத்திற்கு கண்டனங்கள் வலுத்துள்ள நிலையில், தாக்குதலுக்கு ஆளான வடமாநில இளைஞர் உயிரிழந்துவிட்டதாக SM-ல் தகவல் பரவியது. ஆனால் அது உண்மையல்ல என்றும் அவர் சொந்த ஊர் திரும்பிவிட்டதாகவும் வடக்கு மண்டல ஜ.ஜி கூறியுள்ளார். இதனிடையே அந்த இளைஞர் கை, தலையில் கட்டுகளுடன் உள்ள வீடியோ வைரலாகியுள்ளது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில், இப்படி ஒரு சம்பவம் நடந்தது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.

News December 31, 2025

சார்லி சாப்ளின் பொன்மொழிகள்!

image

*உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு யாரையும் வேதனைப்பட
வைக்கக்கூடாது *சிரிக்காத நாளெல்லாம் வீணான நாட்களே *இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை, உங்கள் பிரச்னைகள் உட்பட *சர்வாதிகாரிகள் தங்களை சுதந்திரமாக இருந்துக் கொண்டு மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் *உன் மனம் வலிக்கும் போது சிரி, பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை *புன்னகைத்துப் பாருங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்

News December 31, 2025

அரசியல் பிரபலத்தின் வீட்டில் துயரம்

image

மூத்த அரசியல்வாதி தமிழருவி மணியனின் மனைவி பிரேமாகுமாரி உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அவரது உடலுக்கு வைகோ, பாரிவேந்தர் உள்ளிட்டோர் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அவருடைய இறுதிச்சடங்கு இன்று காலை விருகம்பாக்கம் இல்லத்தில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!