News August 26, 2024
1-9 மாணவர்களின் திறனை மேம்படுத்த போட்டிகள்: DSE

1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறிப்பாக, இலக்கிய மன்றம், விநாடி-வினா மன்றம் என பல்வேறு மன்றங்கள் செயல்படுகிறது. இதில், மாணவர்கள் அதிகளவில் பங்கேற்கச் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ள கல்வித்துறை, 2025 ஏப்ரல் வரை வாரந்தோறும் போட்டிகளை நடத்த உத்தரவிட்டுள்ளது.
Similar News
News January 3, 2026
Sports 360°: இந்திய ஹாக்கி அணிக்கு புதிய கோச்

*இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக ஸ்ஜோர்ட் மரிஜ்னே நியமனம் *மகளிர் ஹாக்கி லீக்கில், ராஞ்சி ராயல்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் சூர்மா கிளப்பை வீழ்த்தியது *ILT20 இறுதிப்போட்டிக்கு, MI எமிரேட்ஸ் முன்னேற்றம் *கோமாவில் உள்ள ஆஸி., வீரர் டேமின் மார்டினின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் *68-வது தேசிய ஷூட்டிங் சாம்பியன்ஷிப் மகளிர் 10மீ ரைபிள் பிரிவில், அமீரா அர்ஷத் தங்கம் வென்றார்
News January 3, 2026
எதில் அதிக நேரம் செலவாகிறது?

OTT, Reels உள்ளிட்டவைகளில் நேரம் செலவிடுவது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக, இந்தியாவின் திரை பயன்பாட்டு நுகர்வு முறைகளை பற்றி தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில், 2025-ல் பார்வையாளர்கள் எதில் தங்களது நேரத்தை செலவிடுகின்றனர் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்கள் எதில் நேரத்தை செலவிடுகிறீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க.
News January 3, 2026
கோயிலில் மதவெறியை வளர்க்கக் கூடாது: சேகர்பாபு

கன்னியாகுமரி கோயில் நிகழ்ச்சியில் அமைச்சர் <<18742042>>சேகர்பாபு<<>> பக்தர்களை திட்டிய விவகாரம் பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், அமைதி காக்கும் இடத்தில் மனிதநேயத்தை வளர்க்க வேண்டும், மதவெறியை வளர்க்கக் கூடாது என சேகர்பாபு தெரிவித்துள்ளார். பாரத் மாதா கி ஜே என்ற முழக்கத்தை கோயிலுக்கு வெளியே சொல்லட்டும் எனவும், ஆன்மிகமும், பக்தியும் அறத்தைதான் உணர்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


