News December 4, 2024

இந்தியாவில் நடக்கும் போட்டி… பாக்., பங்கேற்குமா?

image

பார்வையற்றோருக்கான முதலாவது மகளிர் T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2025இல் இந்தியாவில் நடைபெறுகிறது. முல்தானில் நடந்த உலக பார்வையற்றோர் கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் நடைபெறும் இப்போட்டியில் பாக்., அணி கலந்து கொள்வதில் சிக்கல் நிலவுகிறது. இதனால் அந்நாடு பங்கேற்கும் போட்டிகளை நேபாளம் (அ) இலங்கையில் நடத்தக்கூடும் எனத் தெரிகிறது.

Similar News

News January 17, 2026

மகளிர் உரிமைத் தொகை உயர்வு.. HAPPY NEWS

image

மகளிருக்கு பொங்கலுக்குள் மகிழ்ச்சியான செய்தி என அமைச்சர் கூறியதிலிருந்தே, எப்போது உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், இதுவரை அரசு அறிவிப்பை வெளியிடவில்லை. இதனிடையே, மகளிருக்கு ₹2,000 வழங்கப்படும் என அதிமுக தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டது. இதனால் உரிமை தொகையை உயர்த்துவது குறித்த அறிவிப்பை வெளியிட திமுக அரசு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

News January 17, 2026

காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகை எங்கே? பாஜக

image

மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை என CM ஸ்டாலின் அறிவித்த நிலையில், பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதே திமுகவின் வழக்கம் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு மாதம் ₹1000 வழங்கப்படும் என திமுக கொடுத்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை எனவும் அவர் சாடியுள்ளார். 5 ஆண்டுகளில் அவர்களுக்கு வழங்க வேண்டிய ₹60,000 எப்போது வருமென தெரியவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.

News January 17, 2026

விஜய் கட்சியில் இணைந்த அடுத்த அதிமுக தலைவர்

image

அதிமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட EX MLA புரசை V.S.பாபு தவெகவில் இணைந்துள்ளார். 2008 காலக்கட்டத்தில் திமுக மா.செ.வான புரசை வி.எஸ்.பாபு, அதிமுக மா.செ.வாக இருந்த சேகர்பாபுவை எதிர்த்து அரசியல் செய்தவர். 2011-ல் சேகர்பாபு திமுகவில் இணைந்ததால், வி.எஸ்.பாபு அதிமுகவுக்கு தாவினார். தற்போது மா.செ பதவி பறிக்கப்பட்டதால், செங்கோட்டையனுக்கு ஆதரவாக தவெகவில் ஐக்கியமாகி இருக்கிறார்.

error: Content is protected !!