News May 4, 2024
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்

வறட்சியால் கருகும் தென்னை மரங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் வாட்டி வதைத்து வருவதால், கோவை மற்றும் திருப்பூரில் 2.5 கோடி தென்னை மரங்கள் கருகி வருகின்றன என்றும், விவசாயிகளின் துயரத்தை தீர்க்க ஒரு மரத்திற்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Similar News
News September 22, 2025
தவறான யூடியூபர்களுக்கு ஆப்பு வைக்க வேண்டும் : வடிவேலு

சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற வடிவேலு, இன்றைய சினிமா கலைஞர்களின் நிலை குறித்து பேசியுள்ளார். திரைத்துறையினரிடம் கொஞ்சம் ஒற்றுமை குறைவாக உள்ளதாக கூறிய அவர், அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார். சமூக வலைதளங்களில் திரையுலகினர் பற்றி அவதூறாக சில பேசுவதாகவும், நாம் தவறாக பேசுபவர்களுக்கு ஆப்பு வைக்க வேண்டும் எனவும் கூறினார்.
News September 22, 2025
பள்ளியில் இருந்து ஒன்றாக விளையாடும் கில் – அபிஷேக்

நேற்றைய பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கில்(47), அபிஷேக் சர்மா(74) ஜோடி அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சிறுவயதில் இருந்து ஒன்றாக விளையாடி வருகின்றனர். பள்ளியில் இருந்து கில்லுடன் ஒன்றாக விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளதாக ஆட்டநாயகன் விருதை வாங்கிய பின் அபிஷேக்கும் குறிப்பிட்டார். இருவருக்கும் யுவராஜ் ஆலோசகராக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News September 22, 2025
பாலஸ்தீனை தனி நாடாக அங்கீகரித்த போர்ச்சுகல்

இஸ்ரேலின் எதிர்ப்பை மீறி <<17787971>>UK, ஆஸ்திரேலியா, கனடா<<>> நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. இதற்கு கடும் கண்டனங்களை இஸ்ரேல் தெரிவிக்க, மறுபுறம் பாலஸ்தீன அரசு மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளது. இந்நிலையில் போர்ச்சுகலும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. அடுத்த வாரம் கூடவுள்ள ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பிரான்ஸும் முறைப்படி பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.