News August 26, 2024
பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய நிறுவனங்கள்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 511 புள்ளிகள் உயர்ந்து 81,698 புள்ளிகளுடன் நிறைவடைந்துள்ளது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 22 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. எச்.சி.எல், டெக் பங்குகள் 3%, பஜாஜ் பைனான்ஸ் பங்கு 2.8%, டெக் மகிந்திரா பங்கு 2.5%, JSW ஸ்டீல் பங்கு 2%, டைட்டன் பங்கு 1.7%, எம்&எம், எல்&டி பங்குகள் தலா 1% உயர்ந்துள்ளன.
Similar News
News September 19, 2025
PM மோடியின் அரசியல் வழிகாட்டி காலமானார்!

RSS மூத்த நிர்வாகி மதுபாய் குல்கர்னி(88) காலமானார். 1942-ல் RSS-ல் இணைந்த இவர், மாவட்ட- மாநில பதவிகளில் அங்கம் வகித்துள்ளார். 1985-ல் இவர் மாநில நிர்வாகியாக இருந்த போது, மாவட்ட நிர்வாகியாக RSS பணிபுரிந்து வந்த தற்போதைய PM மோடியை BJP-ல் இணையும் படி இவர்தான் அறிவுறுத்தினார் என கூறப்படுகிறது. கடந்த 2015 வரை RSS-ல் பணியாற்றி, உடல்நல குறைவால் அதன்பிறகு பொதுவாழ்வில் சற்று விலகியுள்ளார்.
News September 19, 2025
மூலிகை: மருத்துவ குணங்கள் நிறைந்த புதினாக்கீரை!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி,
*புதினாக் கீரையை அரைத்து தொண்டையின் வெளிப்பகுதியில் பற்றுப்போட்டால் தொண்டைப் புண் ஆறிவிடும்.
*புதினாக் கீரை தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைத்து, இந்த தண்ணீரைக் குடித்து வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
*கைப்பிடி புதினாவுடன் கல் உப்பு கலந்து வெறும் வாணலியில் வறுத்து, சூட்டுடன் ஒரு துணியில் மூட்டையாக கட்டி பாதத்தில் ஒத்தடம் கொடுக்க எரிச்சல் குறையும். SHARE.
News September 19, 2025
ரயிலில் சிகரெட் பிடித்தால் என்ன அபராதம் தெரியுமா?

தட்டிக்கேட்ட ஆளில்லை என பலரும் ரயிலில் சிகரெட் பிடிப்பார்கள். ஆனால், ரயிலில் புகைபிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டதாகும். ரயில்வே சட்டம் 167வது பிரிவின் கீழ் சட்டப்படி குற்றமாகும். அப்படி, யாராவது மாட்டினால், அவருக்கு அபராதம் விதிக்கப்படும். இந்தியன் ரயில்வே தரப்பில் இருந்து அந்த பயணிக்கு ₹100- ₹500 வரை அபராதம் விதிக்கப்படும். இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.