News August 26, 2024

பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய நிறுவனங்கள்

image

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 511 புள்ளிகள் உயர்ந்து 81,698 புள்ளிகளுடன் நிறைவடைந்துள்ளது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 22 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. எச்.சி.எல், டெக் பங்குகள் 3%, பஜாஜ் பைனான்ஸ் பங்கு 2.8%, டெக் மகிந்திரா பங்கு 2.5%, JSW ஸ்டீல் பங்கு 2%, டைட்டன் பங்கு 1.7%, எம்&எம், எல்&டி பங்குகள் தலா 1% உயர்ந்துள்ளன.

Similar News

News December 2, 2025

திருப்பூர்: மனைவியை கத்தியால் குத்திய கணவன்!

image

கோவை சின்னியம்பாளையத்தை சேர்ந்த சக்திவேல், அவருடைய மனைவி லட்சுமி ஆகியோர் பெருமாநல்லூர் அருகே தட்டாங்கோட்டை பகுதியில் வசித்து வருகின்றனர். ஹோட்டல் வேலை செய்யும் சக்திவேல், மனைவி லட்சுமி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை நேற்று கத்தியால் குத்தினார். பிறகு தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 2, 2025

$679 பில்லியனுக்கு ஆயுத விற்பனை

image

ரஷ்யா-உக்ரைன், காஸா-இஸ்ரேல் போர் காரணமாக உலகளவில் ஆயுதங்கள் விற்பனை குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது. ஆயுத தயாரிப்பு மற்றும் ராணுவ சேவை வழங்கும் நிறுவனங்களின் வருவாய் கடந்த ஆண்டு 5.9% அதிகரித்துள்ளது. குறிப்பாக $679 பில்லியன் அளவுக்கு ஆயுதங்கள் விற்கப்பட்டுள்ளன. Hindustan Aeronautics, Bharat Electronics, Mazagon Dock Shipbuilders ஆகிய IND நிறுவனங்களின் ஒருங்கிணைந்த வருவாய் 8.2% அதிகரித்துள்ளது.

News December 2, 2025

வேண்டுதலுக்காக தலையில் தீபம் ஏற்றும் பக்தர்கள்!

image

நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள விஸ்வநாதர் சமேத விசாலாட்சி திருக்கோயிலில் எங்குமில்லாத வகையில் சிறப்பு வழிபாடு முறை ஒன்று உள்ளது. இங்கு பக்தர்கள் தங்களது உச்சந்தலையில் விளக்கை ஏந்தியபடி வேண்டுதலில் ஈடுபடுகின்றனர். மனக்குழப்பம், கிரக தோஷம் உள்ளவர்கள் நெய் தீபங்களை ஒரு தட்டில் வைத்து, அதை தலையில் வைத்துக் கொண்டு பூஜை நேரத்தில் வழிபடுகின்றனர். பூஜை முடியும் வரை தீபங்களை கீழே வைக்க மாட்டார்கள்.

error: Content is protected !!