News March 23, 2025
நீதிபதி வர்மாவை விசாரிக்க கமிட்டி

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதை விசாரிக்க, 3 ஐகோர்ட் நீதிபதிகள் அடங்கிய குழுவை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமைத்துள்ளார். இந்த விசாரணை காலத்தில் வர்மா, எந்த சட்டப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், வெளிப்படைத்தன்மைகாக, இந்த விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் பதிவேற்றவும் ஆணையிட்டுள்ளார்.
Similar News
News March 24, 2025
0.12 அல்ல! தோனியின் Fast Stumping எத்தனை விநாடிகள் தெரியுமா?

தோனி நேற்று 0.12 விநாடிகளில் சூர்யகுமார் யாதவை ஸ்டெம்பிங் செய்ததை அடுத்து, ரசிகர்கள் புளகாங்கிதம் அடைந்து வருகின்றனர். ஆனால், இது அவரின் 3வது அதிவேக ஸ்டெம்பிங் தான். தோனியின் அதிவேக ஸ்டெம்பிங் 0.08 விநாடிகள். 2018ல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கீமா பாலை கண் இமைக்கும் நேரத்தில் ஸ்டெம்பிங் செய்தார். அதே போல, 2023 ஆம் ஆண்டின் பைனலில் சுப்மன் கில்லை வெறும் 0.10 விநாடிகளில் ஸ்டெம்பிங் செய்தார் தோனி.
News March 24, 2025
சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: பாஜக கண்டனம்!

துப்புரவுத் தொழிலாளர்கள் எனக் கூறிக் கொண்டு வீட்டிற்குள் புகுந்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதாக சவுக்கு சங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அண்ணாமலை, திமுக அரசு ஊழல் செய்திருக்கிறது என கூறியதற்காக அவர் மீது நடத்தப்பட்டிருக்கும் இந்த வன்முறை கண்டனத்துக்குரியது என விமர்சித்துள்ளார். ஆட்சியாளர்களின் இந்த அராஜகப் போக்கு தொடர்வது நல்லதல்ல என்றும் சாடியுள்ளார்.
News March 24, 2025
அன்பை வாரிக் கொடுத்த ரசிகர்கள்! நடிகர் நெகிழ்ச்சி

மணிகண்டன் நடிப்பில் வெளியான குட்நைட், லவ்வர் மற்றும் குடும்பஸ்தன் ஆகிய படங்கள் 50 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வசூலைக் குவித்தன. மக்களின் அன்பில் நெகிழ்ந்து போன மணிகண்டன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் சின்ன வெற்றிகளுக்கு பெரிய இதயங்கள் தேவை எனவும் மக்களிடமிருந்து பெற்ற அன்பை வெளிப்படுத்த வார்த்தைகளைக் கண்டுபிடிக்க சிரமப்படுகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.