News March 25, 2025
சென்னையில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்

சென்னை தரமணி அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆண் நண்பருடன் வெளியே சென்ற மாணவியை, போதைப்பொருள் கொடுத்து 7 பேர் கொண்ட கும்பல் மாறி மாறி வன்கொடுமை செய்துள்ளது. இதில், அவருக்கு உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த கொடூர மிருகங்களிடம் இருந்து தப்பித்து வந்த மாணவி அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 24, 2025
திருவாரூர்: மழையால் இடிந்து விழுந்த வீட்டின் சுவர்

முத்துப்பேட்டை, தர்காஸ் கிராம விவசாய கூலித்தொழிலாளி செல்லதுரை (60) என்பவரது கூரை வீட்டு சுவர், இன்று கனமழையால் இடிந்து வெளிப்புறம் விழுந்தது. இதனால் வீட்டில் இருந்த செல்லத்துரை, அவரது மாற்றுத்திறனாளி மகள், மனைவி மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்தநிலையில் பாதிப்பு ஏற்பட்ட இந்த குடும்பத்திற்கு அரசால் வழங்கப்படும், இலவச வீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News November 24, 2025
ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்?

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான ‘காந்தாரா’ மொழி, கலாச்சாரத்தை தாண்டி பல மக்களின் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து அவர் அடுத்த PAN இண்டியன் படத்தை உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவும் கலாச்சாரம் சார்ந்த படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபோக, தற்போது பிரசாந்த் வர்மாவின் ‘ஜெய் ஹனுமான்’ படத்தில் ஹனுமன் வேடத்தில் ரிஷப் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 24, 2025
பொதுக்குழுவில் EPS-க்கு முழு அதிகாரம்

டிச.10-ல் நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழுவில் கூட்டணி குறித்து முடிவெடுக்க அனைத்து அதிகாரமும் EPS-க்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கவும் முடிவெடுக்கப்படவுள்ளது. மேலும், கட்சி வளர்ச்சிப் பணிகள், தேர்தலுக்கு தயாராவது, ஐடி விங் செயல்பாடுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


