News September 27, 2024
வேளாண் அரங்குகளை பார்வையிட்ட ஆட்சியர்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (27.09.2024) பார்வையிட்டார். தொடர்ந்து அவர் பயிர் சாகுபடி குறித்து கேட்டறிந்தார். அப்போது மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஜென்னடி ஜெபக்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
Similar News
News November 6, 2025
கடலூர்: அரசு வாங்கித் தருவதாகக் கூறி மோசடி!

ஸ்ரீமுஷ்ணம் அடுத்த மழவராயநல்லூரைச் சேர்ந்தவர் சத்தியராஜ் (37). இவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு சிதம்பரத்தைச் சேர்ந்த தீபக் (41) என்பவர் ரூ.13 லட்சம் பெற்றுள்ளார். அதன் பிறகு வேலை வாங்கி கொடுக்காமல் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபக்கை நேற்று கைது செய்துள்ளனர்.
News November 6, 2025
கடலூர்: தேர்வு இல்லை-அரசு வேலை!

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 405
3. கல்வித் தகுதி: 10th & ITI Pass in respective trades
4.சம்பளம்: ரூ.9,600 – ரூ.10,560
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…
News November 6, 2025
அண்ணாமலை பல்கலையில் புதிய ஒப்பந்தம்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், ஊடக ஆய்வு தொடர்பான இரண்டு மற்றும் மூன்று ஆண்டுகள் பட்டய படிப்புகளுக்கான தனியார், நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்வு நேற்று (நவ.5) பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் குழு உறுப்பினர் அறிவுடை நம்பி தலைமையில் நடைபெற்றது. இதில் மையத்தின் தலைவர்கள் ஒன்றிணைந்து மூன்று மாதத்திற்கான ஒப்பந்தங்களைக் கையொப்பமிட்டனர்.


