News June 22, 2024
பிரேத பரிசோதனை செய்ய ஆட்சியர் உத்தரவு

விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் பட்டியலில் இடம்பெறாத இருவரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார். இளையராஜா, ஜெயமுருகன் ஆகியோர் மருத்துவனைக்கு கொண்டு வருவதற்கு முன்பே இறந்ததால், பிரேத பரிசோதனை செய்யாமலே உறவினர்கள் அடக்கம் செய்தனர். இந்நிலையில், இருவரின் உடலையும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது.
Similar News
News November 16, 2025
RR-ல் இருந்தபோது மனதளவில் சோர்ந்துபோன சஞ்சு

கடந்த சீசனில் RR அணி சிறப்பாக விளையாடாதது சஞ்சு சாம்சனை மிகவும் பாதித்ததாக அணியின் உரிமையாளர் மனோஜ் தெரிவித்துள்ளார். இதனால் புதிய அத்தியாயத்தை தொடங்க வேண்டுமென எண்ணிய சஞ்சு, அணியில் இருந்து விலகுகிறேன் என கோரிக்கை வைத்ததாகவும் கூறியுள்ளார். மேலும், RR அணிக்காக சஞ்சு சாம்சன் செய்தவற்றை கருத்தில் கொண்டு அவரை விடுவிக்க அணி நிர்வாகம் ஒப்புக்கொண்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
News November 16, 2025
பிரபல நடிகை காலமானார்

பிரபல பெங்காலி நடிகையான பத்ரா பாசு (65) கொல்கத்தாவில் காலமானார். கடந்த சில நாள்களாகவே உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவர் பிரபல நாடக இயக்குநரும் நடிகருமான அசித் பாசுவின் மனைவியாவார். வங்கா நாடகம் மற்றும் சினிமா இரண்டிலும் கொடிகட்டி பறந்தவர். அவரது மறைவிற்கு ரசிகர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News November 16, 2025
இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு GOOD NEWS!

USA-வில் விலைவாசி உயர்வு முக்கிய பிரச்னையாக மாறிய நிலையில், அதிபர் டிரம்ப், பழங்கள், தேயிலை, உள்ளிட்ட பல உணவு பொருள்களுக்கான இறக்குமதி வரிகளை குறைத்துள்ளார். இது, இந்திய மாம்பழங்கள், மாதுளைகள், தேயிலை, மசாலா பொருள்களின் ஏற்றுமதிக்கு உதவும். இந்திய பொருள்களுக்கு 50% வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வரி குறைப்பால் இந்திய உணவு பொருள்களின் விலைகள் USA-வில் குறைய வாய்ப்புள்ளது.


