News November 18, 2024
கடலூரில் 501 மனுக்கள் பெற்ற ஆட்சியர்

கடலூரில் இன்று பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 501 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்தனர். அந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News March 12, 2026
கடலூர்: பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்

குறிஞ்சிப்பாடி அடுத்த புலியூர் காட்டு சாகையை சேர்ந்தவர் ராஜ்குமார்(30). இவர் தனது மனைவியின் அக்காள் வீட்டுக்கு சென்றிருந்த போது, அங்குள்ள குளியல் அறையில் தனது செல்போனை வைத்துள்ளார். பின்னர் தனது மனைவியின் அக்காள் குளிப்பதை அதில் வீடியோ பதிவு செய்துள்ளார். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் ராஜ்குமார் மீது நேற்று வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News March 12, 2026
கடலூர்: ரயில் மோதி முதியவர் பலி

விருத்தாசலம் அருகில் சென்னையில் இருந்து நேற்று இரவு ராமேஸ்வரம் நோக்கி சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரயில் சென்றபோது, தண்டவாளத்தை கடக்க முயன்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது மோதியது. இந்த விபத்தில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 12, 2026
கடலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 11) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


