News August 13, 2024
சுய உதவி குழுக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், நெல்லை மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கிராமப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. சுய உதவிக் குழு உறுப்பினர்கள் நடத்தும் பசுமை நிறுவனங்கள் தொழில் முனைவோர் கண்காணிப்பு இணையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். விவரங்களுக்கு உதவி திட்ட அலுவலரை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 4, 2026
திருநெல்வேலி: கம்மி விலையில் சொந்த வீடு – APPLY!

திருநெல்வேலி மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்கு க்ளிக் செய்து பெயர், மொபைல் எண், சான்றிதழ்கள், ஆண்டு வருமானம் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News March 4, 2026
திருநெல்வேலி வரும் தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மார்ச் இரண்டாவது வாரத்தில் நெல்லையில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சையில் இன்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் அடுத்த நிகழ்ச்சியை மார்ச் இரண்டாவது வாரத்தில் நெல்லையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தவெக வினர் தெரிவித்துள்ளனர்.
News March 4, 2026
நாங்குநேரி சம்பவம்; பொதுமக்கள் ஏன் உதவவில்லை? – விளக்கம்

நாங்குநேரியில் சாலையில் செல்பவர்களை அரிவாளால் வெட்டி கொடூர தாண்டவம் ஆடிய கும்பல் பைக்குகளில் மஞ்சங்குளத்திற்கு சென்றனர். அங்கு ஒருவரின் பெயரை(அவரது சமூகத்துடன்) சத்தமாக கூறி வாழ்க கோசமிட்டனர். அப்போது பைக்கில் இருந்து ஒருவர் கீழே விழுந்தார். அவரை தூக்கி விட முயன்ற அப்பகுதி மக்களை அரிவாளால் வெட்ட முயற்சித்தனர். இதனால் உதவிக்கு வந்தவர்களும் ஓட்டம் பிடித்தனர் என அப்பகுதியினர் கூறுகின்றனர்.


