News June 27, 2024

தேவாலய நிர்வாகிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்

image

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், சொந்தக் கட்டடங்களில் இயங்கும் தேவாலயங்களை புனரமைக்க நிதி உதவி வழங்கப்பட உள்ளது. இது தொடர்பான விவரங்களை கலெக்டர் அலுவலக 3வது தளத்தில் உள்ள சிறுபான்மையினர் நல அலுவலகத்தை சம்பந்தப்பட்ட தேவாலய நிர்வாகிகள் அணுகி விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

Similar News

News November 7, 2025

இன்று இரவு காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (நவ.6) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுபவர்கள் இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

News November 7, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [நவ.6] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் செந்தாமரை கண்ணன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News November 6, 2025

நெல்லை: ம.சு பல்கலையில் வினாத்தாள் மாறியதால் குழப்பம்

image

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 60 மையங்களில் இன்று பி.காம் 3ம் ஆண்டு மேனேஜ்மென்ட் அக்கவுண்ட் அரியர் தேர்வு நடைபெற்றது. இந்த வினாத்தாளுக்கு பதில் ரீடைல் மேனேஜ்மென்ட் என்ற வினாத்தாள் தவறுதலாக மாற்றி வழங்கப்பட்டது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக சரியான வினாத்தாள் வழங்கப்பட்டு கூடுதல் அவகாசம் வழங்கி தேர்வு நடத்தப்பட்டது.

error: Content is protected !!