News August 8, 2024
தமிழகத்தில் மட்டும் ₹4,221 கோடி வசூல்: நிதின் கட்கரி

சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தில் மாநில அரசுகளுக்கு பங்கு தரப்படுவதில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் பேசிய அவர், “2023-24இல் இந்திய அளவில் ₹55,844 கோடி (தமிழகத்தில் மட்டும் ₹4,221 கோடி) சுங்கச் சாவடிகள் மூலம் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இந்தப் பணம் மீண்டும் இந்திய ஒருங்கிணைந்த நிதிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 22, 2025
உதயநிதியால் முதல்வராக முடியாது: அமித்ஷா

CM ஸ்டாலினின் ஒரே லட்சியம் உதயநிதியை முதல்வராக்குவதுதான், ஆனால் ஒருநாளும் உதயநிதியை முதல்வராக்க முடியாது என அமித்ஷா விமர்சித்துள்ளார். நாட்டின் மிகப்பெரிய ஊழல் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுவரும் திமுக ஆட்சிதான் எனக் குறிப்பிட்ட அவர், டாஸ்மாக் ஊழல், போக்குவரத்து ஊழல் என குற்றச்சாட்டுகளை அடுக்கினார். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் எனவும் அமித்ஷா கூறினார்.
News August 22, 2025
மகளிர் உலகக் கோப்பை: பெங்களூரு போட்டிகள் மாற்றம்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பரில் தொடங்குகிறது. இதில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த போட்டிகள் நவி மும்பையின் DY படில் ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இதன்படி 3 லீக், அரையிறுதி & இறுதிப் போட்டிகள் இங்கு நடைபெறுகின்றன. முன்னதாக, RCB வெற்றிப் பேரணியின்போது 11 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து கர்நாடக பேரவையில் கூட்ட கட்டுப்பாடு மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
News August 22, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு புதிய தகவல்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்கிய (ஜூலை 15) முதல் வாரத்தில் விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்து ஆகஸ்ட் 28-ம் தேதி விவரங்கள் வெளியாகும் என அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், புதிதாக திட்டத்தில் இணைபவர்களுக்கு பணம் வரவு வைப்பது தொடர்பான அறிவிப்பை செப். 15-ல் அரசு வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.