News August 8, 2024

தமிழகத்தில் மட்டும் ₹4,221 கோடி வசூல்: நிதின் கட்கரி

image

சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தில் மாநில அரசுகளுக்கு பங்கு தரப்படுவதில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் பேசிய அவர், “2023-24இல் இந்திய அளவில் ₹55,844 கோடி (தமிழகத்தில் மட்டும் ₹4,221 கோடி) சுங்கச் சாவடிகள் மூலம் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இந்தப் பணம் மீண்டும் இந்திய ஒருங்கிணைந்த நிதிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 13, 2025

₹1,000 மகளிர் உரிமை தொகை.. வந்தது மகிழ்ச்சி செய்தி

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட 11 லட்சம் பேருக்கு அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார். மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பளிப்பது குறித்து CM ஸ்டாலின் முடிவெடுப்பார் என அவர் உறுதியளித்துள்ளார். மேலும், நிராகரிக்கப்பட்டவர்கள் RDO-க்களிடம் மேல்முறையீடு செய்வது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிப்பர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News December 13, 2025

தனுஷுக்கு பிறகு ஸ்ரேயஸ்? மனம் திறந்த மிருணாள்

image

தனுஷுடன் கிசுகிசுக்கப்பட்ட மிருணாள் தாகூர், சமீபகாலமாக கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸுடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய அவர், ஆரம்பத்தில் இதுபோன்ற விமர்சனங்கள் தனக்கு கடினமாக இருந்தது, ஆனால் தற்போது ‘இவ்வளவு தானே’ என்ற மனநிலைக்கு வந்துவிட்டதாக கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். எந்த விமர்சனமும் என்னை பாதிக்காது என்றும் மிருணாள் கூறியுள்ளார்.

News December 13, 2025

கல்வி உதவித் தொகை.. டிச.15-ம் தேதியே கடைசி!

image

திறன் படிப்பு உதவித் தொகை திட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்கள் டிச.15-க்குள் (திங்கள்கிழமை) <>www.dge.tn.gov.in<<>> இணையதளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்யுமாறு அரசு தெரிவித்துள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து டிச.20-க்குள் பள்ளி HM-களிடம் சமர்பிக்க வேண்டும். ஜனவரி 10-ம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது. இதில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்க உள்ளது. SHARE IT.

error: Content is protected !!