News April 14, 2024

நோயாளிகளின் தகவல்களை சேகரிப்பது ஆபத்து

image

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் நோயாளிகளின் அனைத்து தகவல்களும் சேகரிக்கப்படுவது ஆபத்தானது என இந்திய மருத்துவ சங்கம் (IMA) தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த புதிய நடவடிக்கை தனி மனித உரிமைக்கு எதிரானது என குற்றம்சாட்டிய IMA, இதன் மூலம் நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்கள், தனியார் காப்பீடு நிறுவனங்கள் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் கைகளுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

Similar News

News August 18, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 431 ▶குறள்: செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. ▶ பொருள்: இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.

News August 18, 2025

பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்கிறார் திருமா: எல்.முருகன்

image

பட்டியலின மக்களுக்கு திருமாவளவன் துரோகம் செய்கிறார் என எல்.முருகன் விமர்சித்துள்ளார். கூட்டணியில் இருந்து M.P, MLA ஆக வேண்டும் என்பதற்காக பட்டியலின மக்கள் எப்படி போனால் தனக்கு என்ன என்ற எண்ணத்தில் திருமாவளவன் இருப்பதாக கூறினார். கடந்த 5 ஆண்டுகளாக பட்டியலின மக்களின் பிரச்சனைகள் பற்றி அவர் வாயே திறக்கவில்லை என்றும், மாறி மாறி பேசி வருவதால் அவர் நிலையாக இல்லை என்பதை காட்டுவதாகவும் தெரிவித்தார்.

News August 18, 2025

ஆங்கிலேயர்களிடம் காட்டிக் கொடுத்தவர்கள் RSS: கார்கே

image

சுதந்திர போராட்ட வீரர்கள் PM மோடியின் பேச்சைக் கேட்டால் வெகுண்டு எழுந்துவிடுவார்கள் என மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்டத்தில் RSS-க்கு பங்கு உண்டு என மோடி சுதந்திர தின உரையில் பேசியிருந்தார். இதுபற்றி பேசிய கார்கே, சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த தகவல்களை ஆங்கிலேயர்களுக்கு அளித்தவர்கள் RSS என்றும், அவர்களில் சிலர் ஆங்கிலேயர்களிடம் கருணை மனு அளித்ததாகவும் தெரிவித்தார்.

error: Content is protected !!