News April 18, 2025

விஜயநகர பேரரசு கால நாணயம் கண்டெடுப்பு

image

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பழங்கால நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நாணயம் விஜயநகர பேரரசின் மன்னரான 2ம் தேவராயர் காலத்தை சேர்ந்தது என தெரியவந்துள்ளது. நாணயத்தின் முன் பகுதியில் யானை ஓடுவது போலவும், மேல் பகுதியில் கன்னட எழுத்தில் ‘ல’ என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. பின் பக்கத்தில் ‘கன தனய காரு’ என கன்னடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 27, 2025

சப்போட்டா பழத்தின் நன்மைகள் தெரியுமா?

image

இயற்கையாகவே இனிப்புமிக்க பழங்களில் ஒன்று சப்போட்டா. நார்ச்சத்து, வைட்டமின்கள், கால்சியம் என பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கொண்ட இதில் பல நன்மைகள் உள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். குறிப்பாக *செரிமானத்திற்கு உதவுகிறது *உடனடி ஆற்றலை வழங்கும் *பார்வை மற்றும் சருமத்தை மேம்படுத்துகிறது *எலும்புகள் வலுவாகும் *இரைப்பை, குடலுக்கு நல்லது *ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

News November 27, 2025

இந்த நாடுகளிலும் UPI வேலை செய்யுமே.. தெரியுமா?

image

இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் UPI-க்கு பெரும் பங்கு உள்ளது. UPI மூலம் பணம் செலுத்துதல், இப்போது இந்தியா மட்டுமில்லாமல் வேறு சில நாடுகளிலும் உள்ளது உங்களுக்கு தெரியுமா? இந்த நாடுகளுக்கு, இந்தியர்கள் சென்றால், அவர்கள் எளிதாக UPI மூலம் பணப்பரிவர்த்தனை செய்யலாம். அவை எந்தெந்த நாடுகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News November 27, 2025

TN-ல் உயிருக்கு உத்தரவாதம் இல்லை: அன்புமணி

image

தஞ்சையில் ஆசிரியர் கொலை செய்யப்பட்டதை கண்டித்துள்ள அன்புமணி, தமிழகத்தில் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் படுகொலை செய்யப்படலாம் என்ற நிலை தொடர்வதாக தெரிவித்துள்ளார். TN-ல் ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 படுகொலைகள் நடப்பதாக கூறிய அவர், யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்று குற்றஞ்சாட்டினார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க CM நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!