News April 18, 2025

விஜயநகர பேரரசு கால நாணயம் கண்டெடுப்பு

image

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பழங்கால நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நாணயம் விஜயநகர பேரரசின் மன்னரான 2ம் தேவராயர் காலத்தை சேர்ந்தது என தெரியவந்துள்ளது. நாணயத்தின் முன் பகுதியில் யானை ஓடுவது போலவும், மேல் பகுதியில் கன்னட எழுத்தில் ‘ல’ என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. பின் பக்கத்தில் ‘கன தனய காரு’ என கன்னடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 27, 2025

வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த திட்டமா?

image

USA வெள்ளை மாளிகை அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், 2 பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயமடைந்தனர். இருவரும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், இது திட்டமிடப்பட்ட தாக்குதல் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக ஆப்கன் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த திட்டமா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், வாஷிங்டனில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

News November 27, 2025

பாமகவில் சமரசம் செய்கிறாரா செல்வப்பெருந்தகை?

image

அன்புமணியும், ராமதாஸும் இணைந்து செயல்பட்டால் நல்லதுதான். ஆனால் அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியை எடுக்கவில்லை என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு மேலாக ராமதாஸ் தனக்கு பரிச்சயமானவர் என்ற அவர், அதனால்தான் ஹாஸ்பிடலில் இருந்தபோது அவரை சந்தித்ததாகவும் விளக்கமளித்துள்ளார். மேலும், இதில் எந்த அரசியல் கலப்பும் இல்லை எனவும் சமரச தூதுவராக செயல்பட அவசியமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

News November 27, 2025

நடிகர் ஜெயராம் கைது செய்யப்படுகிறாரா?

image

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் <<18367317>>ஜெயராம்<<>> முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், டிசம்பரில் நடைபெறும் கேரள உள்ளாட்சி தேர்தலுக்கு பின் அவரிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, துவார பாலகர் சிலைகள், சபரிமலை கோயில் கதவு நிலைகளை வீட்டில் வைத்து பூஜை நடத்த ஏற்பாடு செய்த விவகாரத்தில் ஜெயராமை கைது செய்ய, SIT முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!