News April 18, 2025
விஜயநகர பேரரசு கால நாணயம் கண்டெடுப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பழங்கால நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நாணயம் விஜயநகர பேரரசின் மன்னரான 2ம் தேவராயர் காலத்தை சேர்ந்தது என தெரியவந்துள்ளது. நாணயத்தின் முன் பகுதியில் யானை ஓடுவது போலவும், மேல் பகுதியில் கன்னட எழுத்தில் ‘ல’ என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. பின் பக்கத்தில் ‘கன தனய காரு’ என கன்னடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 15, 2025
இளமையாக தெரியணுமா.. இந்த பழக்கங்களை மாத்திக்கோங்க!

யாருக்குத் தான் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்காது. ஆனால், இளம் வயதிலேயே வயதுக்கு மீறிய முதுமை தோற்றத்தில் தெரிவார்கள். இதற்கு அவர்களின் வாழ்க்கை முறையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. படத்தில் இருக்கும் பழக்கங்கள் உங்களுக்கு இருக்கா? உடனே இந்த பழக்கங்களை கைவிட்டுவிட்டு ஒரு ஹெல்தியான லைஃப் ஸ்டைலுக்கு மாறுங்கள். அதுவே உங்களை இளமையாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். SHARE IT
News December 15, 2025
சற்றுமுன்: பொங்கலுக்கு ₹5000.. வெளியான முக்கிய தகவல்

பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக கூறப்படும் நிலையில், CM ஸ்டாலின் சொன்னதுபோல் மகளிர் உரிமைத் தொகையும் உயர்த்தப்படலாம் என தெரிகிறது. அதன்படி, பொங்கலுக்கு முன்னதாக (12-ம் தேதி) மகளிர் உரிமைத்தொகை வழங்க ஏற்பாடு நடக்கிறது. இந்நிலையில் பொங்கல் தொகுப்புடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹3000, மகளிர் உரிமைத் தொகை ₹2000 என மொத்தம் ₹5000 வழங்கப்படும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
News December 15, 2025
காலையில் Ghee Coffee குடிக்கலாமா?

டயட் உணவுகளில் டிரெண்டிங்கில் இருக்கும் ஒன்று Ghee Coffee. இது உண்மையிலே நல்லதா என கேட்டால், ஆம் என்கின்றனர் டாக்டர்கள். *பால் சேர்க்காமல், சுடு தண்ணீரில் காபி பவுடர், நெய் சேர்த்து குடிக்கும்போது, நீண்ட நேரம் உடலுக்கு ஆற்றலை தருகிறது. *நெய்யில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு மூளைக்கு எரிபொருளாகி மன தெளிவை அதிகரிக்கிறது *குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது *பசியை குறைத்து, எடையை கட்டுப்படுத்துகிறது.


