News April 18, 2025
விஜயநகர பேரரசு கால நாணயம் கண்டெடுப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பழங்கால நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நாணயம் விஜயநகர பேரரசின் மன்னரான 2ம் தேவராயர் காலத்தை சேர்ந்தது என தெரியவந்துள்ளது. நாணயத்தின் முன் பகுதியில் யானை ஓடுவது போலவும், மேல் பகுதியில் கன்னட எழுத்தில் ‘ல’ என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. பின் பக்கத்தில் ‘கன தனய காரு’ என கன்னடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 3, 2025
BREAKING: கொந்தளித்தார் விஜய்

சென்னை உள்ளிட்ட நகரங்களில் மழைநீர் வடிகால் பணிகளை முறையாக செய்யாததால் கொஞ்சமாக பெய்த மழைக்கே மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாக விஜய் விமர்சனம் செய்துள்ளார். மீதமுள்ள காலத்திலாவது மக்கள் சிரமத்திற்கு ஆளாகாதவாறு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெகவினர் களத்திற்கு சென்று உதவி செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.
News December 3, 2025
BREAKING: அமித்ஷாவை சந்தித்தார் ஓபிஎஸ்

டெல்லி விரைந்துள்ள ஓபிஎஸ், சற்றுமுன் அமித்ஷாவை சந்தித்து பேசிவருகிறார். NDA கூட்டணியில் இருந்து விலகிய பிறகு, அமித்ஷாவை ஓபிஎஸ் சந்திப்பது இதுவே முதல்முறை. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவை கட்சியாக பதிவு செய்து, NDA கூட்டணியில் இடம்பெறுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது. இன்னும் சற்றுநேரத்தில் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்புள்ளது.
News December 3, 2025
இன்று ஒரே நாளில் விலை ₹5,000 உயர்ந்தது

இந்திய சந்தையில் வெள்ளி விலை மீண்டும் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இன்று(டிச.3) ஒரே நாளில் கிலோவுக்கு ₹5,000 உயர்ந்துள்ளது. இதனால் 1 கிராம் ₹201-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,01,000-க்கும் விற்பனையாகிறது. தீபாவளி பண்டிகை காலமான அக்டோபரில் கிடுகிடுவென உயர்ந்த வெள்ளி அக்.15 அன்று 1 கிராம் ₹207-ஐ தொட்டது. அதன் பின்னர் சரிந்து வந்த நிலையில், மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது கவனிக்கத்தக்கது.


