News April 18, 2025
விஜயநகர பேரரசு கால நாணயம் கண்டெடுப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பழங்கால நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நாணயம் விஜயநகர பேரரசின் மன்னரான 2ம் தேவராயர் காலத்தை சேர்ந்தது என தெரியவந்துள்ளது. நாணயத்தின் முன் பகுதியில் யானை ஓடுவது போலவும், மேல் பகுதியில் கன்னட எழுத்தில் ‘ல’ என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. பின் பக்கத்தில் ‘கன தனய காரு’ என கன்னடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 14, 2025
இந்த பழக்கங்கள் இருக்கா? உடனே மாத்திக்கோங்க..

யாருக்கு தான் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்காது. ஆனால், இளம் வயதிலேயே சிலர் பயங்கர உடல்நல பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். இதற்கு அவர்களின் வாழ்க்கை முறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. படத்தில் இருக்கும் பழக்கங்கள் உங்களுக்கு இருக்கா? உடனே இந்த பழக்கங்களை கைவிட்டுவிட்டு ஒரு ஹெல்தியான லைஃப் ஸ்டைலுக்கு மாறுங்கள். அதுவே உங்களை இளமையாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். SHARE IT.
News October 14, 2025
BREAKING: தீபாவளி விடுமுறை.. அரசு புதிய அறிவிப்பு

தீபாவளி விடுமுறையையொட்டி சில ஆம்னி <<17980771>>பஸ்களில் கட்டணம் 4 மடங்கு<<>> உயர்ந்துள்ளது. இதனிடையே, ஆம்னி பஸ்களை கண்காணிக்க 13 பேர் கொண்ட குழுவை TN அரசு அறிவித்துள்ளது. போக்குவரத்து அதிகாரிகள் கொண்ட இக்குழு சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், ஓசூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆம்னி பஸ்களின் கட்டணம், ஆவணங்களை அக்.21 வரை கண்காணிக்கும் என அரசு தெரிவித்துள்ளது. இதனால், கட்டணம் உயர்வை தவிர்க்க வாய்ப்புள்ளது.
News October 14, 2025
CM ஸ்டாலின், திருமாவளவன் சந்திப்பு.. பேசியது என்ன?

சட்டப்பேரவை வளாகத்தில் CM ஸ்டாலினை, திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணைக்கு நன்றி தெரிவித்ததாக கூறினார். மேலும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்காக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி நியமனங்கள் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.