News April 18, 2025

விஜயநகர பேரரசு கால நாணயம் கண்டெடுப்பு

image

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பழங்கால நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நாணயம் விஜயநகர பேரரசின் மன்னரான 2ம் தேவராயர் காலத்தை சேர்ந்தது என தெரியவந்துள்ளது. நாணயத்தின் முன் பகுதியில் யானை ஓடுவது போலவும், மேல் பகுதியில் கன்னட எழுத்தில் ‘ல’ என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. பின் பக்கத்தில் ‘கன தனய காரு’ என கன்னடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 5, 2025

10-வது படித்திருந்தாலே போதும், 405 பணியிடங்கள்

image

அணுசக்தித் துறையில் 405 Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு, 10,560 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. கல்வி தகுதி: 10th & ITI Pass செய்திருக்க வேண்டும். 25 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. தேவை இருப்பவர்கள் <>www.apprenticeshipindia.gov.in<<>> -ல் நவம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் இளைஞர்களுக்கு SHARE THIS.

News November 5, 2025

கனமழை வெளுத்து வாங்கும்.. வந்தது அலர்ட்

image

தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. 7 முதல் 11 செ.மீ. வரை கனமழை பெய்யக்கூடும் என்பதால், நவ.5,6,7,8 ஆகிய தேதிகளில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 7 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

News November 5, 2025

ஹரியானாவில் 22 ஓட்டுகள் போட்ட பிரேசில் மாடல்

image

ஹரியானா தேர்தலில் பிரேசிலை சேர்ந்த மாடல், ’சரஸ்வதி, ரஷ்மி, ஸ்வீட்டி’ என 22 பெயர்களில் வாக்கு செலுத்தியிருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது எப்படி நடந்தது என கேள்வி எழுப்பிய அவர், ஆபரேஷன் ஆட்சி திருட்டு என்ற பெயரில் காங்கிரஸின் பிரமாண்ட வெற்றியை தோல்வியாக பாஜக மாற்றியதாக சாடியுள்ளார். மேலும், ஹரியானா சட்டமன்ற தேர்தலில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!