News April 18, 2025
விஜயநகர பேரரசு கால நாணயம் கண்டெடுப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பழங்கால நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நாணயம் விஜயநகர பேரரசின் மன்னரான 2ம் தேவராயர் காலத்தை சேர்ந்தது என தெரியவந்துள்ளது. நாணயத்தின் முன் பகுதியில் யானை ஓடுவது போலவும், மேல் பகுதியில் கன்னட எழுத்தில் ‘ல’ என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. பின் பக்கத்தில் ‘கன தனய காரு’ என கன்னடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 21, 2025
மயிலாடுதுறை: ஆட்சியர் கொடுத்த அப்டேட்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் திரும்பப் பெரும் பணி நடந்து வருகிறது. அனைத்து படிவங்களும் திரும்ப பெறப்பட்டு தேர்தல் ஆணைய செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உரிய முறையில் வரைவு வாக்காளர் பட்டியல் டிச.9-ம் தேதி வெளியிடப்படுகிறது. இதில் கோரிக்கை, மறுப்புகள் பெறப்பட்டு இறுதிவாக்காளர் பட்டியல் 2026 பிப்.7-ம் தேதி வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 21, 2025
3 மாதங்களுக்கு ஸ்ரேயஸ் பேட்டை தொடக்கூடாதாம்

மண்ணீரல் காயம் காரணமாக இந்திய ODI துணை கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், அடுத்த 2 – 3 மாதங்களுக்கு விளையாட வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால், இம்மாத இறுதியில் நடைபெறும் SA-வுக்கு எதிரான ODI தொடர் மற்றும் டிசம்பரில் நடக்கும் NZ-க்கு எதிரான ODI தொடரில் அவர் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
News November 21, 2025
நகைக் கடன் தள்ளுபடியா? தமிழக அரசு திட்டம்

2021-ஐ போலவே 2026 பேரவைத் தேர்தலிலும் கூட்டுறவு நிறுவனங்களில் நகைக் கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. இதனிடையே, 31.03.21 வரை நகைக் கடன் பெற்றிருந்த 11.70 லட்சம் பயனாளிகளுக்கு நிலுவையில் இருந்த ₹6,000 கோடி நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. தற்போது நிலுவையில் உள்ள நகைக் கடன்கள் எவ்வளவு என்ற பட்டியலை வழங்க அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதாம்.


