News July 10, 2025
கோவை தொடர் குண்டுவெடிப்பு: முக்கிய நபர் கைது

கோவையில் 1998-ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய சாதிக் (எ) டெய்லர் ராஜா என்பவரை சத்தீஸ்கரில் தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நிலையில், தீவிர தேடுதலுக்குப் பிறகு பிடிபட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 1998, பிப்ரவரி 14-ல் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்தனர்.
Similar News
News July 10, 2025
மதிமுகவில் மீண்டும் பிளவு?

மதிமுகவை வைகோ ஆரம்பித்தபோது அவருடன் இருந்த மூத்த தலைவர்கள் எல்.கணேசன், செஞ்சி ராமசந்திரன், கண்ணப்பன் உள்ளிட்டோர் மதிமுகவில் இருந்து ஏற்கெனவே வெளியேறி விட்டனர். இதனால் மதிமுகவின் செல்வாக்கு பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மல்லை சத்யா மற்றும் துரை வைகோ இடையே மோதல் நீருபூத்த நெருப்பாக உள்ளது. மல்லை சத்யா வெளியேறினால், மீண்டும் அக்கட்சியில் பிளவு ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது.
News July 10, 2025
நயன்தாராவுக்கு விவாகரத்தா? இன்ஸ்டா போட்டோவில் பதில்

நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி பிரிய வேண்டும் என யாருக்கு ஆசையோ தெரியவில்லை. சமீபத்தில் இந்த விவாகரத்து புரளி காட்டுத்தீயாக சோஷியல் மீடியா தொடங்கி தேசிய ஊடகங்கள் வரை பரவியது. இந்த வதந்திகளுக்கு எல்லாம் ஒன்றை போட்டோவில் நயன் பதில் அளித்துள்ளார். விக்கியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, Our reaction when we see loopy news about us என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
News July 10, 2025
ஸ்டாலின் சமரசம்.. நோட்டீஸை வாபஸ் பெற தயாநிதி முடிவு

கலாநிதிக்கு அனுப்பிய நோட்டீஸை வாபஸ் பெற தயாநிதி மாறன் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல கோடி ரூபாய் சன் டிவி நிறுவன பங்குகளை மோசடி செய்ததாக கூறி, கலாநிதி மாறனுக்கு தயாநிதி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஸ்டாலினின் நெருங்கிய உறவினர்கள் இடையேயான இந்த மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டாலின் ஞாயிறு மாலை இருவரையும் அழைத்துப் பேசி சமரசம் செய்துள்ளார்.