News October 15, 2025

சட்டப்பேரவையில் வெடித்த கூட்டணி சர்ச்சை

image

சட்டப்பேரவையில் கரூர் துயர சம்பவம் தொடர்பாக இபிஎஸ், ஸ்டாலின் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் அரசு மீது இபிஎஸ் சராமரியாக குற்றஞ்சாட்டினார். அப்போது குறுக்கிட்ட ஸ்டாலின், கூட்டணிக்கு ஆள் தேடுகிறீர்கள், இதில் அரசியல் செய்ய வேண்டம் என விமர்சித்தார். உடனே இபிஎஸ், கூட்டணிக்காகவா பேசுகிறோம்; மக்கள் உயிரிழந்துள்ளனர்; அதற்காக பேசுகிறோம் என்று பதிலடி கொடுத்தார்.

Similar News

News October 15, 2025

சற்றுமுன்: இபிஎஸ் அணியில் இணைந்த செங்கோட்டையன்

image

ஒருங்கிணைப்பு விவகாரத்தில், EPS மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் மீண்டும் அவரது அணியில் இணைந்துள்ளார். பேரவையில், EPS-ன் உத்தரவின்பேரில், கரூர் துயரத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ADMK MLA-க்கள் கருப்பு பட்டையுடன் வந்திருந்தனர். Ex அமைச்சர் செங்கோட்டையனும் கையில் கருப்பு பட்டையுடன்(OPS அணியவில்லை) வந்திருந்தார். அத்துடன், அவர் Ex அமைச்சர்கள் சிலரிடம் மரியாதை நிமித்தமாக பேசியுள்ளார்.

News October 15, 2025

SC-ன் கருத்து வேதனைக்குரியது: ஸ்டாலின்

image

கரூர் வழக்கில் CBI விசாரிக்கவுள்ளதை கண்காணிக்கும் குழுவில் தமிழக IPS அதிகாரிகள் இடம்பெறக் கூடாது என SC உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த கருத்து தமிழக மக்களுக்கே வேதனைக்குரிய ஒன்றாக உள்ளதாக CM ஸ்டாலின் கூறினார். இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய அவர், இதுகுறித்து உரிய சட்ட ஆலோசனை பெற்று நிச்சயமாக SC-ஐ அணுகுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

News October 15, 2025

டிகிரி இருந்தால் போதும்; அரசு வங்கியில் வேலைவாய்ப்பு!

image

இந்திய அஞ்சல் வங்கியில் 348 Executive பணியிடங்கள் காலியாக உள்ளன. இளங்கலை பட்டம் பெற்ற 35 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ₹30,000 வரை சம்பளமாக வழங்கப்படுகிறது. அக்.29-ம் தேதிக்குள் <>www.ippbonline.com<<>> இணையதளம் மூலம் விண்ணப்பியுங்கள். விண்ணப்ப கட்டணமாக ₹750 பெறப்படுகிறது. வேலை தேடுவோருக்கு இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!