News October 27, 2025
CM விஜய்.. திருமாவளவனே சொல்லிட்டாரு!

CM விஜய் என்று நான் சொன்னால், அது வேறு பொருளாகிவிடும், திருமாவளவனே சொல்லிட்டாரு என்று பேசுவார்கள் என திருமா கூறியுள்ளார். ‘ஆறு அறிவு’ பட இயக்குநரின் பெயரை குறிப்பிட்டு இவ்வாறு அவர் பேசினார். இந்த பெயரை எதற்கு வைத்தீர்கள் என இயக்குநரிடம் கேட்டதற்கு, ஊர் & தந்தையின் பெயர் காரணமாக வைத்தேன் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனாலும், இது அரசியல் கணக்கா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Similar News
News October 27, 2025
BREAKING: கூட்டணியை உறுதி செய்தார் CM ஸ்டாலின்

நாட்டின் வளர்ச்சிக்காக திமுகவும், காங்கிரஸும் ஒரே அணியில் பயணிக்கும் என CM ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில், காங்., நிர்வாகி ஸ்ரீராஜா சொக்கர் இல்ல திருமண விழாவில் பேசிய அவர், தன்னை மூத்த அண்ணனாக ராகுல் காந்தி ஏற்று கொண்டு இந்தியாவின் குரலாக ஒலிப்பதாக தெரிவித்தார். ஆட்சியில் பங்கு, கூடுதல் சீட்டு என திமுக, காங்., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக பேசப்பட நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
News October 27, 2025
‘சார்பட்டா பரம்பரை 2’: அப்டேட் கொடுத்த ஆர்யா!

பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் உருவாகி OTT-யில் நேரடியாக வெளியான ‘சார்பட்டா பரம்பரை’, ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து 2-ம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகி, பணிகள் தொடங்காமலேயே இருந்தது. ஆர்யா, பா.ரஞ்சித் ‘வேட்டுவம்’ படத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த படம் முடிந்ததும், ‘சார்பட்டா பரம்பரை 2’-க்கான பணிகள் தொடங்கும் என நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.
News October 27, 2025
TN அரசிடம் திருமா வைத்த கோரிக்கை

ஆசிய கபடி போட்டியில் தங்கம் வென்றதால் தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற கார்த்திகாவுக்கும், அபினேஷுக்கும் தலா ₹25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஆனால், குகேஷுக்கு ₹5 கோடி, கார்த்திகாவுக்கு ₹25 லட்சம் தானா என திமுக அரசை எதிர்நோக்கி கேள்விகள் வைக்கப்பட்டன. இந்நிலையில், அவர்களுக்கான ஊக்கத்தொகையை ₹1 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என விசிக சார்பில் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.


