News November 20, 2024
ஆசிரியை ரமணிக்கு CM ஸ்டாலின் இரங்கல்

தஞ்சையில் பள்ளியில் ஆசிரியை ரமணி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்ததை அறிந்து வேதனை அடைந்ததாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குற்றவாளிக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத் தரப்படும் என்று உறுதியளித்த அவர், ஆசிரியையின் குடும்பத்தினருக்கு ₹5 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். அவரது இறப்பு பள்ளிக்கல்வித்துறைக்கும், சக ஆசிரியர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 8, 2025
திண்டுக்கல்லில் வசமாக சிக்கிய கொள்ளையன்!

ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயத்தில், கடந்த மாதம் 23ஆம் தேதி, கருப்புச்சாமி என்பவரின் வீட்டில் முகமூடி அணிந்த மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி, 18 பவுன் நகை மற்றும் ரூ.38,000 ரொக்கத்தைக் கொள்ளையடித்தது.இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட கள்ளிமந்தயம் போலீசார்,கொள்ளையர்களில் ஒருவரான கேரள மாநிலத்தைச் சேர்ந்த இம்ரான்கான் கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர்.
News December 8, 2025
Sports Roundup: F1 உலக சாம்பியன் ஆனார் நோரிஸ்

*அகமதாபாத்தில் நடந்த பெண்களுக்கான டி20 டிராபி காலிறுதியில் கர்நாடகாவிடம் தமிழகம் தோற்றது. *மேஜர் லீக் கால்பந்து 30-வது சீசனில், இண்டர் மயாமி முதல்முறையாக கோப்பையை வென்றது. *F1 கார்பந்தயத்தின் சிறந்த டிரைவருக்கான உலக சாம்பியன் பட்டத்தை இங்கிலாந்தின் லாண்டோ நோரிஸ் கைப்பற்றினார். *கர்நாடகா கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் EX இந்திய பவுலர் வெங்கடேஷ் பிரசாத் வெற்றி.
News December 8, 2025
சிவன், விநாயகருக்கு உரிய நாள்: இன்று இப்படி வழிபட்டால்..

இன்று சிவனுக்கு உரிய திங்கள்கிழமையும், விநாயகருக்கு உரிய சதுர்த்தியும் ஒரே நாளில் வருவது அபூர்வமான ‘சோம சங்கடஹர சதுர்த்தி’ ஆகும்.. இன்று மாலை 6 மணிக்கு மேல் விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபடுங்கள். சந்திர தரிசனம் செய்து, ‘ஓம் விக்ன ராஜாய நமஹ’ என்ற ஸ்லோகத்தை 108 முறை உச்சரியுங்கள். வாழ்வில் தீராத சங்கடங்கள், தடைகள் அனைத்தும் நீங்கும். முழு நம்பிக்கையுடன் செய்யுங்கள், நல்லதே நடக்கும்!


