News October 2, 2025
‘கரூர் துயரத்திற்கு CM ஸ்டாலின் தான் காரணம்’

கரூர் துயர சம்பவத்திற்கு CM ஸ்டாலின் தான் காரணம் என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். தான் 163 தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டுள்ளதாகவும், அதில் 5 மாவட்டங்களில்தான் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணை ஆணையம் அமைத்த பிறகு அதிகாரிகள் விளக்கம் அளித்தது ஏன் என கேள்வி எழுப்பிய EPS, இனியாவது பொதுக்கூட்டங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
Similar News
News October 2, 2025
காந்தி பிறந்தநாளில் உயிரை விட்ட காந்தியவாதி..!

சுதந்திர போராட்ட வீரரும், மூத்த காந்தியவாதியுமான டாக்டர் குன்வந்தராய் கண்பத்லால் பரிக்(101) காலமானார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் (1942) தீவிரமாக ஈடுபட்டு சிறை தண்டனை அனுபவித்த இவர், சுதந்திரத்துக்கு பின்பும் கோவா விடுதலை, நெருக்கடி நிலை போராட்டங்களில் ஈடுபட்டார். இவர் 1951 முதல் அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்துள்ளார். காந்தியவாதியான இவர் காந்தியின் பிறந்தநாளான இன்று காலமானார். ஜெய் ஹிந்த்!
News October 2, 2025
குழந்தைகளை இப்படி திருத்துங்க!

உங்கள் குழந்தைகள் செய்யும் தவறுகளை எப்படி திருத்துவது என தெரியவில்லையா? திட்டவோ, அடிக்கவோ செய்யாதீங்க, தப்பை ஒருபோதும் அவர்கள் திருத்திக்கொள்ள மாட்டார்கள். மாறாக, இந்த 3 எளிய வழிகளை நீங்கள் செய்து பார்க்கலாம். ➤எந்த மாதிரியான சூழலில் தவறு செய்கிறார்கள் என கவனித்து, அதை பொறுமையாக எடுத்துரையுங்கள். ➤எப்படி சரி செய்யலாம் என சொல்லி கொடுங்கள் ➤தவறை திருத்திக் கொண்டால் பாராட்டுங்கள். SHARE.
News October 2, 2025
டானிக் குடித்த குழந்தைகள் பலி: அதிர்ச்சி தகவல்

ராஜஸ்தான் அரசால் வழங்கப்பட்ட <<17890074>>இருமல் டானிக்கை<<>> குடித்த குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த Kaysons டானிக்கானது, இதற்கு முன் 40 முறை தர சோதனையில் தோல்வியடைந்ததும், பலமுறை கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இருப்பினும், அதை அரசு கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கியுள்ளது. இதனால், அரசு வழங்கும் மருந்துகள் குறித்து கவலை எழுந்துள்ளது.