News March 18, 2025

ஜல்லிக்கட்டு வீரர் உயிரிழப்பு: CM ஸ்டாலின் இரங்கல்

image

மதுரை மாவட்டம் கீழக்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டில் உட்கரை கச்சிராயிருப்பை சேர்ந்த மகேஸ்பாண்டி உயிரிழந்ததை கேள்விப்பட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்ததாக அவர் கூறியுள்ளார். அவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News March 19, 2025

இருமுடி இல்லாமல் சபரிமலை செல்ல கட்டுப்பாடு

image

இருமுடி கட்டு இல்லாமல் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு புதிதாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இருமுடி கட்டு இல்லாத பக்தர்கள், காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது. இதன்மூலம் இருமுடி கட்டுடன் வரும் பக்தர்கள் கூடுதல் நேரம் சாமி தரிசனம் செய்ய வசதியாக இருக்கும் என தேவசம்போர்டு விளக்கமளித்துள்ளது.

News March 19, 2025

ஒரே மரம்.. ஏராளமான பயன்கள்!

image

*முருங்கைக் காய் – உடலுக்கு வலிமை தரும் சத்தான காய்.
*முருங்கை இலை மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால் கை, கால், மூட்டு வலிகள் நீங்கும்.
*முருங்கைப் பட்டையில் உலோகச் சத்து நிறைந்துள்ளதால் நரம்புக் கோளாறுகளை சரிசெய்யும்.
*முருங்கை விதை கூட்டு மூளைக்கு பலம் தரும்.
*முருங்கைப் பூ ரத்தத்தை சுத்தம் செய்யும். எலும்புகளை வலுவாக்கும்.

News March 19, 2025

மீண்டும் ஒன்று சேர்ந்த அதிமுக.. கழ(ல)கத்தில் மாறிய காட்சிகள்!

image

2 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று EPS, OPS கார்கள் அருகருகே நிறுத்தப்பட்டிருந்தன. அதோடு, பேரவைக்குள் செங்கோட்டையன் பேச வாய்ப்பளிக்க கோரி சபாநாயகருக்கு இபிஎஸ் சைகை காண்பித்தது, பேரவை உணவகத்தில் அதிமுக MLAக்களுடன் அமர்ந்து செங்கோட்டையன் உணவருந்தியது என உள்கட்சி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!