News February 23, 2025
TN முழுவதும் நாளை முதல்வர் மருந்தகங்கள் திறப்பு

TNல் 1000 முதல்வர் மருந்தகத்தை நாளை CM ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். அதிகபட்சமாக மதுரையில் 52 மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளது. கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 மருந்தகங்கள் அமையவுள்ளன. PMன் மக்கள் மருந்தகம் உள்ளிட்ட எந்த மருந்தகங்களிலும் இல்லாத வகையில், குறைவான விலையில் மருந்துகள் வழங்கப்படும் எனவும், மக்களின் பொருளாதார சுமையை குறைக்க இது உதவியாக இருக்கும் என்றும் TN அரசு தெரிவித்துள்ளது.
Similar News
News February 24, 2025
திருமணத்தை மீறிய உறவில் இத்தனை வகைகளா!

திருமணத்தை மீறிய உறவுகளை, அவற்றுக்கான காரணங்களின் அடிப்படையில் 8 வகைகளாக பிரித்துள்ளனர்: 1)எமோஷனல் உறவு (உடல் நாட்டமில்லாதது) 2)இன்னொருவர் மீது காதல் கொள்வது 3)ஒருநாள் உறவு 4)தவறான நபரை மணந்து கொண்டோம் என்று நினைத்து வேறொருவர் மீது ஏற்படும் தீவிரக் காதல் 5) செக்ஸுக்கு அடிமையாவதால் ஏற்படும் உறவுகள் 6)பழிவாங்க இன்னொரு உறவை நாடுவது 7)ஆன்லைன் காதல் 8)ஒரு உறவிலிருந்து வெளியேற இன்னொரு உறவை நாடுவது.
News February 24, 2025
ஜெ., பிறந்தநாளுக்கு அரசு சார்பில் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் அவரின் உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. மெரினாவில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்கவிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, ஜெ., பிறந்தநாளில் ஆடம்பர விழாக்களைத் தவிர்த்து, ஏழை மக்களுக்கு உதவிச் செய்ய நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
News February 24, 2025
விவாகரத்து வேண்டுமா..! இந்த கோயிலுக்கு கிளம்புங்க

நம் ஊரில் கல்யாணம் ஆவதற்காக கோயிலுக்கு செல்வார்கள். ஆனால், ஜப்பானியர்கள் விவாகரத்து பெற்றுக்கொள்ள ஒரு கோயிலுக்கு சென்று வேண்டுகிறார்கள். அந்நாட்டின் கியோட்டோ என்ற இடத்தில் உள்ள ‘யாசுய் கொன்பிரகு’ கோயிலுக்கு சென்று ஜபித்தால் போதும் உடனே விவாகரத்து தான் என அங்குள்ள மக்கள் நம்புகிறார்கள். எவ்வளவு பெரிய பஞ்சாயத்தாக இருந்தாலும், சுமூகமாக mutual divorce கிடைக்குமாம். இப்படியும் சில நம்பிக்கைகள்.